Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Sunday, April 23, 2017



 TAGLINE:     8 years ago, Alex's wife was MURDERED. Today... She e-mailed him.
 
இப்படத்தின் தலைப்பை போலவே  படத்தின் போக்கை யூகிக்கா வகையில் கடைசி ஷாட் வரை பயணிக்கிறது.  இதுபோன்ற படங்கள் சிலவற்றை முன்பே பார்த்திருபோம்.  இந்த படத்திற்கான சிறப்பு நடந்த அந்த சம்பவத்திற்கு யார் காரணமென நாம் சந்தேகிக்கும் அனைத்து  கதாபாத்திரங்களையும் அதற்கான முடிச்சை அவிழ்க்க ஆரமித்த சில காட்சிகளிலே... "இவர் இருக்காது," "இதுவா இருக்காதுனு" அந்த பட்டியலில் உள்ள நபர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வரும். ஆனால் இந்தக்கதையில் அந்த எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருமே ஒழிய குறைய வாய்ப்பில்லாத வகையில் அமையப்பெற்ற கனகட்ச்சித திரைக்கதை.


பெரும் புரிதலுடன் வாழும் தம்பதிகளின் வாழ்வில் நடைபெறும் ஒரு சம்பவத்தில் மனைவி மரணமடைகிறார்.  அவளது உடலை காவல்துறையில் பணிபுரியும் அவளது தந்தையே அடையாளம் காட்ட சம்பரதாயங்களுடன் எரியூட்டப்படுகிறது.  கணவன் சில நாட்கள் கோமா நிலைக்கு சென்று திரும்புகிறான்.  அதற்கு எட்டு வருடங்களுக்கு பின் நகரும் கதையில் அவனது இறந்த  மனைவியின் தாயாரே அவனை வேறு திருமணம் செய்து கொள்ள அறிவுறுத்துகிறார்.  இந்த நிலையில்  தனது மனைவியின் மெயில் ஐடி யில் இருந்து அவனுக்கு ஒரு மெயில் வருகிறது. "யார் அனுப்பியது?..." என கணவன் குழப்பமடைகிறார்.  இதே சமயத்தில்  இந்த தம்பதியரின் விபத்து நடந்த அதே பகுதியில் இரண்டு உடல்கள் கண்டெடுக்கப்படுகிறது.  இறந்த இவனது மனைவியின் மரணத்திற்கான காரணம் கண்டுபிடிக்காமல் நிலுவையில் உள்ள வழக்கும் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறது.


சிறப்பு அதிகாரி பெரும் சிரமத்தில் சேகரிக்கும் தகவல்கள் அனைத்தும் அவளது கணவராக குழந்தைகள் நல மருத்துவராக இருக்கும் நாயகனுக்கு எதிராகவே இருக்கிறது. ஆதலால் அவரை கைது செய்ய முற்படுகையில் தப்பித்து தலைமறைவாகிறார். சிறப்பு அதிகாரியோ இவரை இந்த வழக்கில் சிக்கவைக்க இவருக்கு நெருங்கிய வட்டாரத்திலே உள்ளவரே செயல்படுவதாக நம்புகிறார்.


திடீர் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட தனது மகனை நாயகனே மருத்துவம் பார்க்க வேண்டுமென மருத்துவமனையில் சண்டையிட்டு பின் அவரது நட்பு வட்டத்திற்குள் வரும் அந்த குழந்தையின் தந்தையிடம் காவல்துறையிடம் தப்பித்த நாயகன்  அடைக்களம் அடைகிறான். அவரது உதவியால் தனது மனைவியை பற்றி சில தகவல்கள் கிடைக்கும் நிலையில் அவளை பற்றிய தகவல் தெரிந்த நபர்களை ஒரு கும்பல் அவள் இருக்கும் இடம் கேட்டு சித்ரவதை செய்து கொலையும் செய்கிறது. காவல் துறை,  ஒரு கொலைவழக்கு மேலும் மேலும் தங்கள் கண்முன்னே பெரும் சிக்கலாகிகொண்டே செல்வதில் நிலைதடுமாறி நிற்கிறது.  அதன் பின் அவர்களது அடுத்த திட்டமும், நாயகன் காதலுடன் மனைவியின் தேடலும்..


இது போன்ற திர்ல்லர் வகையறா படங்களுக்கு என ஒலிக்கும் பெரும் சப்தங்கள் ஏதுமின்றி வரும் மெல்லிய இசையின் ஊடே இப்படத்தை காணும் அனுபவம் சுகம். காவல்துறையிடம் தப்பிக்கும் ஓரே சேசிங் காட்சியே இருந்தாலும், மெதுவாக அதேசமயம் சீரான வேகத்தில் நகரும் திரைக்கதையே இப்படத்திற்கு பெரும்பலம்.


மேலே குறிப்பிட்ட பாத்திரங்களில் ஒருவரே நடந்த சம்பவங்களுக்கு காரணகர்த்தா  படத்தை முன் பார்க்காதவர்கள் யாராக இருக்குமென முடிந்தால் முயற்சித்து பாருங்கள். :-)

படத்திற்கான ட்ரைலர்:

 https://www.youtube.com/watch?v=ryMVzQsTmZY

Saturday, April 22, 2017




இந்தியாவில் இளம்வயதில் அசோக சக்ரா விருதை வென்றவர் NEERJA BHANOT. 05 SEP 1986 PAN AMERICA WORLD AIRWAYS என்ற விமானம் 360 பயணிகளுடன் பம்பாயிலிருந்து கராச்சி வழியாக ஜெர்மனி சென்று,  அங்கிருந்து அமெரிக்க செல்கிறது.  இந்த விமானம் கராச்சியில் சில பாலஸ்தீனர்களால் கடத்தப்பட்டும் சூழலில் சாதூர்யமாக செயல்பட்டு விமான ஓட்டிகளை முதலில் தப்பிக்க வைகிறார்.   விமானத்தை அங்கிருந்து நகற்ற வழியில்லாமல் கடத்தல்காரர்களை குழம்ப செய்து.  பயணிகள் அனைவரின் பாஸ்போர்ட்களை மறைத்து அனைவரும் எந்த நாட்டின் குடியுரிமை பெற்றவர்கள் என்ற தகவல் அவர்களிடம் சென்று சேராமல் தடுகிறார். மேலும் தக்க தருணத்தில் பயணிகளை அவசர வழியை பயன்படுத்தி தப்பிக்க வைத்து குழந்தைகளை காப்பாற்ற முயல்கையில் கடத்தல்காரர்களின் துப்பாக்கி குண்டுக்கு உயிர்இழக்கிறார்.  இது வெறும் இப்படத்தில் வரும் காட்சிமட்டுமின்றி எண்பதுகளின் காலகட்டத்தில் நம் நாட்டின் பெண்மணி இந்த வீரதீர செயல் புரிந்தது உயிர் துறந்தமைக்காக  அவரது  இருவதுமூன்றாவது வயதில் இந்த விருது அவரது குடும்பத்திற்கு வழங்கப்பட்டது. அவரின் மதிநுட்பத்தால் 17 மணிநேரத்தில் நான்கு கடத்தல்காரர்களும் உயிருடன் பிடிபட்டனர்.

கடத்தல் தேதிலிருந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் படம் துவங்குகிறது. பம்பாயில் நாயகியும் கராச்சியில் கடத்தல் நபர்களும் என தேர்ந்த படத்தொகுப்பில், பத்தாவது நிமிடம் நாயகியும் இருவதாவது நிமிடம் கடத்தல் நபர்களும் கதைக்குள் (விமானத்துக்குள்) வந்துவிடுகின்றனர். நாம் எதிர்பார்த்தது போலவே கர்ப்பிணி பெண்ணும் குழந்தைகளும் வயதானவர்களும் விமானத்தில் பயணிக்கின்றனர்.

அதிகம் படிப்பறிவு இல்லாத முன்கோபம் மிகுந்த கடத்தல்காரர்களின் உடல்மொழியை மிக நேர்த்தியாக படைத்தது, செட்டிங்க்ஸ் என சத்யம் செய்தாலும் நம்பமுடியா வண்ணம் அமைந்த விமானத்தின் உட்பகுதி, எண்பதுகளின் காலகட்டத்தில் உள்ள உடை, உதட்டு சாயம், முடியலங்காரம், வெடிகுண்டு, கைத்துப்பாக்கி ஆகிய அனைத்தும் கொண்டு நம்மை அந்தகாலகட்டத்திற்கே கொண்டு செல்ல முயற்சித்துள்ளனர்.

முழுக்க நாயகியை சுற்றியே பின்னப்பட்ட கதையில் அம்மா வேடத்தில் ஆச்சர்ய ஷபானாஆஸ்மி .  தனக்கு வழங்கப்பட்ட சிறு இடங்களிலும் பெரு இடங்களை நம் மனங்களில் பிடிக்கிறார். இது போன்ற திரை ஆளுமைகள் இந்திய சினிமாக்களில் மிகக்குறைவு .  சமீபத்திய WAZIR –ல் அமிதாப் போல, sonamkapoor உடனான காட்சிகளிலும், நாயகி இறந்தபின்னான கடைசி பதினைந்து நிமிடங்கள் ஷபானாவின் ஆட்சி.  இப்படத்திற்கான உயிர்நாடியும், முழு படத்தையும் அனைவரும் ரசிக்கும்படி அமைக்கபட்டுள்ளபோதும் நம் மனதில் நீண்ட நேரம் நினைவில் உள்ளவர் ஷபானா....

விமான ஓட்டிகள் தப்பித்தபின் விமானத்தை இயக்க வழியின்றி பயணி ஒருவரை கராச்சி விமான அதிகாரி முன்னிலையில் தீவிரவாதிகள் சுட.  தன கண்முன்னே சுடப்பட்டு ஒருவர் இறந்ததை பார்த்த அதிர்ச்சியில் விறுவிறுவென சென்று தட்டில் கோப்பைகளை அடுக்கி அதில் நாயகி பயணிகளுக்காக நீர்நிரப்புகிறார்.  தீவிரவாதிகளில் ஒருவன் அவளை  தடுக்க முயல...

 "நீ உன் வேலய செய்யற.."  "என்னை என் வேலைய செய்ய விடுன்னு" சொல்லி பயணிகளுக்கு குடிநீர் வழங்க செல்கிறார்.

 "நீ ரொம்ப அழகா இருக்க என் பேரன கல்யாணம் பண்ணிகிரியா?" என சில நிமிடங்களுக்கு முன் தன்னிடம் கேட்ட வயதான பெண்மணி.  தற்போது துப்பாக்கி சூட்டில் தன் கண்முன்னே அவரது பேரன் இறந்தபோதும் அழகூட முடியாமல் துப்பாக்கி முனையில் அமர்ந்திருக்கிறார்.  பயணிகளுக்கு நீர் கொண்டு வரும் நாயகியை பார்த்து பெரும் குரலெடுத்து அழும் இடம்..

விறுவிறுப்பிற்கான கதைகளத்தில் இதுபோன்ற உணர்ச்சிமயமான காட்சிகள் இப்படத்திற்கான மிகப்பெரும் பலம்.


இரவு நேரம் ஆள்ஆரவமட்டற்ற சாலையில் செல்லும் காரில் செல்போன் பேசியபடியே நபர் வண்டியை செலுத்தும் நேரம் 11.13 மிதமான போதையில் அவனது உரையாடல் அடுத்த அரை நிமிடத்திற்கும் நீள செல்போன் அணைத்து பாதையில் கவனம் செலுத்தும் நேரம் காரின் எலக்ட்ரானிக் கடிகாரம் 11.14 க்கு மாறிய வினாடி காரின் பானேட்டின் மீது படாரென ஏதோ பொருள் விழ அதிர்ச்சியில் வாகனத்தை சுதாரித்து வனப்பகுதியை ஒட்டிய சாலையோரத்தில் நிறுத்திய கணம் கண்ணில்படும் அறிவிப்பு பலகை மான் சாலையை கடக்கும் பகுதி வாகனங்கள் மெதுவாக செல்ல அறிவுறுத்தப்பட மேலும் அதிர்ச்சியுடனே மெதுவாக கிழிறங்கி வாகனத்தின் மறுபுறம் சென்று பார்ப்பவன் முழுதுமாக நிலைக்குலைகிறான் காரணம் அங்கே விழுந்து கிடந்தது மானல்ல மனிதன்.


தன்னை சற்றே திடப்படுத்திகொண்டே அவனை எழுப்ப முயல முகம் முழுக்க சிதைந்த சடலத்தை கண்டவுடன் முழுதும்உறைந்துபோனவனுக்கு தூரத்தில் தெரியும் வாகனத்தின் ஒளி மேலும் கிலியை கிளப்ப அவசரமாக உடலை வாகனத்தை ஒட்டி மறைக்க எதிர்பார்த்தபடியே அந்த வாகனம் முன்புறம் சேதமடைந்த இந்த வாகனத்தின் அருகில் நிறுத்தி மான் கடந்து சென்றதாக உரையாடமுயல இவனது பதட்டமான நடவடிக்கையால் 911 எமெர்ஜென்சிக்கு இவன்முன்பே அழைத்தபடியே அந்த வாகனத்தில் வந்த பெண் கடக்க, அதிர்ச்சியில் எப்படியும் இன்னும் சில நிமிடங்களில் போலீஸ் வாகனம் வருவது உறுதியானதால் வேகமாக தனது வாகனத்தின் பின்புறம் அந்த உடலை மறைக்கமுயன்று இயலாமல் பெரும் சிரமத்தினூடே டிக்கியினுள் துருத்தி அவசரமாக வாகனத்தை கிளப்ப முயன்ற நொடி போலீஸ் வாகனம் தன்னருகே சைரன் ஒலியுடன் நிற்க வாழ்வின் பெரும் அபாயத்தை சந்தித்த மனதுடன் வாகனத்திலிருந்து தன்னை நோக்கி வரும் காவலரை சந்திக்க ஆயத்தமாகிறான்.


மான்தான் சாலையை கடந்து சென்றதாகவும் அதற்கும் தனக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லையெனவும் வாகனம் மட்டுமே சிறிது சேதமடைந்த தாக கூறவும் காவலர் வாகனத்தின் பதிவு மற்றும் ஓட்டுனர் உரிமம் கேட்க்க வாகன பதிவு மட்டுமே இருப்பதாக காவலரிடம் கொடுக்க காவலர் அவனை வாகனத்தில் இருந்து இறங்கி பின்புறம் வருமாறு அழைக்க தனது முழு வாழ்வும் இந்த கணமே எந்த பிழையும் இளைக்காமலே முடிவுக்கு வந்ததாக நடக்க சில பல கேள்விகளுடன் காவலரிடம் விடைபெறும் நொடியில் நிறுத்தப்படுகிறான்.


சென்றவன் காரணமறிய நின்று காவலரின் முகத்தை பார்க்க அதிர்ந்த பார்வையுடன் அவரது பார்வைபோன பகுதியை இவன் காண காவலரின் பார்வை அவனது காரின் டிக்கி பகுதியில் ஒட்டியுள்ள ரத்தத்தின் மீது...
மேற்கூறிய காட்சிகள் அனைத்தும் ஒன்றரை மணிநேர படத்தில் முதல் நான்கு நிமிடம் மட்டுமே இந்த நான்கு நிமிட சிறு அதிர்வையும் அப்படியே பார்வையாளருக்கு கடத்திய அதிவேக திரைக்கதை படத்தின் இறுதி நிமிடம் வரை தொடர்கிறது.


இந்த விபத்து அதை ஒட்டிய மேலும் நான்கு கிளை கதைகள் இந்த ஐந்து கதைகளும் சந்திக்கும் புள்ளி இந்த விபத்துக்கான காரணம் புரிபடும் இடம், ஐந்தாவது கிளை கதை தொடங்கும் நிமிடம் வரை கதையின் போக்கை யூகிக்க இயலா வண்ணம் அமையபெற்ற திரைக்கதை. விபத்து நடந்த சரியான நேரத்தில் இருந்து அதிகபட்சம் பத்து நிமிடங்களுக்கு முந்தய சம்பவங்களே ஏனைய நான்கு கிளை கதைகளுக்கும் என அமையப்பெற்ற மிக துல்லிய திரைக்கதை.

Tuesday, April 18, 2017







உலகிலேயே அதிக எண்ணைவளம் மற்றும் பணமதிப்பு மிகுந்த குவைத்தை அண்டை நாடான ஈராக் அவர்களுக்குள்ளான உலக எண்ணெய் பங்கீட்டு கொள்கையின் மாறுபட்ட கருத்தால் 1990 களில் ஆக்ரமிக்க அந்தகட்டதில் குவைத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த ஒரு லட்சத்து எழுவதாயிரம் இந்தியர்களை நமது நாடு நேரடியாக அங்கு சென்று உதவமுடியாத சூழலில் அத்துணை இந்தியர்களையும் UNOFFICIALLY AIRINDIA மற்றும் INDIAN AIRLINES மூலம் நமது நாட்டிற்க்கு அழைத்துவந்த இந்த செயலே இன்றும் உலக வரலாற்றில் அதிகப்படியான மக்களை ஓரே சமயத்தில் பாதுகாப்பாக ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்க்கு அழைத்துவந்த செயலாக கூறப்படும் இந்த உண்மை சம்பவமே இப்படம்.


தனது பணியில் தடாலடியான, கடமையே கண்ணான நாயகன் தான் இந்தியன் என்பதைவிட குவைத்தி என்பதையே பெருமையாக கருதுபவன், குறுகிய காலத்திலேயே உலக நாடுகளுக்கு எண்ணெய் பகிர்ந்தளிக்கும் தனது நண்பனது நிறுவனத்தின் ஒப்பந்தங்களையும் பெற்று தனது நிறுவனத்தை முதலாவது இடத்திற்கு வருபவன், நேரடியாக அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களுடன் தொடர்பில் உள்ளவன், அந்த நாட்டிலேயே பெரும் தொழிலதிபராக தன்னை நிலைநிறுத்தி கொண்டவனை இராக்கின் திடீர் ஆக்கிரமிப்பு அவனது வாழ்வில் (நமக்கும்) ஏற்படுத்தும் மிகப்பெரும் மாற்றமே இப்படம்.


மேற்குறிய நாயகனை பற்றிய எந்த தகவல்களுக்காகவும் தேவையற்ற காட்சிகள் ஏதுமின்றி முதல் பத்து நிமிடங்களிலே ஈராக்கின் ஆக்கிரமிப்பு துவங்க தாங்கள் குடும்பத்துடன் லண்டன் செல்ல தனது குடும்பத்துடன் சற்று நெருக்கமான தனது ஓட்டுனருடன் எம்பசி செல்லும் சில நிமிட காட்சிகளே இப்படத்திற்கான அஸ்திவாரம்.


பெரும் ரத்தமோ, வழியெங்கும் கிடக்கும் பிணங்களோ, குழந்தைகளின் அழுகுரலோ, பெண்களின் ஓலமோ இல்லாத அந்த நாட்டின் குடிமக்களை மட்டுமே கொள்ளும் போர். தனது சில நிமிட பயணத்தில் தவறியும் ஹிந்தி பாடல் தவிர்த்து அரபி பாடல்கள் மட்டுமே கேட்கும் நாயகனை குவைத்தி என நினைத்து வாகனத்தை இராணுவத்தினர் நிறுத்த தான் இந்தியன் என அவர்களிடம் அவன் கதறுமிடம், தனது கண்முன்னே தனது ஓட்டுனர் சுட்டுகொல்லப்பட அவனுள் ஏற்ப்படும் மிகப்பெரும் மாற்றமும் தன் குடும்பத்தையும் சேர்த்து தனது நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரின் குடும்பங்களையும் இந்தியா கொண்டுசெல்ல எடுக்கும் முயற்சிகள் அதற்காக எம்பசியில் இந்திய அரசாங்கத்தில் அதற்க்கான துறை அதிகாரிகளிடம் போராடுவதும் என்ன உங்க ஆபீஸ் டாய்லட் ரொம்ப அசிங்கமா இருக்கு சீக்கிரம் கிளீன் பண்ணுங்க என உறைவிடம் கூட அற்று தனது நிறுவனத்தில் அடைக்கலம் புகுந்தவன் அதிகாரமாக கூறும் போதும் அவனிடம் காட்டும் கண்ணியம் பெரும்பாலும் தடாலடி பாத்திரத்தில் மட்டுமே பார்தோருக்கு இதில் அசத்தல் அக்க்ஷய்.


‘’மிக சிறந்த வியாபாரி நல்ல மனிதனாக முடியாது நல்ல மனிதன் நிச்சயமாக சிறந்த வியாபாரியாக இயலாது’’ என்பது போல தனது நண்பனது நிறுவனத்தின் ஒப்பந்தங்களையும் தன் வசமாக்கும் புத்திகூர்மை, அனைத்து மக்களையும் காக்க நினைக்கையில் நடைபெறும் சிறு தவறுகளுக்கும் நிலைகுலைவது என இரு வேறு வடிவங்களை ஓரே பாத்திரத்தில் மிக சரியாக கொடுக்க முயன்றுள்ளார் அக்க்ஷய்.

இறுதி பத்து நிமிட காட்சி AWESOME




தனது சகோதரியின் திருமணத்திற்காக பெங்களூரில் பணிபுரியும் நவநாகரிக மங்கையான நாயகி சொந்த ஊருக்கு (கேரளாதான்) திரும்ப அங்கு தனது திருமணத்திற்க்கான அடித்தளம் அமைவதும் மேலும், தனது தாயின் அதே கண்டிப்பும் சகோதரியின் திருமண விழாவிலிருந்தும் பாதியிலே வெளியேறி பழைய பணிக்கும் செல்ல விருப்பமின்றி நண்பியின் மூலம் இசை பயில முற்படுகிறார். அவசரத்திற்கு அறையேதும் கிடைக்காத சுழலில் ஒரு அறையில் ஏற்கனவே தங்கிருந்தவரின் உடமைகளுடன் வேறு அறை கிடைக்கும் வரை தங்கும் சூழல் அந்த உடமைகளும் அவரை பற்றி கேள்விப்படும் மிகச்சுவாரசிய சம்பவங்களும் அவரை காணும் ஆவல் உந்தப்பட்டு நாயகி மேற்கொள்ளும் பயணமே இந்த திரைப்படம்.


நாகரிக இத்தலைமுறை பெண்ணின் பாத்திரத்திற்கு நூறு சதவிதம் பொருந்தும் பார்வதி பாத்திரமே இக்கதையின் உயிரோட்டத்திற்கு அடிநாதம். படம்நெடுக அத்துணை க்ளோஸ்அப் ஷாட்களிலும் அந்த கதையின் அப்போதைய மனநிலையை தன்னுள் ஏற்படும் மாற்றங்களை ஒரு சிறு பார்வையால், ஏளன புன்னகையால், தனது உடை, கூந்தல் அலங்காரம் என நூல் அளவு விலகாமல் அச்சஅசல் பிரதிபலிக்கிறார்.


விருப்பமே இன்றி சரியாக விளக்குகள் எறியாத சுவரின் வண்ணங்கள் பெரும்பாலும் உதிர்ந்த பழைய கட்டிடத்தின் சிறு அறைக்கு செல்லும் படிகளைஒட்டிய சுவர்களில் தெரியும் வித்தியாச மனதை கவரும் ஓவியங்களை கண்டவுடன் அதுவரை சிறு தயக்கத்தோடே அங்கு செல்லும் பார்வதி அதுவரை இருந்த அவரது முகம் நடை என ஒரு ஓவியத்தில் அவரிடம் ஏற்படும் மாற்றம். இது போன்று நமது அன்றாட வாழ்வில் நாம் கவனிக்க தவறிய சிறு சிறு சந்தோசங்களும், சகமனிதனை பரவசபடுத்த நாம் செலவழிக்காத மிக சில நிமிடங்களின் மிக சுவாரசிய தொகுப்பே இந்த திரைப்படம்.




இந்த கதையின் பாத்திரங்களின் மூலம் நமக்குள் ஏற்படும் எந்த மாற்றங்களையும் ஒரு ஷாக்சோபோன், ஒரு வயலின், ஒரு புல்லாங்குழல் என சாதராண இசை மூலம் பரவசநிலைக்கே கொண்டு செல்லும் கதையை ஒட்டிய எளிமை இசை & ஒளிப்பதிவு இப்படத்திற்கான ஆகச்சிறந்த பலம்





இந்திய சினிமாக்களுக்கும் பார்வையாளர்களுக்கும் காதல் என்ற அத்யாயம் இல்லாத சினிமாவோ முக்கிய காட்சிகளோ காண்பது ரொம்ப கஷ்டம்ம்ம்ம்ம் அவ்வாறு வரும் காட்சிகளும் வசனங்களும் புதிதாகவும் ரசிக்கத்தக்க வகையிலும் முன்னர் வந்த படங்களின் பாதிப்பும் இல்லாமல் புதிதாக காட்சிப்படுத்துவது அவ்வளவு எளிதான விசயமல்ல அப்படி இந்த படமும் முந்தய சினிமாக்களின் பாதிப்போடு வந்தாலும் ரசிக்கத்தக்க காட்சிப்படுத்தல் மற்றும் பாத்திரங்களின் சரியான வெளிப்பாடு என முழுநீள படத்தையும் மனதிற்கு நெருக்கமாக உணர செய்த காதல் ரசம் மட்டுமே உள்ள சூப்பர் விருந்து.


கம்யுனிசத்தின் வேர் இந்தியாவின் மற்ற மாநிலங்களை காட்டிலும் கேரளத்தின் கடைகோடி வரை ஆழமாக வேர்விட முக்கிய காரணமான இந்திரா காந்தி அம்மையாரின் ஆட்சியின் காலகட்டமே இப்படத்திற்கான கால கதைகளம் காதலை அடித்தளமாக கொண்ட கதையில் கம்யுனிச அரசியலை பயன்படுத்திய அளவு பிரமிக்கும் அளவு துல்லியம்.




கதையின் பாத்திரங்களும் பயன்படுத்தப்பட்ட அளவும் கதையை ஒட்டிய காட்சி அமைப்புகளும் நிகழும் நேரம் லோகேசன் பருவநிலை மாற்றங்களை மழையை தங்களது கதைக்கு சாதகமாக மாற்றிகொண்டது என அனைத்தும் துல்லியம்.


புது மழையால் பச்சை பசேல் பூமியும் மெல்லிய காற்றால் கோலமிட்டு செல்லும் செந்நீர் ஓடும் ஆற்றிலிருந்து அந்த காற்றை போலவே மெதுவாக ஜூம் அவுடில் லேசாக பாசி படர்ந்த சற்று குறுகிய படித்துறையில் நின்றிருக்கும் காதலர்கள் (ப்ரிதிவி&பார்வதி) பேச்சினிடையே மழைவர துவங்க தனது கைகளை குவித்து நீரை சேமிக்க தனது கைகளுக்கு நேர்கீழே நாயகன் கைகளை நீட்ட தனது கைகளால் சேமித்த நீரை அவரது கைகளுக்கு ஊற்ற இந்த காட்சிகளுக்கு முந்தய அவர்களது உரையாடலின் (வெறும் கடிதங்கள் மூலமே காதலை வளர்க்கும் ஒன்றிரண்டு நாட்களுக்கு மட்டுமே விடுமுறையில் ஊருக்கு வந்தாலும் சில மணித்துளிகள் கூட நாயகனிடத்தில் செலவிடமுடியா குடும்ப சூழல்) வலியை பிரிவின் தவிப்பை தன் கைகளில் சேமித்த நீரை தனது நினைவுகளாக நாயகனின் கைகளில் ஊற்ற அதை பத்திரமாக சேமிப்பதன் அடையாளமாக தனது விரல்களை இருக்கி மூடிக்கொள்ளும் ஒற்றை காட்சி ............

Monday, April 17, 2017







WHEN YOU LOVE SOMEONE YOU CAN’T JUST THROW IT AWAY.

உங்களுக்கு நெருக்கமான எழுத்தாளருடைய புத்தகத்தின் முதல் பிரதியை ஒரு வீக்கெண்டில் தனிமையில் வாசிக்க துவங்குகிறீர்கள். அதன் முதல் அத்தியாயமே உங்களை பேரதிர்ச்சிக்கு உட்படுத்தினால், தொடர்ந்து வாசிப்பீர்களா? அல்லது மனதை ஆசுவாசப்படுத்தி கொண்டு சிறிது கால இடைவெளிக்கு பின் தொடர்வீர்களா? 
   

இந்த கதையில் நாயகி பாத்திரம் இருவது ஆண்டுகளுக்கு முன் பிரிந்த  தனது முன்னாள் கணவர். அவர் எழுதி வெளியீட்டுக்கு தயாராக உள்ள புத்தகத்தின் முதல் பிரதியை இவருக்கு அனுப்புகிறார். தனது இந்நாள் கணவரும் அலுவல் தொடர்பாக வெளியூர் சென்றுவிடுகிறார். மகளும் வார விடுமுறையை கொண்டாட நண்பர்களுடன் சென்றுவிட, தனிமையில் அந்த புத்தகத்தை வாசிக்க துவங்குகிறார்.


நாம நினைத்தது போல அந்த கதையில் தனது முன்னாள் கணவர், மனைவியாக இவர், மற்றும் தனது மகள் பாத்திரங்களாக திரையில் வருகிறார்கள். அதில் சுவாரசியம் அந்த கதை ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் பார்வையாளனுக்கு என்ன உணர்வை கொடுக்குமோ? அதே உணர்வை அந்த நாயகியும் வெளிப்படுத்துவது, ஒரு கதையை படிக்கும் வாசகனின் அந்த நொடி “REACTION” நான் இதுவரை திரையில் பார்த்ததாக நினைவில்லை. அதும் முழு கதைக்கும் கதையின் ஒவ்வொரு திருப்பதிற்க்கும் அந்த புத்தகத்தை வாசிக்கும் நாயகியாக “SUSAN MORROW” பாத்திரத்தில் வரும் “AMY ADAMS”   உடல்மொழி அட்டகாசம்.     


தற்போதைய கணவர் மற்றும் மகளுடனான AT PRESENT கதை. தனது முதல் கணவருடனான அறிமுகம், காதல் பூத்த தருணங்கள்,  அவர்களின் பிரிவு என போகும் பழைய கதை. முன்னால் கணவரின் புத்தகத்தில் இவர் படிக்கும் கதை என இந்த மூன்று கதைகளும் அடுத்தடுத்து வரும்படியான துளியும் குழப்பமில்லாத திரைக்கதை.
இவ்வாறு அடுத்தடுத்து வரும் இரண்டு மூன்று கதைகள் கொண்ட படங்களில் அந்த கதைகள் ஒவ்வொரு அத்தியாயமாக அதன் தொடர்ச்சி விடுபடாமலே வந்தாலும் பெரும்பாலும் பார்வையாளனை குழப்பாத வகையில் அமைவது வெகுசொற்பமே. ஆனால் இந்த படத்தில் நாயகி புத்தகத்தில் படிக்கும் கதை மற்றும் இந்நாள் கணவன் & மகளுடனான கதைகள் மட்டுமே அதன் தொடர்ச்சி விடுபடாமல் அமையப்பெற்றிருக்கும். ஏனெனில் அவை தற்பொழுது நிகழுபவை.
தனது முன்னால் கணவனுடனான கதை அவ்வாறு தொடர்ச்சியாக அமையாததற்கு காரணம். நமது பழைய எந்த சம்பவங்களை நினைத்தாலும் அவை நமக்கு தொடர்ச்சியாக அடுத்தடுத்த நாட்களில் இது இது நடந்ததென கோர்வையாக வராது. அதே போல இந்த கதை மட்டும் நாயகியின் நினைவடுக்கில் இருந்து வெளிப்படுவதால் அவையும் தொடர்ச்சியாக வராது.


இருப்பினும் இந்த மூன்று கதைகளில் பெரும்பான்மை பார்வையாளனை கவர்ந்தது நாயகியின் முன்னால் கணவருடனான கதையே. காட்சிகளில் தொடர்பின்மை இருப்பினும் எந்த இடத்திலும் நம் முகத்தில் குழப்ப ரேகை உருவாகாமல் செய்தது எடிட்டிங்.                                
இவரது முன்னாள் கணவனுடனான காதல் அத்தியாயங்களே நாம் இளைப்பாறும் பூந்தோட்டம். ஏனெனில் அவர் புத்தகத்தில் படிக்கும் கதை நம்மை வரட்சியான பொட்டல் காட்டில் திகிலுடன் அலையசெய்யும். “JAKE GYLLENHAAL” அமியின் முன்னால் கணவனாகவும், அந்த புத்தகத்தின் நாயகன் பாத்திரத்திலும் பிரமாதபடுத்தியுள்ளார்.   

Tuesday, April 11, 2017




படம் துவங்கிய முதல் நொடியில் வரும் இசை ஏதோ அமானுசிய கதையோ என நிறுத்த முற்ப்படுகையில்.  கிட்டத்தட்ட ஐந்தாவது நொடியில் வரும் பியானோவின் பின்னணி ஒலி ஒன்று போதும் அடுத்த இரண்டு மணிநேரமும் கடைசி ஷாட் வரை இந்த கதையை ரசிக்க.
 
1986 - KHANDWA வட இந்தியாவிலுள்ள சிறு நகரில் துவங்கும் கதை. 10  மற்றும் 6 வயது வயதுடைய (காக்கா முட்டை) சிறுவர்கள்.  அதே போல இரயிலில் நிலக்கரி திருடி அதில் வரும் சிறு தொகையை குவாரியில் கல் உடைத்து பிழைக்கும் தனது தாயிடம் கொடுப்பது என ஏழ்மையிலும் நிறைவாக தனது குட்டி தங்கையுடன் நாட்களை கழிக்கின்றனர்.
 
எல்லாம் நல்லவிதமா போனாதான் சினிமாகாரங்களுக்கு பிடிக்காதே. ஒரு நாள் தங்கையை பார்த்து கொள்ளும் படி சொல்லி தாய் பணிக்குசெல்கிறார். அருகில் சில கிலோமீட்டரில் உள்ள ரயில்வே ஜங்ஷனில் கிடைக்கும் வேலைக்கு கிளம்பும் அண்ணனிடம் அடம் பிடித்து கிளம்புகிறான் தம்பி சரூ. அங்கு தூங்கி வழியும் சரூவை பிளாட்பாரமில் படுக்கவைத்து விட்டு பணிக்கு செல்கிறான்.
குளிர் அதிகமாக அருகில் நின்று கொண்டிருக்கும் ரயிலில் ஏறி படுத்துகொள்ளும் சரூவிற்கு தெரியாது அந்த காலி ரயில் வழியில் எங்கும் நிற்காமல் அடுத்த இருநாட்கள் 1600 கிலோமீட்டர் பயணித்து கொல்கத்தா சென்றடைய போவது. அவ்வாறே நடக்க தனது பாசமான தாய், தங்கை, அண்ணனை பிரிந்த இந்த சிறுவனது அடுத்த 25 ஆண்டு கால வாழ்க்கையே இந்தப்படம். 
 
இதே போல சிறு வயதில் தொலைந்த சிறுவன் சமூக அமைப்பின் மூலம் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தம்பதியருக்கு தத்து கொடுக்கப்பட்டு. பின் 25 ஆண்டுகளுக்கு பின் தனது குடும்பத்தை சந்தித்த உண்மை நிகழ்வை அடிப்படையாக கொண்டு படைக்கப்பட்ட அற்புத சினிமா. கடந்த வருட ஆஸ்காரில் ஆறு பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு “BEST SUPPORTING ACTOR” விருதை தட்டி சென்ற படம். GOLDEN GLOBE மற்றும் BAFTA விழும் இதே விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.
 
பிரிவு, சோகம், ஏமாற்றம் என அனைத்தையும் கலந்து பார்வையாளனின் மனதை வெகு எளிதில் கணமாக்க அனைத்து இலக்கணங்களும் அமையப்பெற்ற கதை. ஆனால் மிகநேர்மையாக கதையின் போக்கை எந்த இடத்திலும் வளைக்காமல், அதன் இயல்பிலிருந்தே சொன்ன வகையில் நம் மனதில் இக்கதையின் பால் மிகப்பெரும் ஈர்ப்பு ஏற்படுத்துகிறது. கதைத்தளம் இந்தியாவில் நடப்பதால் நாம் பார்ப்பது மராத்தி போன்ற ஏதோ ஒரு இந்தியபடம் என்ற நினைவே வருமன்றி ஹாலிவுட் படத்திற்கான வண்ணம் ஒரு ஷாட்டில் கூட வெளிப்படுத்தாததே இதன் உருவாக்களுக்கான மிகப்பெரும் வெற்றி.

 சரூ ஆஸ்திரேலியா அடைந்து அந்த தம்பதியர் அவனை தனது மகனாக ஏற்றுக்கொண்டு, அந்த மேல்தட்டு வாழ்க்கைக்கு மனம் பழகியபின்னும் தனது ரத்த சொந்தங்களை நினைத்து கொண்டே இருக்க வேண்டுமெனில் அவர்களுடனான காட்சிகளில் அந்த சிறுவன் இருக்கும் முதல் 20 நிமிட காட்சிகளை பற்றி மட்டுமே தனியே ஒரு பதிவு எழுதலாம். 

ஏழ்மையிலும் அந்த தாய் தனது குழந்தைகளிடத்தில் நடந்துகொள்ளும்  பாங்கு. ஒரே காட்சிதான் என்ற போதிலும் தனது வருமானத்தில் வீட்டுக்கு பால் வாங்கிவரும் சகோதரனுடன் ஒரு பூவை கொண்டுவந்து தனது குட்டி சகோதரிக்கு கொடுக்கும் காட்சி. ஒரு வேலை உணவிற்காக கொல்கத்தா வீதிகளில் அலையும் பொழுதில் கிடைக்கும் சிறு உணவையும் தனது தாயுடன் பகிர்ந்து கொள்வதாக நினைத்து சிலாகித்து கொள்வது. தனக்கு எல்லாமுமாக இருந்த அண்ணனை நினைத்து அனைத்து நிகழ்வுகளிலும் நினைத்து கொள்வது, குறிப்பாக இந்திய நண்பனது வீட்டில் நடக்கும் விருந்தில் ஜிலேபியை பார்த்து கலந்குமிடம் என படம் முழுக்க சோபிக்கிறார் DEV PATEL. 

SLUM வகையறா கதை அனைத்துமே அவர்களை அதிக அழுக்குடனும், அந்த பகுதியை எவ்வளவு அருவருப்பாக காட்டபடுகிறதோ அதுவே நேர்மையான, யதார்த்தமான கதை என எடுத்து கொள்வார்களோ என்னவோ? ஆனால் சரு என்ற சிறுவனது பார்வையில் இந்த அனைத்து பகுதிகளையும் அதற்கே உரிய அழகியலுடன் காண்பித்த வகையில் GREIG FRASTER காமெராவுக்கு கைகுலுக்கல்கள்.

Sunday, April 9, 2017






ஓவியம் வரைவதை தொழிலாக கொண்ட மனமொத்த தம்பதிகள்.  தங்களது ஓவியத்திற்கான அங்கீகாரதிற்க்கான போராட்டத்தில் தனது கணவனையே பெண் மாடலாக்கி வரைந்த ஓவியத்திற்கு கிடைத்த அங்கீகாரத்தால் அவளின் கனவான பாரிஸ் வரை செல்லும் வாய்ப்பு.  இதனிடையே தனது சிறு வயதில் மனதின் ஓரத்தில் ஒளிந்திருந்த அவனது பெண் உணர்வு மெல்ல மேலேலகிறது. முழுதாக தன்னை பெண்ணாக உணர அவனது மனைவியின் அதற்க்கு பின்னான செயல்பாடுகள்??


எந்த படமும் ஆரம்பித்த  முதல் சில நொடிகளே தீர்மானிக்கும் நான் முழுதும்  பார்க்க  தகுதியானவனா? இல்லையா? என்பதை.  இப்படத்தின் மீதான எனது ஈர்ப்பு  முதல் நொடி டைட்டில் கார்ட்டில் இருந்தே  துவங்குகிறது. சமீபத்திய எந்த திரைப்படத்திலும் இந்த அனைத்து அம்சங்களும் உள்ள டைட்டில் கார்ட் நான் பார்த்ததில்லை.




நாயகன்: EDDIE REDMAYNE 

 வீட்டில் தனது மனைவியின் உள்ளாடையை முதல் முறை தனது குழந்தையை தொடும் ஒரு தாயின் பாசத்தோடு கையாள்வதும், மனைவியின் உதட்டு சாயத்தை காதலுடன் தனது விரல்களால் சரிசெய்யும் போதும், தன் மனைவியின் உடையை போர்த்தியபடி ஓவியத்திற்கு அமரும் இடத்தில் அவனது விரல்கள் அந்த உடையுடன் ஒரு (ஊமை) காதல் அத்யாயமே நிகழும் நொடிகளில், தான் பெண்ணாகவே வாழ விரும்புவதை தனது மனைவிக்கு உணரவைக்க துடிக்கும் நிமிடங்கள், மருத்துவமனையில் ஒரு கர்ப்பிணியை காணும் போது தன்னை அறியாமல் தனது கைகளால் வயிற்றை தடவும் மைக்ரோ நொடிகள் என உடலில் உள்ள ஒவ்வொரு அனுவிலும் பெண்மை நிரம்பிய ஒருத்தி அல்லது ஒருவனால் கூட இந்த பாத்திரத்திற்கு இவ்வளவு முழுமை சேர்க்க இயலாது என்பது சத்தியம்.

நாயகி : ALICA VIKANDER

முழுக்க நாயகனுடனே பயணிக்கும் கதையில் சிறு சிறு மாற்றம் முதல் அவரை சார்ந்தே இயங்கும் திரைக்கதை ஆனாலும் நம்மை அனைத்து காட்சியிலும் கவனிக்கவைத்த ஒன்றே இவரின் உழைப்பிற்கான சான்று
மொத்தத்தில் இது உண்மையான வேற லெவல் சினிமா.

Thursday, April 6, 2017





 பதினேழு வயதில் கடத்தப்பட்டு ஒரு சிறு அறையில் சிறைவைக்கப்பட்ட பெண்/  ஏழு வருடங்களாக வெளி உலகையே காணாமல் கடத்தப்பட்டவனால் குழந்தைக்கும் தாயாகி அச்சிறுவனும் தனது வாழ்வின் ஐந்து வருடங்களும் வெளி உலகென்ற ஒன்றையே  தனது தாய் எவ்வளவு எடுத்து கூறியும் நம்பாமல் அந்த அறை மட்டுமே உண்மை உலகமென நம்பி இருக்கிறான். கடத்தப்பட்டவனிடம் இருந்து தப்பித்து தனது மகனுக்கு உண்மை உலகை அறிமுகப்படுத்த போராடும் அபலை தாயின் உணர்ச்சி போராட்டமே இந்த திரைப்படம்.


அந்த அறையில் காலை கண்விழிக்கும் மகன் எழுந்தவுடன் அந்த அறையில் உள்ள TV,  WASH BASIN, TEDDY BEAR க்கு  Good Morning சொல்லும் ஆரம்ப காட்சியே நம்மையும் அந்த குட்டி அறைக்குள்ளே சிறைப்படுத்தும்.  படத்தின் முதல்பாதி முழுதும் அந்த சிறு அறைக்குள்ளே வெறும் இரு பாத்திரங்களை கொண்டே நகர்ந்தாலும் நம்மால் சிறு சோர்வும் சலிப்பும் ஏற்படுத்தாத காட்சிகளும் வசனங்களும் இப்படத்திற்கு ஆகபெரும் பலம்.


ஜன்னல்களற்ற அந்த அறையின் மேல் பகுதியல் சிறு கண்ணாடியின் மேல் விழுந்த காய்ந்த சருகை தன் மகனுக்கு காட்டி வெளிஉலகை உண்மை என நிருபிக்கமுயலும் இடம், பதினேழு வயதில் தொலைந்த மகள் ஏழு வருடங்களுக்கு பின் ஐந்து வயது மகனுடன் காணும் தந்தை முகத்தை திருப்ப கலங்கிய விழி கனத்த இதயத்தோடு தனது தந்தையை காணவைக்கும் இடம் என பிரமாதப்படுத்தும் தாய் பாத்திரம்.


Wednesday, April 5, 2017


குடும்பத்தில் தலைமகனாக பிறந்து தனது மூன்று தங்கைகளுக்காக வெளிநாடு (துபாய்) சென்று பின் தன் மனைவி மற்றும் வாரிசுகளுக்காக என தனது முழு வாழ்வையும் வெளிநாட்டிலேயே தொலைத்த விக்ரமன் டைப் படத்தில் மிக அழகான காட்சி அமைப்பு மற்றும் மம்மூட்டி என்ற அசகாய சூரனின் யதார்த்த பெர்பார்மன்ஸ் மட்டும் இப்படத்தை நம்மை அடுத்த கட்டத்துக்கு அழைத்து செல்லும் மாயம்..


Munnariyippu ல் 2014 இல் ஒரு மெச்சூர் நடிகராக தன்னை பல படங்களுக்கு பின் நிருபித்த மம்மூட்டி இப்படத்தில் அடுத்த கட்டத்திற்கு அனாயசமாக செல்கிறார்.


போன் பூத் வரிசையில் நின்றபடி அறிமுகமாகும் காட்சி அவரது தாய் மற்றும் புது மனைவி அவர்கள் கிராமத்து மளிகை கடையில் காத்திருக்க அம்மாவிடம் பேசியவுடன் இருப்பா நளினிட கொடுக்கறேன் சொன்னவுடன் அதுவரை உன்கால் இப்ப எப்டி இருக்கு, ஊர்ல மழை வந்துச்சா வரலையானு கம்பிரமா பேசனவன் அவன் மனைவிடம் பேச ஆரமிக்கும் நொடியில் மாறும் உடல் மொழி குலையும் குரல் என மம்முட்டி ppppphhhaaaaaaaaa.


விடுமுறைக்கு ஊருக்கு கிளம்பும் மம்மூட்டி குடும்பத்தினருக்கு அவனது நண்பன் பிஸ்தா வாங்கித்தர இதை நா கடைல பாத்ததோட சரினு வாங்கியவர் ஊரில் தன் தங்கையிடம் கொடுத்து எல்லாருக்கும் கொடுன்னு சொல்ல அவங்க தனது கணவர் தங்கைகள் அவர்களது கணவர்கள் மற்றும் குழந்தைகளிடம் கொடுத்துவர அவர்களது தாய் நாராயணன்க்கும் கொடுனு சொல்ல அண்ணாதான் ஊர்ல இருவத்தி நாலு மணிநேரமும் இததான சாப்டுதுனு சொல்லும் காட்சியில் எந்த பதிலும் சொல்லாம ஒரு சின்ன சிரிப்புல நம்மளையும் பாவி எப்படி அடுத்த காட்சிக்கு இழுத்துட்டு போனார்னே தெரியல இந்த மம்மூட்டி.


இதுதான் கடைசி முறை அடுத்த முறை வந்தால் திரும்ப போற வேல கெடயாது என பல பல இடங்கள் வெளிநாட்டில் வாழும் அனைத்து நண்பர்களும் பார்த்த அனுபவித்த காட்சிகளின் தொகுப்பே இந்த படம்.

Search This Blog