Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Friday, March 31, 2017








 AUG’1944 நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஜெர்மன் கட்டுபாட்டில் உள்ள பாரிஸ் நகரமே கதைக்களம்.  ஜெர்மானியரின் கட்டுப்பாடு மெல்ல தளர்ந்து சுதந்திர பாரிஸ் உதயத்திற்கு வெகு சில நாட்களே மீதம் உள்ள நிலையில் நடைபெறும் சம்பவங்களே இப்படம்.

உலக பிரசித்தி பெற்ற பாரிசின் பொக்கிஷங்களாக கருதப்படும் அவர்களின் விலைமதிப்பற்ற ஓவியங்களை ஜெர்மானிய ராணுவ உயர் அதிகாரி பாரிசிலிருந்து ரயில் மூலம் ஜெர்மன் கொண்டு செல்ல முயற்சிக்கறார். இன்னும் சில நாட்களில் சுதந்திர பாரிஸ் உதயமான பின் ஓவியங்கள் கொண்டு செல்ல சாத்தியம் இல்லாதபடியால், உடனடியாக எடுத்து செல்ல முயல்கிறார். இதை அறிந்து கொண்டு அவரது முயற்சியை முறியடித்து, அந்த ஓவியங்களை காப்பாற்றும் முயற்சியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பாரிஸ் ரயில்வே துறையினர் ஜெர்மானிய ராணுவத்தினரால் கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு 1964 ல் ஆங்கிலம் மற்றும் ஜெர்மானிய மொழிகளில் வெளிவந்தது இப்படம்.


அந்த காலகட்டத்தில் வெளிவந்து இன்றும் நான் சிலாகித்து கூறும் FIVE MAN ARMY (1969) மற்றும் GUNS OF NAVARONE (1961) படங்களை விட பிரமாண்ட உருவாக்கலும், ACTION காட்சிகளும் இன்றும் காண்போரை ஆச்சர்யபடுத்தும். அதற்க்கு மிக முக்கியகாரணி நமக்கு இன்றும் ஆச்சர்யமாக விளங்கும் ரயிலை கதை முழுக்க பயன்படுத்திய விதம். இன்றும் ரயில் சம்பந்தப்பட்ட கதைகளில் காட்டப்படாத பல விஷயங்கள் என்ஜின் பழுதுபார்க்கும் கேரேஜ், ஒவ்வொரு ஸ்டேசனிலும் ஸ்டேசன் மாஸ்டர், TRACKMAN, கேட் கீப்பர் உட்பட அனைவரின் வேலை முறையை மிக துல்லியமாக பதிவு செய்த வகையில் இது மிக முக்கிய சினிமா.


பழுதடைந்த என்ஜின் ராணுவ அதிகாரியின் உத்தரவுக்கு பயந்து பிரித்து பழுது பார்க்கும் ரயில்வே துறையின் கேரேஜ் இதற்க்கு முன் சினிமாவில் பார்த்ததாக நினைவில்லை. சரிசெய்த என்ஜினை குறிப்பிட்ட காலகெடுவுக்குள் ரயில் நிலையம் கொண்டுவரும் வழியில் இங்கிலாந்தின் போர் விமானம் தாக்குதல் நடத்தும் காட்சி(யில் மரங்களடர்ந்த காட்டு பகுதியில் விமானத்திலிருந்து ரயில்வே ட்ராக்கை காட்டும் ஒரு ஷாட் “மெக்கனஸ் கோல்ட்” படத்தில் முதல் ஷாட் தரும் சிலிர்ப்பிற்கு ஒப்பானது) மேலும் அந்த ரயிலை தாமதப்படுத்த இரண்டு என்ஜின்களை மோதவிட்டு ட்ராக்கை சேதப்படுத்த எடுக்கும் முயற்சிகள் என பெரும்பாலான காட்சிகள் நிச்சயம் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும்.


அந்த கால திரைப்படங்கள் பெரும்பாலானவை தற்போது காண நேர்கையில் அவர்கள் பயன்படுத்திய யுக்திகள்யாவும் இப்பொழுது நமக்கு பெரும் சலிப்பை ஏற்படுத்தினாலும் “அந்த காலத்திலேயே எப்படி எடுதிருக்கான்யா” சொல்லி கடந்து போவது மட்டுமே பெரும்பாலான படங்களில் நிகழும். ஆனால் இது போன்ற அறிய சில படங்கள் மட்டுமே காலத்தையும் கடந்து இன்றும் இதன் உருவாக்கல் நமக்கு பெரும் ஆச்சர்யத்தை ஏற்ப்படுத்தும். அக்ஷன் & சேஸிங் விரும்பிகளுக்கு மட்டுமின்றி ரயிலை காதலிப்பவர்கள் தவறவிடகூடாத படம்.

Friday, March 24, 2017






1945 – MAY,  இரண்டாம் உலக யுத்தம் ஐந்து வருடங்களுக்கு பின் முடிவுறும் காலகட்டம். ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் இருந்து விடுபடும் டென்மார்க்கே கதைக்கான களம். 2௦௦௦-க்கும் மேற்பட்ட இளம் வயது ஜெர்மானிய மாணவர்களை கட்டாயப்படுத்தி 1.5 மில்லியனுக்கு மேற்ப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றிய உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட கதை.
இவ்வாறு கதைக்கான சூழல் போர்க்களம், கண்ணிவெடி, என பயணப்பட்டாலும் திரையில் மரண ஓலம், ரத்தம் (ஓரிரு காட்சிகளை தவிர) என நிரப்பாமல் அம்மாணவர்கள் மற்றும் அவர்களின் “CHIEF SARGENT” அவர்களிடையேயான எண்ண ஓட்டங்களை ஒரு துளியும் சிதறாமல் பதிவு செய்த வகையில் நிச்சயம் இது கவனிக்கத்தக்க சினிமா.


தமது தேசத்தை விட்டு (டென்மார்க்) சில வருடங்களுக்கு பின் வெளியேறும் மற்றொரு தேசத்து (GERMAN) வீரர்களில் ஒருவன் டென்மார்க்கின் கொடியை வைத்திருப்பதை கண்டு அவர்களின் வீரர்கள் ஆயிரக்கணக்காணோர் சூழ்ந்திருக்கும் சூழலிலும் தான் ஒருவனாக அந்த வீரனை அடித்து நொறுக்கும் படத்தின் ஆரம்ப காட்சி. அது கூறும் இத்தனை வருடங்கள் ஜெர்மானியரின் அடக்குமுறைகளையும், தனது பணியின் மீது அவருக்கு இருக்கும் பற்றையும்.


இவ்வாறான ஒரு CHIEF பத்திற்கும் குறைவான எந்த முன் அனுபவமும் இல்லாத (கண்ணி வெடிகளை அகற்றுவதில்) மாணவர்களை கொண்டு ஒரு பெரிய கடற்பரப்பில் புதையுண்டிருக்கும் கண்ணிவெடிகளை எவ்வாறு செயலிளக்க செய்கிறார். அவரிடம் சிக்குண்டு இம்மாணவர்கள் படும் அவதி. பின் அவர்களிடையே ஏற்ப்படும் பற்றுதல். இம்மாணவர்களுக்காக அவரது தியாகம். இவ்வாறான சினிமா பாணி கதையில் துளியும் சினிமாத்தனம் இல்லாத வசனங்கள் மற்றும் காட்சியமைப்பின் மூலம் அதீத கவனம் ஈர்க்க செய்த இயக்குனர் “MARTIN ZANDVLIET”.


துவக்கத்தில் அத்தனை வீரர்கள் மத்தியில் தன் தேசத்து கொடி வைத்திருந்தவரை தாக்கும் முரட்டு அதிகாரிதான் இந்த மாணவர்களுக்கு தலைமை ஏற்க போகிறார் என்ற காட்சியே நமக்குள் கிலி ஏற்ப்படுத்தும்.



உணவுக்காக அம்மாணவர்கள் இறைஞ்ச அவர்களுக்கான உணவை அவர்களிடத்தில் கடமைக்கு வீசிவிட்டு செல்லும் காட்சிகளும், அவர்களில் ஒருவன் கண்ணி வெடி தாக்குதலில் இரண்டு கைகளையும் இழந்து தனது தாயை நினைத்து கதறும் நிலையில். உடனடியாக மருத்துவ வாகனத்தை தருவித்து அவனை அனுப்பிய பின் அவனது கதறல் மற்ற மாணவர்களையும் சூழும் நொடியில் அவர்களை மீண்டும் பணிக்கு செல்ல கட்டளையிடும் தோணி, பின் அவர்களுடன் கால் பந்து ஆடும் காட்சிகளில் முதன்முறை அவரது புன்னகை என முழுக்க CHIEF ஆக வரும் “ROLAND MOLLER” ராஜ்ஜியம் மட்டுமே.


ஒரே இரவில் அவரிடம் ஏற்படும் மாற்றம். அவர் அம்மாணவர்களிடம் காட்டும் கரிசனம் இதற்க்கு காரணமாக வைக்கப்பட்ட காட்சி முழுதும் ஏற்புடையது இல்லை எனினும், அதன் பின்னான அவரின் நடவடிக்கைகளிலும் அவ்வளவு கட்சிதமாக பொருந்துகிறார். மேலும் அவர் அம்மாணவர்களுடன் இணக்கமான பின் அவர் இதற்க்கு முன் கண்டிப்புடன் நடந்ததும் அம்மாணவர்களின் நலன் கருதி மட்டுமே என நினைக்க சொல்கிறது இந்த இந்தியனின் மனம்.

AMORES PERROS என்ற இத்திரைப்படமே எனது ஆடுகளம் திரைபடத்திற்கு மிகபெரும் தூண்டுகோலாக அமைந்தது என வெற்றிமாறனால் பாராட்டப்பட்ட திரைப்படம்.


இந்த படத்தின் எந்த ஒரு சிறு காட்சி அமைப்பும் பார்வையாளர்களை ஆடுகளம் படத்தை நினைவு கூறாதது வெற்றிமாறனின் மிகபெரும் பலம். ஆனால் இப்படத்தின் திரைக்கதை அமைப்பு மட்டும் கண்டிப்பாக சில இடங்களில் வழக்கு எண் (பாலாஜி சக்திவேல்) படத்தை நினைவுபடுத்துவதை தவிர்க்க இயலா.





ஒரு மிக மோசமான சாலை விபத்தில் இணையும் மூன்று கிளை கதைகளின் கோர்வையே இப்படம் மூன்று அத்தியாயங்களாக வரும் இக்கிளை கதைகளும் அந்த சாலை விபத்தை மைய்யபடுத்தியே நகரும் விதத்தில் அமையபெற்ற அற்புத திரைக்கதை இப்படத்திற்கு மிகபெரும் பலம்.


1. OCTAVIO & SUSANA 2. DANIEL & VALERIA 3. EL CHIVO & MARU

இதில் முதல் இரண்டு கதைகளும் காதலை மைய்யபடுத்தபட்டது.  மேலும் முதல் கதையில் மட்டுமே நாய் சண்டை (ஆடுகளம்) வரும். அக்காட்சிகள் கண்டிப்பாக ப்ரில்லியன்ட் மேக்கிங்.

கதையின் இறுதி கட்டம் வரை இந்த மூன்று கதைகளும் தொடர்பு இல்லாமலே இருந்து இறுதி காட்சியில் அந்த விபத்தில் சம்பந்தபடுத்தபடுவது, இக்கதையில் வரும் பல கதாபத்திரங்கள் நாம் வேறு படங்களில் காணா வகையில் வடிவமைத்த விதம் என படம் நெடுக நம்மை ஆச்சர்யபடுத்தும் காட்சிகளும், கதாபத்திரங்களும் நிறைய ஆதலாலே இந்த மூன்று கதைகளின் எந்த சிறு காட்சியும் திரையில் காணும் நேரம் சுவாரசியம் குறையகூடும் ஆதலாலே படத்தின் எந்த நிகழ்வுகளும் பகிராமைக்கு மன்னிக்கவும்.









ஒரு எளிவேடரில்  (ELEVATOR, LIFT) பயணிக்கும் முன்பின் அறிமுகமில்லா  நால்வர்.  லிப்ட் மின்சார தடைபாட்டால் சில நிமிடங்கள் நிற்க அடுத்தடுத்து மூவர் ரத்த வெள்ளத்தில் இறக்க நான்காவது (நிரபராதி) நபர் கைதாகிறார்.


இந்த நால்வரும் யார்? ஒரே நேரத்தில் இவர்கள் மிக சரியாக இந்த லிப்டில் பயணிக்க வேண்டிய காரண காரியத்தை தேடி கதை முன்னோக்கி பயணிக்க கதையின் கடைசி நிமிடம் (லிப்டில் நுழையும் நொடிவரை).  இந்த நால்வரின் கதாபத்திரங்களும் ஒருவருக்கு ஒருவர் தொடர்பில்லாமலே செல்வது. கடைசி நொடியில் அனைத்து முடிச்சிகளும் அவிழும் வரை சாதரணமாக கொலையாளி யார் என யூகிக்க இயலா திரைக்கதை.


இந்த நால்வரின் கதைகளும் ஒன்றின் பின் ஒன்றாக முழுதாக வராமல் இரண்டு முதல் நான்கு நிமிடமே ஒருவரின் கதை என இந்த நால்வரின் கதைகளும் அடுத்தடுத்து வந்தும் சிறிதும் குழப்பமின்றி தொகுத்த அசாத்திய படத்தொகுப்பு.


மேலும் இந்த நால்வரின் கதைகளமும் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இன்றி ரசிக்கும் படி வடிவமைத்த திரைக்கதை.  நான்கு ஒளி வண்ணங்களில் காட்சிபடுத்திய விதம்.  மேலும் இந்த நால்வரும் சந்திக்கும் இறுதி காட்சிகளில் அந்த நான்கு வண்ணங்களும் வெளிப்படுத்தும் படி அமையப்பெற்ற அற்புத CINEMATOGRAPHY.


 ஊரில் நல்ல செல்வாக்குடன் வாழும் ஒருவர் தனது ஒரு நிமிட சபலத்தில் பூட்டிய ஒரு கடையினுள் மாட்டிகொண்டு ஒரு நாள் முழுதும் படும் வேதனையே இத்திரைப்படம்.


மிக எளிய கதையையும் தனது அசகாய திரைக்கதை மூலம் ஒரு மிக சிறந்த படைப்பாக கொடுக்க இயலும் என்பதற்கு இப்படம் நல்ல உதாரணம்.
அந்த செல்வாக்கு உள்ள மனிதனாக இப்படத்தின் நாயகனாக லால் (சண்டகோழி வில்லன்) நல்ல வசதியான வாழ்க்கை பெரிய வீடு மேலும் மூன்று சொந்த கடைகளை வாடகைக்கு விட்டுள்ளார். அதில் ஒரு கடையை மட்டும்  நண்பர்களுடன் தினமும் மது அருந்த பயன்படுத்துகிறார்.


ஒரு இரவில் தனது நண்பர்கள் அனைவரும் கிளம்ப தனது எடுபிடி ஆட்டோ டிரைவருடன் பிளாக் இல் சரக்கு வாங்க செல்கிறார். அந்த பின்னிரவு வேலையில் பேருந்து நிறுத்தத்தில் ஒரு பெண்மணியை கண்டவுடன் இவருக்கு சபலம் ஏற்பட அவளை தனது கடைக்கு ஆட்டோவில் அழைத்து வருகிறார்.  மேலும் அப்பெண்மணிக்கு சிற்றுண்டி வாங்க அக்கடையின் SHUTTER -யை வெளிப்புறம் பூட்டி செல்லும் ஆட்டோ டிரைவர் இரவு ரோந்து செல்லும் போலீஸ்சிடம் DRUNK & DRIVE இல் மாட்டிக்கொள்கிறார்.  மின்சார வசதியும் அற்ற அந்த சிறிய கடையினுள் அப்பெண்மணியுடன் மாட்டிகொண்ட லால்க்கு என்ன நேர்ந்தது என்பதே இக்கதை.



கூறிய நேரத்தில் வராமல் போகும் ஆட்டோ டிரைவர், தன்னுடைய நேரம் முடிந்தது வெளியே செல்ல வேண்டும் என கத்த ஆரமிக்கும் பெண்மணி. நேரம் அதிகாலை ஆக ஆள் அரவம் ஆரமிக்கும் சாலை என லால் அவர்களுக்கு ஏற்படும் பதட்டத்தை நமக்கும் கடத்துவது இயக்குனர் + திரைக்கதை ஆசிரியரின் திறமை.  அக்கடையின் ஜன்னல் வழியாக தெரியும் தனது வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் பார்த்து கலங்கும் இடங்களில் லால் AWESOME ஆக்டிங் அக்கடையில் இருந்து யாருக்கும் தெரியாமல் மீண்டார்களா....

பாலிவூட் இன் புதிய அலை சினிமாவின் முதன்மையான இயக்குனர் என்பதை இப்படத்தின் மூலமும் நிருபித்து உள்ளார்.

ஹீரோ கனவோடு சினிமாவில் போராடும் கதையின் நாயகன், அவனை விட்டு குழந்தையோடு உயர் போலீஸ் அதிகாரியை மறுமணம் செய்து கொள்ளும் மனைவி, இப்படி வித்தியாச கதாபத்திரங்களின் வலைப்பின்னல், ஒரு சனிக்கிழமை மதியம் காரில் தனது பத்து வயது மகளை தவறவிடுகிறார்.
காவல் நிலையத்தில் புகார் கொடுக்க நண்பனுடன் செல்கிறார் தொலைந்தது உயர் காவல் அதிகாரியின் வளர்ப்பு மகள் என தெரிய வர விசாரணையை வேறு விதமாக முடுக்குகிறது காவல்துறை.


தொலைந்த குழந்தையின் தேடும் படலமே இக்கதை என பார்த்தால் நாயகன், அவரின் முன்னால் மனைவி, அந்த உயர் அதிகாரி, நாயகனின் நண்பன் என இவர்களது FLASHBACK குழந்தையை தேடும் காட்சிகளின் இடையே வருவது போன்ற காட்சி அமைப்பு அனுராக் இன் EXCELLENT SCREENPLAY.


காவல் துறையின் விசாரணை ஒருபுறம் நடந்தாலும் பின்னணியில் இருப்பது ஒவொவ்வொருகுள்ளும் இருக்கும் பழிவாங்கும் ஈகோ மட்டுமே என வித்தியாச TREATEMENT. இந்த ஈகோ விளையாட்டில் குழந்தை எங்கு இருக்கிறாள் என்ற பதட்டத்தை ஒவொவொரு காட்சியிலும் அதிகரித்து கொண்டே செல்கிறார்.

இறுதி காட்சியின் கடைசி ஷாட் வரை கண்டிப்பாக நம்மால் யூகிக்க இயலா திரைக்கதை அனுராக் இன் ஸ்பெஷல். கதாபாத்திரங்களின் ஈகோ யுத்தம், குழந்தையின் நிலை என நிச்சய இப்படம் நல்ல அனுபவம்.

Monday, March 20, 2017



ஒரு நடிகை நெடுஞ்சாலையில் தனது வாகனத்தில் அடிபடும் ஒரு நாயை சிகிச்சைக்கு மருத்துவமனையில் சேர்க்கிறார். அதற்கான கட்டணத்தை செலுத்தி அந்த நாயை தன்னுடனே அழைத்தும் செல்கிறார். பின் தனது பாய் பிரண்ட் மூலமாக அந்த நாய் தன்னிடம் இருப்பதாகவும் அதன் உரிமையாளர் அழைத்து செல்லும்படியும் விளம்பரபடுத்தும் சூழலில் தனியாக வசிக்கும் அவரை திருடன்  ஒருவன் கற்பழிக்க முயல நாம் நினைத்தது போல அந்த நாய் அவரை காப்பாற்றுகிறது. மேலும் அந்த நாயை அவரே வைத்துகொள்ளவும் விரும்புகிறார். அவர்களுக்குள் நெருக்கம் அதிகரிக்கும் சூழலில் அந்த நாய் மாயமாகிறது.


இவ்வாறு தொலைந்து போகும் மற்றும் கைவிடப்பட்ட செல்ல பிராணிகள் முகாமிற்கு செல்கிறார். அங்கு சென்ற பின்னேதான் அதன் சட்ட திட்டங்களும் (இவ்வாறு அங்கு கொண்டுவரப்படும் பிராணிகள் இரண்டு நாட்களுக்குள் அதன் உரிமையாளர் வராதபட்சத்தில் கொல்லப்படுவதும்)  எத்தனை பிராணிகள் இவ்வாறு கைவிடப்பட்ட நிலையில் அங்கு உள்ளதும் அவருக்கு தெரியவருகிறது. மேலும் அங்கு கொண்டு வரப்படுவதில் தங்களது தொலைந்த பிராணிகளை காண மக்கள் நூற்றுகணக்கில் காத்திருகின்றனர். பெரும்பான்மை பார்வையாளர்கள் செல்ல பிராணிகள் வளர்க்காத அதன் அடிப்படை விஷயங்கள் கூட அறியாதோரே. மேற்கூறிய இந்த முகாம் காட்சிகள் அவர்களையும் இந்த கதையினுள் இழுக்க (என்னையும் சேர்த்து) தொலைந்த நாயின் மீது பரிதவிப்பை ஏற்ப்படுத்தும் அட்டகாச திரையுக்தி.


அடுத்த நாளே ரத்த கறையுடன் தனது வீட்டிற்கே வரும் நாய் ஒருவரை கொலை செய்ததும் அது அவ்வாறே பழக்கபடுத்தபட்டதும் அவருக்கு தெரியவருகிறது. தன்னிடம் குழந்தை போல் பழகும் நாய் தனது பாய் பிரண்ட்டுடன் நெருக்கமாக இருக்க அனுமதிக்காததும் அவரின் மேல் அதன் சீற்றத்தையும் கண்கூடாக காண்கிறார். ஆகவே சர்க்கஸ் மற்றும் உயிரியல் பூங்காகளுக்கு சிங்கம், புலி, யானை போன்ற உயிரினங்களை சாதுவாக பழக்கபடுத்தி அனுப்பும் இடத்திற்கு அழைத்து செல்கிறார்.




எந்த ஒரு கதைக்கும் ஒரு பாத்திரம் எவ்வாறு நேர்மையாக நடந்து கொள்ள இயலும் என்பதற்கு நடிகையாக வரும் “KRISTY McNICHOL” மற்றும் அந்த நாயை சாதுவாக்க பழக்கபடுத்தும் TRAINEER “TONY BRUBAKER” பாத்திரமே மிக பெரும் சான்று. சிங்கம் மற்றும் புலிகளுடன் மிக சாதரணமாக புழங்கும் டோனி அந்த நாயிடம் நெருங்கும் கணங்கள் அவரை மட்டுமின்றி நம்மையும் திக்.. திக்.. ஏற்ப்படுத்தும் அட்டகாச பின்னணி இசை. குறிப்பிட்ட அந்த காட்சிகளுக்கு மட்டுமின்றி முழு கதைக்கும் மிகபெரும் தூண்.


முழுக்க அந்த நாயை சுற்றியே பின்னப்பட்ட கதையில் அதன் செயல்பாடு மற்ற எந்த பாத்திரத்துடன் ஒப்பிடுகையில் சற்றும் குறைவில்லாத வகையில் அதனிடமிம் வேலை வாங்கிய வகையிலே இயக்குனருக்கு தனி ஸ்பெஷல் பாராட்டுக்கள்.


கொடிய மிருகங்களுக்கு இடையே பிற்பாதி கதை முழுக்க இருக்கும். பூனை, பறவைகள் போன்றே சிங்கம், புலி, கரடிகளையும் மிக சாதாரணமாக நாம் கடந்து செல்லும்படியும், அந்த நாயை காணும் காட்சிகள் மட்டுமின்றி தன் குறைக்கும் ஒலி கூட நமக்குள் “கிலி” ஏற்ப்படுத்தும் வண்ணம் அமையபெற்ற இயக்குனர் “SAMUEL FULLER” திரைமொழி நிச்சயம் அனைவரையும் கவரும்.

Friday, March 17, 2017

தனது  ஆசாத்திய மதிநுட்பத்தால் மராட்டியம் முதல் டெல்லி வரை தனது சாம்ராஜியத்தை  நிறுவிய  பாஜீரோ என்ற மணமான அரசன்.   அவரின் படையை உதவியாக. கேட்டு வரும் இளவரசி மஸ்தானிக்குமான காதலேஇந்த மிக பிரமாண்ட படைப்பின் அடிநாதம்.  போர் உடையில் வந்து தன்னை கோபப்படுத்தியது தூதுவன் என பாஜீரோ தாக்குகிறார்.  தலைகவசம் கழண்டு முதல் முறை மஸ்தானி பாஜீரோவின் கண்களை நோக்கும் கணம். தனது நாட்டிற்கு சூழும் ஆபத்தை காக்க உதவிகேட்க்கும் பார்வை. தனது படையை உதவியாக கேட்டவளுக்கு, தானே போரை முன்னின்று நடத்தி வெற்றி பெற வைக்கிறார்.  


 இளவரசியின் அந்தபுரத்தில் பஜேரோவின் நினைவில்தான் விளித்துக்கொண்டே கனா காணும் அந்த கண்களை இரண்டாம் முறை              கம்பீரமாகவே சந்தித்து செல்கிறான். விருந்துக்கு பின் தாம்பூலத்தோடு கையில் சிறு பந்தத்துடன் பாஜீரோ தங்கியுள்ள நிலவொளி பூசிய மாடி அறையில் இறுதி யாசகமாக காதலை கேட்க்கும் கண்களை மூன்றாம் முறை சந்தித்து சிறுநிலகுலைவுடன் தனது தேசம் திரும்புகிறான்.


தனது நாட்டிற்க்கு எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் வெற்றியீட்டி தந்த அரசனுக்கு பொன், பொருள், ஆபரணங்களுடன் தனது மகளையும் பரிசாக அனுப்புகிறார் மஸ்தானியின் தந்தை. பாஜீரோவின் தாயாரால் நடன மங்கைகளுடன் தங்கவைக்கப்படுகிறார்.   பல மாதங்கள் போருக்குபின் வெற்றி வாகையுடன் தனது நாட்டிற்க்கு திரும்பும் அரசனுக்கு ஏற்பாடு செய்யும் விருந்தில் நடனமாட பணிக்கப்படுகிறார்.


நான்காம் முறை மீண்டும் அந்த கண்களை சந்தித்து முதல்முறை முழுதாக நிலைகுலைகிறான். பின் பல சாம்ராஜ்யங்களை தன்வசப்படுத்திய பேரரசனின் வாழ்வில் நடப்பவையாவும் அந்த கண்களை சந்தித்ததின் வினை...    பாஜீரோ மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் முழுதாக மட்டுப்படாத. பாசமும், கனிவும், தியாகமும், சாம்ராஜிய. குடும்பத்தின் பொறுப்புணர்வும்,  தனது வாழ்கையே பங்கிட வந்தவளிடத்திலும் மனிதநேயம் காட்டும் கண் ஒன்றும் இக்கதையில் உண்டு.நான்கு                  முறை போரிட்டு பாஜீரோவை வீழ்த்திய கண்களை காட்டிலும் தான் தாய்மை  அடைந்ததை தன் கணவனிடத்தில் கூறும் அந்த கண்கள் ....... 


               


Wednesday, March 15, 2017

  
குஜராத் கலவரத்தின் பிந்தைய நாட்களே படத்தின் கதைக்களம்.  இப்படத்தை நான் பார்த்த பிறகே ரிலீஸ் செய்ய வேண்டும் என அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இன் அறிக்கைக்கு,  நந்திதாதாஸ் பதில் என்ன தெரியுமா? இப்படம் குஜராத்திலும் ரிலீஸ் ஆகும் நீங்கள் எப்பொழுது முடியுமோ பார்த்து கொள்ளுங்கள் என்பதே.


நந்திதாதாஸ் இயக்கம் என்ற ஆச்சிர்யத்தில் பார்த்தால் அதை அவர் பூர்த்தி செய்ததாகவே உணருகிறேன்.



குவிந்து கிடக்கும் உயிரற்ற உடல்களை ஓரே குழியில் அடக்கம் செய்யும் சமயம் ஒரே ஒரு ஹிந்து பெண் உடலை பார்த்து ஆத்திரத்தில் வெடிக்கும் நம்ம நாசர். கலவரத்தின் பாதிப்பை தொலைகாட்சியில் கண்டு மனம் தாங்காமல் சமையல் எண்ணெய்யால் கையில் சுடு இட்டு கொள்ளும் (ஹிந்து) குடும்ப தலைவி கதாபத்திரம். முஸ்லிம் பகுதியில் மக்கள் சேமித்து வைத்துள்ள குடிநிரை கூட கிழே கவிழ்க்க சொல்லும் (அங்கே தீபிடித்தால் அவர்கள் அணைக்க கூடாதம்) போலீஸ் கதாபத்திரம். கலவரத்தில் தனது துணி கடை முழுதும் சூறையாட பட்டு வேறு மாநிலம் சென்றாவது பிழைத்து கொள்ள நினைக்கும் முஸ்லிம் பணக்கார இளைஞன் கதாபாத்திரம்.

கலவரத்தில் தனது வீடு மற்றும் அனைத்து பொருட்களும் தீயில் அழிந்து அடுத்த நாளே வீடு திரும்பும் ஆட்டோ டிரைவர், மனைவி, மற்றும் அவர்களது கை குழந்தை பத்திரங்கள். அடுத்த வேலை பாலுக்கு குழந்தைக்கு வழிஇன்றி ஒரு திருமண வீடுக்கு பணிக்கு செல்லும் வழியில் தனது பொட்டை எடுத்து அக்குழந்தையின்  அன்னைக்கு வைக்கும் ஹிந்து பெண் கதாபத்திரம். (அப்பெண் முஸ்லிம் என தெரியவேண்டாமே) என படம் நெடுக நம்மை ஆச்சிர்யத்தில் ஆழ்த்தும் நிகழ்வுகள் பல.  எப்பொழுதும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் நஸ்ருதின்ஷா இதிலும்...
 
எந்த   ஒரு பீரியட் திரைப்படத்திலும் அதநடைபெறும்    காலகட்டத்தில்  கதையின்ஓட்டம் இருந்தாலும்படம்  கதையின் ஓட்டத்தை ஒட்டியே நகரும்.   அக்காலகட்டத்தின்   முக்கிய வரலாற்று  நிகழ்வுகள்  பெரும்பாலும் அக்கதைகளில் தென்படாது.


ஆனால் இப்படத்தின் கதை 19௦௦ இல் இருந்து 197௦  இல்நிறைவுறுகிறது. வெள்ளையர்கள் அஸ்ஸாம் இல் இருந்து தேயிலை பயிரிட கேரளா வந்த (19௦௦) காலகட்டதில் துவங்கி, முதல் உலக போர் (1914), இந்திய சுதந்திரம் (1947), அதற்கு பிந்தைய ஜமின்தார்களின்(ஆண்டே) ஆட்சி, KERELA வில் COMMUNISAM தின் துவக்க காலம், EMERGENCY காலம் (197௦) என இந்திய வரலாற்றின் அனைத்து முக்கிய நிகழ்வுகளும் தொட்டு செல்லும் கதையின் போக்கு நிச்சயமாக அபாரம்.


வெள்ளையரின் நன்மதிப்பை பெற்ற ஒரு இந்தியன் அவருக்கு பிறகு ஆண்டேவாக.  அவருடைய மகனே தன் தந்தையை எதிர்த்து அம்மக்களை மீட்கும் சாதாரண கதை.  ஆனால் இத்திரைக்கதைக்கு இயக்குனரின் HOME WORK நிச்சயம் பாராட்டபட வேண்டியதே.


திரைகதையின் ஒவ்வொரு காட்சியும் சரித்திரத்தின் அனைத்து முக்கிய நிகழ்வுகளிலும் ஏதோவொரு வகையில் கதையின் போக்கை மாற்றும் வகையில் அமைத்த வகையில் மிகவும் ரசித்த வைத்த வகையே இப்படம்.

வெள்ளையனிடம் அடிமையாக இருப்பது முதல் ஆண்டே வாக அனைவரையும் ஆள நினைப்பது என லால் மற்றும் அவரின் இரு மகன்கள், மூன்றாம் மகனாக நம்ம பகத் பாசில், மதுரை முத்து ராவுத்தர் மகனாக ஜெயசூர்யா, சஸ்பென்ஸ் பத்மப்ரியா என அத்துனை பாத்திர தேர்வும் கணகச்சிதம்.

சரித்திர நிகழ்வுகளை கதையின் போக்கோடு இணைக்க எடுத்த சிரத்தையை திரைக்கதையில் எடுத்து இருந்தால் இந்திய அளவில் மிக முக்கிய சரித்திர திரைப்படமாக இடம் பெற்றிருக்கும்.
  
      
 1950 களின் காலகட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்கு கொரியாவை முறையே பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க நாடுகள் கைப்பற்றின.  மேலும் கொரிய படைகளை கொண்டே தங்கள் சாம்ராஜியத்தை விரிவுபடுத்த வேண்டி நடந்த உண்மை நிகழ்வை மையபடுத்தின திரைப்படம்.


195௦ ஆகஸ்ட் காலகட்டமே இப்போரின் உச்சம் பெற்ற சமயம்.  படைபலத்தில் மிகவும் பின்தங்கிய வடக்கு கொரியாவை நோக்கி அசுர பலம் பொருந்திய கிழக்கு கொரியன் படை ஆக்ரமிக்க வருகின்றனர்.  படைபலத்தில்மிகவும்  பின்தங்கிய வடகொரியர்கள் தங்கள் தலைநகரை பலப்படுத்த பின்வாங்கி தலைநகர்  நோக்கி செல்கின்றனர்.  வலுகட்டாயமாக ராணுவத்தில் சேர்த்து கொள்ளப்பட்ட,  துளியும் முன் அனுபவம் அற்ற கல்லூரி மாணவர்கள் 72 பேர் மட்டுமே வேறு வழி இன்றி வட கொரியாவின் நுழைவாயிலை பாதுகாக்கும் பொறுப்பு திணிக்கபடுகின்றது.  அடுத்த 3௦ நாட்கள் அம்மாணவர்களின்  வாழ்வே இத்திரைப்படம்.


படம் நிறைவடைந்த பின் வரும் டைட்டில் கார்டு தவறாமல் பார்க்கவும்.  இந்த நிஜ யுத்தத்தில் பங்குகொண்டு உயிர் பிழைத்த மூவரின் மிக முக்கிய அனுபவ வரிகளுடே படம் நிறைவடையும்.  இந்த சுவாரசிய சரித்திர நிகழ்வு நிச்சயம் பார்வையாளர் அனைவரின் மனதிலும் காலத்துக்கும் பதிந்திடும் என்பதில் ஐய்யமில்லை.


போர்க்காட்சிகள் மட்டுமின்றி அம்மாணவர்களின் சந்தோசம், கோபம், ஏக்கம், பயம், பாசம் என அவர்களின் அத்துனை உணர்வையும் துளியும் சினிமாத்தனம் இல்லாமல் இயக்குனர் நம் மனதிற்கு கடத்துகிறார்.  உலகின் மிக சிறந்த போர் திரை படங்களில் நிச்சயம் இப்படத்திற்கும் இடம் உண்டு என்பதில் சந்தேகம் இல்லை.

இப்படத்திற்கான ட்ரைலரை காண:
https://www.youtube.com/watch?v=KuxbJ4Abwa4

Monday, March 13, 2017

OKINAVA ஜப்பான் நுழைவாயிலில் உள்ள ஒரு தீவு. இங்கு இரண்டாம் உலக யுத்தம் முடிவுறும் காலக்கட்டம் மே1945 ல் அமெரிக்கா படையினருடன் நடைபெற்ற யுத்தமே கதைக்களம்.


எல்லா WAR கதைகளிலும் வரும் பொறுப்பற்ற சிறுவன், குடும்பம், காதல், தியாகம் எல்லாம் இதுலயும் இருந்தாலும் போர்க்களத்திற்கும் ரத்தத்திற்கும் கொடுக்கும் முக்கியத்துவம் மற்ற விசயங்களில் இருக்காது. இவை அனைத்தையும் அட்டகாசப்படுத்தி போர்கள காட்சியையும் அமளி துமளி பண்ணிருக்காங்க.


MELGIBSON ன்னா எனக்கு முன்னல்லாம் நம்ம விஜயகாந்த் ஞாபகம்தான். ஏன்னா அவர் நடிக்கும் படம் பூரா வெறும் ஒரே ஆக்ரோஷ பேச்சும் துப்பாக்கி சண்டையுமா இருக்கும். BRAVE HEART, APOCALYPTO படங்களில் அவர் கொடுத்த ஆச்சர்யத்தை விட இதில் இவரது துல்லியம் நிச்சய பிரமிப்பு. படம் பார்த்து 12 மணி நேரமாகியும் ஒரு வார் மூவில அதனோட பிரமாண்டத்தை தாண்டி வேறு பெரிதாக எந்த நினைப்பும் இருக்காது. ஆனால் இதன் பாத்திரத்திங்களின் தன்மை இன்னும் நினைவில் வந்து செல்வது உண்மை ஆச்சர்யம்.






DESMOND DOSS எனும் நபர் இந்த போரில் உண்மையாக காயமடைந்து உயிருக்கு ஆபத்தான 75 நபர்களை காப்பாற்றிய உண்மை நிகழ்வை அடிப்படையாக கொண்டு உருவான படம். இவர்தான் அமெரிக்காவில் ஆயுதம் ஏந்தாமல் இந்த விருதை பெரும் முதல் நபர். படத்தின் இறுதியில் இந்த உண்மை நாயகனின் கிளிபிங்க்ஸ் உடன் முடித்துவிடாமல் இவரது வாழ்வின் உன்னத தருணங்களின் உண்மை நிகழ்வுகளை அவரே கூறிய வீடியோ கிளிப்பிங்க்ஸ்ல் அவர் சிலாகித்து கூறும் விசயங்களை அச்சு மாறாமல் இந்த கதையில் முக்கிய காட்சிகளாக வரும்படி அமையப்பெற்ற திரைக்கதை மிகபெரும் பலம். முழு படமும் பார்த்து இறுதில் இவரது பேச்சை கேட்கையில் இன்னும் கூடுதலாக உரைக்கும் இவரது செயல்.


அமெரிக்கா ராணுவத்தில் ஆயுதம் ஏந்தாமல் வெறும் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு முதலுதவி செய்து காக்கும் ஒருவரின் உண்மை கதைதான் எனினும் அதை நாமும் ஒப்புக்கொள்ளும் படி அமைக்கபெற்ற காட்சிகள் மிகப்பெரும் பலம் இக்கதைக்கு.


நாயகனின் பட்டாலியனில் அவனுடன் போருக்கு செல்லும் ஒரு துணை பாத்திரம் இரு கால்களையும் இழந்து நாயகனின் முதல் உதவியால் உயிர் பிழைத்துவிடுவார். இதில் ஆச்சர்யம் போரின் ஆரம்பகட்டத்திலேயே இவர் திரையிலிருந்து விலகிவிடுவார். பின் போரே முடிந்து நாயகன் மருத்துவமனை வருவார். அந்த நபருக்கு குண்டு வெடிப்பில் கால்கள் மட்டுமே சிதறியிருக்கும் முகத்தில் ஒரே இடத்தில் சிறியதாக ஒரு வெட்டு மட்டுமே இருக்கும். அந்த இறுதி ஷாட்டில் அவருக்கு மிகசரியாக அந்த இடத்தில மட்டுமே கட்டு போடப்பட்டிருக்கும். இப்படத்தின் துல்லிய உருவாக்கலுக்கு இந்த ஒரு காட்சியே மிகப்பெரும் சான்று.


இந்த படத்தின் லவ் போர்சன் வெச்சி முழுசா, தனியா ஒரு வெற்றி காதல் திரைப்படமே எடுக்க இயலும். படத்தின் நீளம் கருதியோ அல்லது காட்சிக்கான முழுவடிவம் சரிவர அமையப்பெறவில்லை என நிராகரிக்கப்படும் ஷாட்களில் நிரம்பியுள்ள இயக்குனரின் உழைப்பும் + தயாரிப்பாளரின் வலியும் இதற்க்குமுன் எந்த படத்தையும் பார்க்கையில் நினைத்து பார்ததாக நினைவில்லை. கண்டிப்பாக மொத்த காட்சிகளில் எழுவது சதவீதம் மட்டுமே பயன்படுத்தபட்டிருக்கும்.


Search This Blog