பெரும் தொழிலதிபர் அம்மாநிலத்தின் அடையாளம்.
ஒரு நெடுஞ்சாலை உணவகத்திற்கு வருகிறார். அங்கிருக்கும் தொலைக்காட்சியின் பிரேக்கிங்
நியூஸ் துவங்குவதற்கான அதிரடி இசை வாடிக்கையாளர் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. அதில் பிரபல வங்கியில்
நடந்த கொள்ளை சம்பவத்தின் CCTV காட்சிகள் ஒளிபரப்பபடுகிறது. அதில் அந்த ஹோட்டலில்
அமர்ந்திருக்கும் அம்மாநிலத்தின் அடையாளமான அந்த தொழிலதிபர்தான் இருக்கிறார். மேலும் அவரை
தடுக்கும் அவ்வங்கியின் பாதுகாவலரையும் தனது துப்பாக்கியில் சுடுகிறார்.
மேலும் அவரின் வக்கீல்
காவல்துறையிடம் அவரால் இதை போன்றே நான்கு வங்கிகளை ஒரே சமயத்தில் வாங்கமுடியும்.
அவர் எதற்காக இந்த சிறுதொகைக்காக கொள்ளையில் ஈடுபடவேண்டும் என வாதாடுகிறார். சமீபத்தில்தான்
இவர் 2500 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் நிரபராதியென நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்
என்பதும் குறிப்பிடதக்கது. எனில் இத்தனை பெரிய மனிதர் இந்தகொள்ளையில் ஈடுபட காரணம்
என்ன? முக்கிய குறிப்பு இது இரட்டைவேட கதையும்
அல்ல.
ஒரு ஒப்பனை கலைஞன். அவரின் தந்தை சினிமாவில்
புகழ்பெற்ற ஒப்பனையாளர். அதலால் சிறுவயது முதலே தன் தந்தையிடம் அதன் முழுமையும்
கற்கிறார். உடன் ஒப்பனை குறித்த புத்தகங்கள் முதல், அதன் இறுதி அப்டேட் வரை
இணையத்திலும் படித்து தேர்கிறார். தனது தந்தை இறந்ததும். அவரின் நண்பரின் மூலம் சில
சினிமாக்களில் பணிபுரிகிறார். ஆனால் தனது பனியின் நேர்மை காரணமாக. காட்சிக்காக
எந்த Compromise செய்து கொள்ளாததால் அவரால் தொடர்ந்து எங்கும் பணிபுரிய முடியவில்லை.
வேறு எந்த தொழிலும் தெரியாத இந்த சூழலலிலும் தன்தொழிலில் தான்கொண்ட உறுதியுடனே
இருக்கிறார். அவருள் அந்த முழுமையான கலைஞன் உயிர்ப்புடனே இருக்கிறார்.
ஒரு வக்கீல். அந்த ஒப்பனை கலைஞனை
போன்றே சிறுவயது முதல் சட்டத்தின் மீது ஈர்ப்பு உள்ளவன். சட்டம் முதல் வருடம்
பயின்று வருகிறான். எதிர்பாரா சூழலில் தன் தந்தையை கொலை செய்கிறான். அதையும்
ரசித்தே செய்கிறான். சிறுவர் சீர்திருத்த பள்ளியில், முழுநேரத்தையும் சட்டத்தை
படிப்பதிலே செலவிடுகிறான். வெளியே வந்ததும் நீதிமன்றங்களுக்கு சென்று அங்கு ஒரு
வழக்கை எவ்வாறு கையாள்கிறார்கள் என தீவிரமாக கற்கிறான்.
முதல் வருடத்திற்கு பின் தன்
சட்டபடிப்பை தொடரமுடியாதவன். அங்கிருக்கும் வக்கீல்களிடம் தன்னை தற்போது
பயிற்சியில் இருக்கும் வக்கீலாகவே அறிமுகம் செய்து கொள்கிறான். அவர்களின்
வழக்குகளில் உள்ள நுண்ணிய தவறுகளை சுட்டிக்காட்டி அதை எவ்வாறு கையாள வேண்டுமென
கூறிவருகிறான். நீதிமன்றத்திற்கு வெளியே தனி அலுவலகமும் வைத்து இந்த யோசனையை
செயல்படுத்தியே நல்ல பொருள் ஈட்டி வருகிறான். ஆனால் அவனுள் இருந்த கொலைகாரன் அதே
ரசனையுடன் விழித்தே இருக்கிறான்.
இந்த இருவேறு பாத்திரங்களும்
கதையில் இணையும் ரொம்ப முக்கிய காட்சி ஒன்று உள்ளது. அதுவரைக்குமான கதைக்கும்.
அதன்பின் இந்தக்கதை செல்லும் விதமும் நம்மை பெரிய ஆச்சர்யத்திற்கு உட்படுத்தும்.
சமீபமா இந்தளவு அடர்த்தியான வசனங்களை முழுகதையிலும் நாம் பார்த்திருக்க வாய்ப்பே
இல்லை. இந்த படம் ப்ரைம்ல் தமிழ் சப்டைட்டிலுடனே கிடைக்கிறது.
இந்த இரு பாத்திரங்களும் சம்மந்தமில்லாத
முதல்பத்தியில் குறிப்பிட்ட அந்த தொழிலதிபரின் அசம்பாவிததிற்கும் காரணமாகின்றனர்.
அவர்மட்டுமல்ல இன்னும் சிலரின் வாழ்கையிலும். இந்திய சினிமாவின் உண்மையான சைக்லாஜிக்கல்
திர்ல்லர். ஒரு உண்மையான புதிய அனுபவத்திற்கு தயாராகுங்கள்.
Super. Would like to see it soon. Thank you.
ReplyDeleteSoo thanks sir😍😍
ReplyDeleteSuper Anna
ReplyDeletePaathuduvom.
Pudhu Vidha Experience ku Thayar Aaguran 👍🙏
கண்டிப்பா 😍😍
Deleteவித்தியாசமான கதைக்களம் தான்...
ReplyDeleteகார்த்தி ⚡
ReplyDelete