Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Friday, December 28, 2018



பார்த்ததில் மிகவும் ரசித்தது: 141.
. 
இப்படத்தின் அறிவிப்பு வெளியானதும். படைப்பாளிகள் மட்டுமின்றி ரசிகர்கள் அனைவரின் மனதிலும் சில நொடிகளேனும் இப்படத்தை பற்றிய ஏதேனும் சில நிகழ்வுகளை மனதிரையில் உருவகபடுத்தி இருப்போம். அவை பெரும்பாலும் சஞ்சயின் தீவிரவாத பக்கங்களை சார்ந்ததாகவே இருக்கும். காரணம் இந்த நடிகனின் கதையில் பெரும் சூவாரசியம் ஒளிந்திருக்கும் பக்கங்கள் அவை. இதற்க்கு முன் வந்த அனைத்து BIOGRAPHY கதைகளைகாட்டிலும் அதிக ஆர்வம் இந்த படத்தின் மீது ஏற்பட மிகமுக்கிய காரணம். இவரை பற்றிய அனைத்து தகவல்களும் நமக்கு முன்பே பரிட்சயம் என்ற எண்ணமே. பெரும்பாலானோர் இப்படத்தை தவறவிட்டதற்கும் இதுவே மூலகாரணியாகும்.


இந்த கதையை எடுக்க இவர்கள் முன் இருந்த மிகபெரும் சவால் மொத்த பார்வையாளருக்கும் இப்படத்தின் கதை தெரியும் என்பதே. தெரிந்த கதையையே மீண்டும் திரையில் ஒருமுறை பார்க்க வேண்டுமா என்ற எண்ணமும் பெரும்பாலோருக்கு ஏற்ப்பட வாய்ப்புள்ளது. நாம் அனைவரும் இக்கதையை எந்தெந்த கோணத்தில் காட்சிபடுத்தி இருப்பார்கள் என்று கணித்திருந்தாலும். நம் அனைவரின் யூகங்களையும் பொய்யாக்கி SANTHOSHKUMAR HIRAANI இக்கதையை தொடுத்த விதமே இவரின் தனித்துவம். இவரின் முந்தைய எந்த கதைக்கும் தேவைபடாத அளவு எடிட்டிங் துறைக்கு பெரும்பங்கு பொறுப்பு கொடுக்கும் கதை. 


படத்தின் துவக்க நிமிடத்தில் இருந்து இறுதி ஷாட்வரை நம்மை அதே ஆர்வத்தில் சற்றே குழைந்து படம் நெடுகிலும் உருக வைக்க இப்படியான வெகுசில நடிகர்களுக்கு மட்டுமே சாத்தியம். நம் நினைத்ததும் சட்டென நம் நினைவில் வரும் சஞ்சயின் அந்த நான்கைந்து தோற்றங்களை அப்படியே கண்முன் கொண்டுவந்தது மட்டுமின்றி அந்த இடப்பக்கம் சற்றே திரும்பிய வாக்கிலே இருக்கும் அவரின் கழுத்தும். கால் பாகம் இடுங்கிய பார்வையையும். உடற்பயிற்சியின் காரணமாக அகன்ற தோள்களால் உடலோடு ஒட்டாமல் சற்றே விலகியேயிருக்கும் அவரின் கைகளும் மற்றும் தோள்கள் சற்றே சாய்ந்தபடியே நடக்கும் அந்த எகத்தாள நடையையும் இந்தஅளவு வேறு எந்த நடிகனாலும் உள்வாங்கி சாத்தியபடுத்தி இருக்க இயலுமா என்பது கேள்விக்குறி.


ஒருவேளை இவர்மீது பதிந்த அந்த தீவிரவாதி கரை உண்மையாக இருக்குமோ என முன்னாபாய் படத்தைகூட இன்றுவரை பார்க்காமல் தவிர்த்து வரும் என்னை போன்றவர்களுக்கு. இந்த படத்தின் மூலம் மிக தெளிவான ஒரு பார்வையை நம் மக்கள் உடனே ஏற்றுகொள்ளும் வகையில் மிக நெகிழ்ச்சியாகவே தொடுத்திருக்கிறார் இயக்குனர். அப்பா, அம்மா, காதலி, மற்றும் நண்பர் என மிக சில பாத்திரங்கள் மட்டுமே முழு கதையையும் ஆக்கரமித்திருப்பினும்  அவை நமக்கு முழு கதையிலும் பெரும் ஆர்வத்தை மட்டுமே ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட திரைக்கதை. அதிலும் சஞ்சயின் நண்பன் பாத்திரம் ஏற்றிருக்கும் MASAAN மற்றும் RAAZI புகழ் VICKYKAUSHAL படம் நெடுகிலும் நம்மை நெகிழ செய்ததில் பெரும்பங்கு.


இப்படியான கதையை எங்கிருந்து துவங்குவது என்பதில் துவங்கி பெரும் சர்ச்சையான இவரின் தீவிரவாத முகத்தை எவ்வாறு நியாயபடுத்த அல்லது எவ்வாறு கூறினால் அது நம்மை சமாதானபடுத்துமோ அந்த வகையில் வடிவமைத்த திரைக்கதை. இது PK படத்தின் திரைக்கதை உழைப்பிற்கு சற்றும் சளைத்ததல்ல. ரன்பீர் எனும் மஹா அசுரனின் பெரும் பாய்ச்சல் இப்படம். குழந்தையின் கண்களில் சட்டென அரும்பும் கண்ணீரில் அது செய்த தவறுகள் அனைத்தையும் மறந்து வாரியணைக்கும் தாயை போல். சஞ்சயின் அனைத்து தவறுகளையும் மறந்து மன்னித்தே ஆகவேண்டிய சூழலுக்கு நம்மை ஆட்படுத்திறார் ரன்பீர்.


1.இவரின் துவக்க காலம். அதிலேயே போதைக்கு அடிமையாகி   அதிலிருந்து மீண்டுவருவது.
2. 12 வருடங்களுக்கு மேல் முன்னணி நாயகர்களில் ஒருவராக வளம் வரும் பகுதி.
3. ஆயுதம் வைத்திருந்த சர்ச்சையில் முதன்முதலில் சிக்கியது.. 
4.  தீவிரவாதி பழியுடன் இறுதியில்சிறை சென்று மீண்டு வருவது



இதில் சர்ச்சையான இவரின் மூன்று காலகட்டங்களை மட்டுமே எடுத்துகொண்டு அதற்க்கு மிக தெளிவாக இவர் பக்கத்து நியாயங்களையும். பத்திரிகை மற்றும் ஊடகங்களின் அதிகபிரசிங்கி தனங்களையும். சஞ்சயின் வாக்குமூலம் மற்றும் தீர்ப்பின் முழு விவரங்கள் அனைத்தையும் RKH தனக்கே உரிய அதே சுவாரசியம் குறையாத பாணியில் முந்தைய படங்களை போலே வழங்கி உள்ளார். சஞ்சய்தத் காலத்திற்கும் கடமைபட்டிக்க வேண்டுமெனில் அது ரன்பீர் மற்றும் RKHக்கே..

TRAILER LINK:

https://www.youtube.com/watch?reload=9&v=rRr1qiJRsXk

Tuesday, December 18, 2018





பார்த்ததில் மிகவும் ரசித்தது: 140.

ROMA  (2018) – SPANISH – பேரனுபவம்.

அதிகமா வலுவான கதையும், அதிக வசனங்களும் கொண்ட படங்களை பார்த்து பழகிய நமக்கு. காட்சிக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்து பெருசா எந்த அதிரடி திருப்பங்களும் இல்லாத ஏதாவது ஒரு எளிய மனுசனோட வாழ்க்கையின் சில பக்கங்கள மட்டும் ஒரு படமாக்குவது இவர்களின் பாணி.. அவங்களோட நிதானமான கதை நகர்த்தும் யுக்தி காட்சிகளின் மேல அவங்களுக்கு இருக்கும் நம்பிக்கைதான். என்ன ஒரு மழையை, ஒரு பாத்திரம் நடந்து போவதை கூட ஒரே ஷாட்டில் ரொம்ப மெதுவா நீட்டி சொல்லிருப்பாங்க. எதனால இவ்ளோ DETAILING ஒவ்வொரு காட்சிக்கும். இது பார்வையாளருக்கு சலிப்பை ஏற்ப்படுத்தாதா? இல்ல அது நம்ம அந்த காட்சிகளோட ஒன்ற செய்ய யுக்திதான்.

 எப்படினா..!

இந்த படம் போலவே ஒரு வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணை பற்றிய கதையில் நம்ம சினிமாவில் அந்த வீட்டோட முக்கிய பெண் பாத்திரம். இந்த பெண்ணோட தலையை ஆறுதலா தடவியபடி அவங்க வீட்டுக்கு வரும் விருந்தினர்களிடம் “இவளும் எங்க வீட்ல ஒருத்தி மாறிதானு” சொல்றபோல ஒரு காட்சி கண்டிப்பா வரும். அதுலயே நாம அந்த பாத்திரத்தோட தன்மை, குணாதிசியம்னு ரொம்ப எளிமையா புரிஞ்சிக்கலாம். ஆனா இதே இந்த படத்தோட ஒரு காட்சியில இரவு பணி முடிஞ்சி தன்னோட அறைக்கு அந்த பெண் போவாங்க அப்ப அந்த வீட்டோட லைட் எல்லாம் OFF பண்ணிட்டே போவாங்க. அதும் ஒரே ஷாட்டில் ஒரு நிமிஷம் வரை போகும். இது காட்சிவழியே அந்த பொண்ணோட வேலையின் சுமையை அவங்க அக்கறையை புரியவைக்கும் ஒரு யுக்திதான். அந்த காட்சிக்கு இடையே சில வினாடிகள் வரும் ஒரு காட்சியும் இருக்கும்.


இரவு வீட்டிற்கு வந்த அந்த வீட்டோட தலைவரு ரூம்ல மனைவிட்ட சத்தம் போட்டுட்டு இருப்பாரு. வீட்டுக்கு வெளில நம்ம நாய் நெறைய இடத்துல அசிங்கம் பண்ணி வெச்சிருக்கு. என்ன வேலை பாக்கறாங்க. இதெல்லாம் நீ கேக்கமாட்டியானு. இந்த பொண்ணு ஒவ்வொரு லைட்டா அமிச்சிட்டே வரும் சத்தம் கேட்டதும். அந்த பெண்மணி ரூமோட கதவ வேகமா சாத்துவாங்க அவளுக்கு கேட்டுடகூடாதுனு. இதெல்லாம் இயக்குனரோட அசாத்திய திறமைதான். அந்த ஒரு ஷாட்லையே அந்த பெண் எப்படி தன்னோட வேலைல கவனமா இருக்கறாங்கன்னு மட்டுமில்லாம. அந்த வீட்டோட தலைவி இவங்கமேல என்ன அபிப்பிராயதுல இருக்காங்கனும் தெரியபடுத்தி இருப்பாங்க. நம்ம அதிகமா வசனத்தை வெச்சி புரியவைக்க முயற்சிக்கறோம். இவங்க காட்சிவழியா இப்படி உணர்த்தறாங்க அவ்ளோதான்.

ரொம்ப சாதாரணமா ஆரமிச்சி போய்டே இருக்கற கதைல நாப்பதாவது நிமிசத்துல தான் நமக்கு ஒரு பிடிப்புவரும். அதாவது நமக்கு சினிமான்னா எதாவது திருப்பம் காட்சிகள்ல இருந்துட்டே இருக்கனும்ல. அப்படி கொஞ்சமா ஒரு குட்டி திருப்பம் அந்த வேலை பாக்கும் பொண்ணு தான் கர்ப்பமா இருக்கறத தெரிஞ்சி. அந்த வீட்டு தலைவிட்ட அத சொல்லவர காட்சி. அதுவரைக்கும் ரெண்டுபேருக்கும் பெருசா எந்த வசனமும் இருக்காது. ஆனா இதுக்குள்ளவே அந்த பொண்ணு இந்த வீட்டு குழந்தைங்கள்ல இருந்து அந்த வீட்டு நாய்வரை எவ்ளோ அந்நியோனியமா இருக்காங்கனு பல காட்சிகள்ல சொல்லியிருப்பாங்க.


அந்த பொண்ணு இந்த விசயத்த கொஞ்சம் பதட்டமாவே சொல்லி முடிச்சிட்டு. “என்ன வேலைய விட்டு தூக்கிடுவிங்களானு” கேக்கும். அப்படில்லாம் இல்லவே இல்லன்னு அதுவரை ஆறுதலா அந்த பொண்ணோட கையை மட்டும் நீவிவிட்டுடு இருந்த அந்த பெண்மணி அவங்களோட சேர்த்து அணைச்சி ஆறுதல் சொல்ற அந்த காட்சி அப்படியே நம்மள நெகிழவெச்சிடும். காரணம் என்னதான் நமக்கு அவங்க பாத்திரத்தோட தன்மைய பலகாட்சிகள் மூலமா நமக்கு புரியவெச்சாலும். இப்படியான நிகழ்வுகள் மூலமாதான அந்த பொண்ணு இதஉணரும். இங்கயும் முன்ன சொன்ன காட்சிபோலவே இயக்குனர் அவரோட ஒரு EXTRA BIT சேர்த்து இருப்பாரு. ஆனா அது நூல்அளவு கூட தெரியாது. அந்த வீட்டு பெண்மணி அவளுக்கு ஆறுதல் சொல்லிட்டு இருக்கும் போதே அவங்க சின்ன பையன் வரைஞ்ச படத்த அவங்க அம்மாகிட்ட கொண்டுவருவான்.

WHY IS CLEO CRYING?

SHE HAS A TUMMY ACHE. னு அந்த பெண்மணி சொன்னதும். அந்த குட்டி பையன் அந்த பொண்ணோட மடியில் அமர்ந்து. ஆறுதலா அவங்க தோள்ல சாஞ்சிகிட்டு. அவங்க வயிற்றை நீவியபடியே

PAIN PAIN GO AWAYனு பாடும்போது ஏற்கனவே கொஞ்சம் கலக்கமா இருந்த மனசு, இந்த சிலவிநாடி நிகழ்வு கண்கலங்க வெச்சிடுது. அப்படி யார்தான் இதனோட இயக்குனர்னு பார்த்தா நமக்கு ஏற்கனவே நல்ல அறிமுகமான GRAVITY, Y TU TAMBIEN படங்களோட இயக்குனர் ALFONSO CUARON.

என்ன இருந்தாலும் நம்ம பாணிதான் காட்சிவழி கதை சொல்றதவிட பலம்னு நெனச்சாலும். இதுல ஒரு பிரசவ காட்சி ஒன்னு இருக்கு. அது ஒன்னு போதும். அந்த சில நிமிட காட்சிக்கு கண்டிப்பா அவங்க சில வார உழைப்பை போட்டு இருப்பாங்க. நிறைய படங்கள் நம்மள கலங்க வெச்சி இருந்தாலும். ரொம்ப நேரம் கண்ணீர்விட்டு அழவைக்க இப்படியான சில அபூர்வ படைப்புகளாலதான் முடியும்.

TRALIER LINK:
https://www.youtube.com/watch?v=UspdGO-XBi8

Sunday, December 16, 2018






பார்த்ததில் மிகவும் ரசித்தது: 139.

அமானுஷ்ய கதைகளோட பெரிய பலமே முதல் பதினைந்து நிமிசம்தான். அந்த கொஞ்சநேரத்துல அவங்க ரசிகர்களோட நாடித்துடிப்பை வெறும் SOUND EFFECT ல மட்டுமில்லாம கதையில நடக்கபோற ஏதோ ஒரு சம்பவத்தின் மேல கொஞ்சம் எதிர்பார்பாவது ஏற்படுத்தனும். அந்த மாறி படங்கள்தான் நம்மை ஆரம்பம்ல இருந்து கதை மேல ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தும். 

பூர்த்தி தேவி அளவில்லா செல்வமும் தானியமும் கொண்டவள். இந்த பூமி அவளோட வயிற்றிலதான் அமைஞ்சி இருக்கு. இந்த பிரமாண்டம் உருவானப்பதான் தேவி இந்த வயிற்றில இருந்துதான் 16 கோடி தேவாதி தேவர்கள உருவாக்குனா. தேவிக்கு தன்னோட முதல் குழந்தை மேல அளவில்லா அன்பு இருந்தது. அவன் பேர் HASTAR. எந்த மதபுத்தகத்துல தேடினாலும் இந்த பெயர் உங்களுக்கு கிடைக்காது ‘’ஏன்னா?’ அவன் தேவியோட தங்கத்தையும், தானியத்தையும் அடைய நெனச்சான். தங்கம் மொத்தத்தையும் சொந்தமாக்கிட்டான். ஆனா தாணியத்த அடைய நெனச்சப்பதான் மத்த தேவர்கள்ளாம் அவன தாக்கினாங்க. தேவிதான் அவன காப்பாத்தினாங்க ஒரு நிபந்தனையோட. அதாவது இனி HASTAR யாரும் வணங்கமாட்டங்க. அவன எல்லோரும் மறந்துடுவாங்க. பல யூகங்கள் கடந்துச்சி. HASTAR தேவியோட வயத்துகுள்ளவே தூங்கிட்டு இருந்தான். இந்த நேரத்துலதான் நம்ம முன்னோர்கள் HASTAR பேர்ல ஒரு கோயில கட்டுனாங்க. அதிலிருந்தே மொத்த தேவர்களோட கோவமும் நம்ம ஊர் (அது தான் இந்த படத்தோட தலைப்பு) மேல திரும்பி மழையா பெய்ய ஆரமிச்சது. இப்ப நாம அவன எழுப்பனும். ஏன்னா அவனோட சாபம். நமக்கெல்லாம் வரம்.
‘’புரியலையே.
“உள்ள போனதும் புரிஞ்சிப்ப.’
“உள்ளனா? ‘எங்க’.
தேவியோட வயித்துகுள்ள’’.
படம் துவங்கிய முதல் ஷாட்டே ஒரு கையில் தானியமும் ஒரு கையில் தங்கமும் நிற்காமல் கொட்டிகொண்டே இருக்கும் சிற்பமும். அதன் பின்னே VOICE OVER ல வரும் வசனங்கள்தான் மேல சொன்னது. எந்த பெரிய ஆர்ப்பாட்டங்களும் இல்லாம வெறும் உரையாடல் மூலமே கதையோட ஆரம்பத்துல ஏற்படுத்துன இந்த எதிர்பார்ப்ப கடைசிவரை கொண்டுவந்து. CLIMAX ல எதிர்பார்ப்புக்கும் மேலயும் பூர்த்தி பண்ணி இருக்காங்க.

1918 களில் கதை ஆரமிக்குது. அதாவது மொத்த தேவர்களோட சாபத்தால எப்பவும் மழையோடே இருக்கும் TUMBBADங்கற அந்த கிராமத்துல. கிட்டத்தட்ட மொத்த பேருமே அந்த ஊர காலிபண்ணிட. தேவர்களோட சாபத்துக்கு காரணமானமானவங்களோட இந்த தலைமுறைய சேர்ந்த  ரெண்டு பசங்களும் அவங்களோட அம்மா + இன்னொன்னும் அந்த ஊர்ல இருக்கு.முதல் அந்த சில நிமிடங்களில் அவங்க கூட தங்கியிருக்கும் அந்த வயதான பாத்திரம் நமக்குள் நிச்சயமாக சிறு பயத்தையும் சிதிலமடைஞ்சி போன அந்த அரண்மனையின் உள்ளே ஒளிந்திருக்கும் பெரும் புதையல் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திடுது.
“ஆனாலும் நீ ரொம்ப பேராசைகாரன்டா”
என்கிட்டே இருக்கறதுலையே எனக்கு ரொம்ப பிடிச்சதே இது ஒன்னுதான்.
அந்த புதையலை எடுக்க முயற்சி பண்ணி தன்னோட முன்னோர்கள் மொத்த பேரும் இறந்தாங்கங்கற வரலாறு தெரிஞ்ச அப்பறமா வரும் உரையாடல்தான் மேல சொன்னது. அந்த தங்க நாணயங்களை மொத்தமாக எடுக்க முடியாது. சில வழிமுறைபடி முயற்சி பண்ணா சில நாணயங்கள் கிடைக்கும். ஆனால் உயிருக்கு உத்திரவாதமில்லை. இப்படியே கிடைக்கும் சில நாணயங்களை கொண்டு தனது குடும்பத்தை நடத்தி வரும் நாயகன் .

தனது காலத்திற்கு பின்னாடியும் தன்னோட பையனும் அந்த நாணயங்கள எப்படி எடுக்கணும்னு அவனுக்கு வீட்டிலேயே பயிற்சி கொடுக்கறாரு. இந்த சூழல்ல இந்தியா சுதந்திரத்திற்கு பின்னால யாருமே இல்லாதே அந்த கிராமத்தை மாதிரி கிராமமாக்க சட்டம் கொண்டு வராங்க. திரும்ப முன்ன போல எப்பவேணா அந்த கிராமத்துக்கு போய் தங்ககாசு எடுக்கும் வாய்ப்பு. கிடைக்காம போகலாங்கற சூழ்நிலை உருவாகுது. ரொம்ப பேராசைகாரனாலதான் இத்தனை காலம் உயிரை பணயம் வெச்சி இப்படியான வேலைய செய்ய முடியும். இந்த சூழல்ல அவனோட பையன் அந்த தங்கத்த மொத்தமா எடுக்க ஒரு யோசனை சொல்றான். அந்த பையன் வர ஆரமிக்கும் காட்சிகள்ல இருந்துதான் படம் இன்னும் பெரிய பரபரப்பு கட்டத்துக்கு வருது. சில தங்கக்காசுகளை எடுக்கவே உயிரை பணயம் வெக்கும் சூழல்ல மொத்தமா எடுக்கும் யோசனையே வேணாம்னு சொல்ல முடியாத சூழல். அரசாங்கம் அவங்க திட்டத்த செயல்படுத்த ஆரமிச்சி திரும்ப அங்க போகவே முடியாத நிலை வந்துட்டா என்ன பண்றதுன்னு அவனும் பையனோட திட்டத்துக்கு சம்மதிக்கறாரு அந்த தேவியோட வயித்துக்கு உள்ள போற காட்சிகள் எல்லாமே நம்மள ரொம்ப படபடக்க வெச்சிடுது.


இது சாமி பூதம் கதை மாறி தெரிஞ்சாலும் கதைல எங்கேயும் பூஜை, விரதம் மாறி சமாச்சாரம்லாம் எதுமே இல்லாம ரொம்ப கவனமா திரைக்கதை பண்ணிருக்காங்க. PERIOD கதைகள்ள ரொம்ப முக்கியமான ART DEPT வேலைய ரொம்ப பிரமாதமா பண்ணியிருக்காங்க. அதும் அவன் சின்ன பையனா இருக்கும் துவக்க காட்சிகள்ல அவங்க தங்கியிருக்கும் வீடும் அந்த GASTHARட்ட சாபம் வாங்குன பாட்டி இருக்கும் அறையும் செம்ம. அந்த கால் ஊனமான சின்ன பையனோட தேவி வயித்துக்குள்ள போற இறுதிகாட்சிலாம் விவரிக்கவே முடியாது. 

Monday, November 26, 2018






WEB SERIES -001


MIRZABUR (2018) – SESSION – 1 - 09 EPISODES.

மூன்று மணிநேர திரைப்படங்களே அரிதாகி போன காலகட்டத்தில் WEB SERIES கள் ஹிட் அடிக்க முக்கிய காரணங்களாக இருப்பவை. கதையின் அனைத்து முக்கிய பாத்திரங்களுக்கும் அவர்களின் பின்புலங்களை சொல்லும் கிளைகதைகள். மிக தெளிவான மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை. அதிக பாத்திரங்கள் உள்ள கதைகளிலும் அவர்களின் பின்புல கதைகள் தொடர்களின் நீளத்திற்கு மட்டுமல்லாது  அப்பாத்திரங்களை நாம் நினைவில் வைத்துகொள்ளவும் உதவுகிறது. ஏனெனில் ஒரு SEASON குறைந்தது 1௦ EPISODE வைத்து கொண்டாலும் ஒரு EPISODEக்கு ஒரு மணிநேரம் எனில் இந்த ஒரு SEASON 1௦ மணிநேரத்தை முடிக்க குறைந்தது ஒரு வாரம் தேவைபடலாம். இதில் சில பாத்திரங்கள் அவர்கள் யார் என நம் நினைவில் வரவில்லை எனில் அவர்கள் மூலம் கதைகளில் நிகழும் முக்கிய திருப்பங்களும் நமக்கு பெரிய சூவாரசியத்தை கொடுக்காது. இந்த கதையின் மிக முக்கிய தகுதியாக நினைப்பதே நீட்டி முழக்கும் எந்த பின்புல கதைகளும் யாருக்கும் இல்லாததே. அவை தேவையும் படல. மிக குறைந்த பாத்திரங்களை கொண்டு அதிவேக திரைக்கதை மூலம் சரியான ACTION விருந்து படைத்துள்ளது MIRZAPUR குழு.  

மத்திய பிரதேசத்தில் MIRZAPUR எனும் நகரே இக்கதைக்கான களம். தன் சகோதரன் மற்றும் தங்கையுடன் ஒரே கல்லூரியில் பயிலும் அண்ணன் பாத்திரம். நேர்மையான வக்கீலாக அவர்களின் தந்தை மற்றும் அம்மா என மிக அழகான நடுத்தர குடும்பம். (அழகான குடும்பம்னு சொன்னாலே அது ஏழைகளும், நடுத்தர வர்கத்தினர் மட்டும்தான்னு ஆரம்பம் முதலே பழக்கி வெச்சிருக்காங்களே.) அவர்கள் நகரில் ஆயுதம் முதல் போதை வஸ்துக்கள் மட்டுமின்றி அரசியல் முதல் காவல்துறை வரை தனது கட்டுபாட்டில் இயக்கிகொண்டிருப்பவனின் மகன் MUNNABHAI அக்கல்லுரியிலே பயில்கிறார். அந்த அண்ணன் பாத்திரம் முன்னா போன்று வாழக்கைக்கு ஆசைபடுகிறார். இனி உங்கள் யுகத்தில் தோன்றும் காட்சிகளே பெரும்பாலும் இக்கதைகளில் வரும். பொல்லாதவன் செல்வம், ரவி போன்றே இதில் முன்னாபாய் மற்றும் அவரின் தந்தை (DON) KAALEEN BHAI பாத்திரங்கள் வடிவமைக்கபட்டிருக்கும். RGV ன் பல GANGSTER கதைகளிலும் இம்மாரியான பாத்திரங்கள் நிச்சயம் இருக்கும். அதே கதை பழக்கபட்ட பாத்திர வடிவமைப்புகள் இருந்தும் இந்த முதல் SEASON லில் 9 EPISODEலும் ஒரு இடத்திலும் நம் கவனம் முழுதையும் இக்கதையில் மட்டுமே இருக்க மிகபெரும் காரணம். விறுவிறுப்பான திரைக்கதை மட்டுமன்று. கதைக்கு தேவைப்படாத ஒரு பாத்திரத்தை கூட இந்த முழு SEASON லும் பார்க்க முடியாது. மிக குறைந்த பாத்திரங்களை கொண்டே அடுத்தடுத்த EPISODE யை பார்க்க தூண்டும் ஆவலை பெரும் மெனக்கெடல் மூலம் சாத்தியபடுத்தி உள்ளது இக்குழு.

ஒரு பகல் அல்லது ஒரு இரவு உங்களுக்கானதாக வாய்க்கபெற்றால் கண்டிப்பாக இத்தொடரை பார்க்கலாம். பெரும்பாலானோர் இதை ஒரே SITTING ல் வாய்தா இல்லாமல் பார்த்து முடிக்கவே வாய்ப்புகள் அதிகம். மிகமுக்கிய காரணம் இத்தொடர் HINDI மட்டுமல்லாது TAMIL மற்றும் TELUGU லும் உள்ளது. வேறுமொழி SERIES பார்க்கும் நினைவே தோன்றாமல் தமிழில் வந்த ஒரு SERIES பார்க்கும்படியான நேர்த்தியான DUBBING.


ஒரு பத்தாயிரம் புல்லெட் முதல் சீசன் முழுக்க வெடிச்சி ஒரு ஆயிரம் பேர கொன்னிருப்பாங்க. அந்த கொலைகளை விறுவிறுப்பாக்க பெரிய காரணம் TECHNICAL SIDE EDITINGங்கும், CG ம்தான் ரொம்ப மெனக்கெட்டு இருக்காங்க. அதும் முதல் மூணு EPISODE ல EDITING தான் ஒரே நாள்ல இந்த முழு SEASON ம் பாக்க முழு காரணமே. ஒவ்வொரு எபிசொடும் எப்படி ஆரம்பம் ஆகுதோ முடிவும் அதே போல. அப்பவே அடுத்தத பாக்க வெக்குது. ACTION விரும்பிகளுக்கு ரொம்ப பெரிய விருந்து இந்த SERIES. இத பார்த்து கண்டிப்பா ரெண்டாவது சீசனுக்கு ரொம்ப ஆவலா காத்திருக்க வாழ்த்துக்கள்.

TRAILER LINK:
https://www.youtube.com/watch?v=ZNeGF-PvRHY

Friday, November 2, 2018


பார்த்ததில் மிகவும் ரசித்தது: 138.

காட்சி: ௦3
ஒரு ஆபத்தான பகுதியில் இருக்கும் மக்களை மீட்டுவரும் இருவிமானிகள். சீனியர் பைலட் எடை குறைந்த CARGO விமானத்தில் அதிக பயணிகளுடனும். எடை அதிகம் கொண்ட பயணிகள் விமானத்தில் சில பயணிகளுடனும் பறந்து செல்கின்றனர். பயணிகளை மீட்டுவரும் வரும் அவசரத்தில் அந்த விமானத்தை எந்தவித பரிசோதனைகளும் இல்லாமல் கொண்டு வந்ததால் தாமதமாகவே அந்த CARGO விமானத்தில் எரிபொருள் குறைவாக உள்ளது தெரியவருகிறது. அதும் அடுத்த சில நிமிடங்களுக்கு மட்டுமே விமானம் இயங்கும் என தெரியவருகிறது. உடன் விமானி கட்டுபாட்டு அறைக்கு தகவல் தருகிறார். இந்த குறுகிய நேரத்தில் மாற்றுவிமானமோ அல்லது அருகில் வேறு விமான நிலையங்களோ இல்லாததால் செய்வதறியாது திகைகின்றனர்.

பின்னால் குறைவான பயணிகளுடன் வரும் விமானத்தின் பயணியொருவரின் யோசனைபடி இருவிமானத்தையும் முடிந்தளவு குறைவான உயரத்திற்கு கொண்டு சென்று அதில் உள்ள பயணிகளை இந்த விமானத்திற்கு மாற்றும் யோசனையே இந்த குறுகிய நேரத்திற்கு உகந்ததாக எற்றுகொள்ளபடுகிறது. சரி எவ்வாறு அந்த விமானத்தில் இருந்து இந்த விமானத்திற்க்கு கிட்டத்தட்ட 3௦௦௦ அடி உயரத்தில் பயணிகளை மாற்றுவது. சாலையில் பழுதடைந்து நிற்கும் கார்களை “டோவ்” செய்து SERVICE CENTRE க்கு கொண்டுவரும் முறையில் கார்கோ விமானத்தில் சரக்குகளை கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் இரும்பினால் ஆன கயிற்றை கொண்டு முதலில் இருவிமானங்களையும் இணைக்கின்றனர். பின் டன் கணக்கில் விமானங்களில் ஏற்றபடும் சரக்குகளை வைக்க ராட்சஷ வடிவிலான பெரிய அளவு மீன்பிடி வலைகளை போன்ற பைகளில் 15-2௦ பயணிகள் வரை ஏறி இதிலிருந்து அந்த விமானத்திற்கு மாற்றப்பட்டு கூடுமானவரை அனைவரும் காப்பாற்றபடுகின்றனர். கிட்டத்தட்ட முழு படமும் முடிவுற்றதாக நினைக்கும் வினாடியில்தான் பயணிகள் விமான விமானிக்கு வேறொரு விஷயம் நினைவுக்கு வருகிறது. அதாவது இந்த விமானத்தின் பின்புறம் உள்ள இரு சக்கரங்களில் ஒன்று பழுதடைந்து உள்ளதும். தன்னிடம் அதிக பயணிகள் இல்லாததால் சமாளித்து இறக்கிவிடலாம் என்று இருந்ததும். தற்போது அந்த விமானத்தின் மொத்த பயணிகளும் இதற்க்கு வந்ததால் தரையிறக்கும் பொழுது கண்டிப்பாக இந்த விமானம் வெடித்து சிதறும் நிலையை உணருகிறார். சரி இந்த புதிய பயணிகள் விமானத்தின் சக்கரங்கள் பழுதடைய காரணமென்ன?..

காட்சி: ௦2
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஒரு சிறிய நகரத்தின் விமானநிலையத்திற்கு செல்ல இந்த இரு விமானிகளும் பணிக்கபடுகின்றனர். அங்கு விமான நிலையத்தில் தஞ்சம் புகுந்த மக்களை மீட்டுவர செல்கின்றனர். இப்பொழுது நம் கற்பனையில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட அந்த சிறு நகரமோ அல்லது சேதமடைந்த விமான நிலையத்தையோ எந்த அளவில் கற்பனை செய்து வைத்து இருந்தாலும் இவர்கள் காட்சிகளில் நிச்சயம் நம்மை ஆச்சர்யபடுத்தி விடுகின்றனர். பூகம்பத்தால் அவர்களே அறியாவண்ணம் பல வருடங்களாக உறங்கிகிடந்த எரிமலை வெடிக்க ஆயுத்தமாக சாம்பலை காற்றில் கசியவிடுகிறது. மூன்று பக்கமும் மலைகளால் சூழப்பட்ட அந்த விமானநிலையம் ஏற்கனவே பூகம்பத்தால் சிதிலம் அடைந்து. மின்கசிவால் அங்குள்ள எரிபொருட்கள் அந்த பகுதியே விழுங்கும் வண்ணம் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்க. இந்த விமானிகள் இருவரும் மற்றுமொரு பெண் விமானியுடன் அங்கு செல்கின்றனர்.
இந்த நிலையில் அந்த மக்களை பார்த்ததும் உடனடியாக அவர்களை மீட்டு செல்ல அனைவரும் ஆயுத்தமாகும் நிலையில் அந்த மக்களில் பாதிஅளவு ஆட்கள் இந்த மலையின் பின்புறம் வாகன வசதிஇல்லாமல் தவித்து வருவதாகவும். இங்குள்ள ஏதேனும் வாகனத்தில் சென்றால் உடனடியாக மீட்டு வரலாம் என பயணிகள் கூறுகின்றனர். CAPTAIN சம்மதத்துடன் அவர்களை மீட்க மற்றுமோர் விமானி செல்கிறார். சேதமடைந்த இந்த ஓடுதளத்தில் நிச்சயம் இந்த விமானத்தை TAKEOFF செய்ய இயலாது என CAPTAIN கவலைகொள்ளும் நிலையில். அங்கு குறைவான எடை கொண்ட MINI CARGO விமானம் கண்ணில்படுகிறது. இந்த ஓடுதளத்தில் இந்த விமானத்தால் மட்டுமே TAKEOFF செய்வது சாத்தியம் என்பதால் அதை தயார் செய்கிறார். மக்களை மீட்டு வர சென்ற விமானியும் குறிப்பிட்ட நேரத்திற்குள் திரும்பாததால் இந்த விமானத்தில் கிளம்புகிறார். அங்கு பயணிகளை மீட்கயில் சரியாக எரிமலையும் நெருப்பு குழம்பை கக்க. நெருப்பு ஊற்றில் இருந்து கிளம்பிய நீராக மலையில் இருந்து வழிய துவங்குகிறது. அந்த மலைபாதையில் கண்முன்னே நெருப்பு இரையை விழுங்கிய பாம்பை போல மிகநிதானமாக வழியதுவங்குகிறது. இருக்கும் ஒரு பாதையிலும் எரிமலை குழம்பு குறுக்கிட்டதால். வாகனத்தில் இருந்து நடைபயணமாக அம்மக்களை அழைத்துகொண்டு விமானநிலையம் விரைகிறார்.
அங்கு அவர்களின் விமானம் தவிர்த்து அனைத்தும் எரிந்து கொண்டிருக்க தன் சக விமானி மற்றும் அங்கிருந்த மக்களும் இல்லாததை கண்டு அதிர்கிறார். தற்பொழுது மூன்று பக்கமிருந்தும் எரிமலை குழம்பு மேலும் ஓடுதளத்தை சேதபடுத்திகொண்டே இருக்க. குறைவான பயணிகள் என்பதாலும் உயிரை காத்துகொள்ள இந்த நெருப்பு குழம்பின் வழியே ஓடுதளத்தை கடந்து பறக்கிறார். விமானம் TAKEOFF ஆனதும் மூன்று சக்கரங்களும் தானாக விமானத்தின் உள்செல்லும். மீண்டும் தரைஇறங்கும் பொழுது மட்டுமே வெளிவரும். இதில் நெருப்பில் சேதம்அடைந்ததால் வேலை செய்யாத ஒரு சக்கரத்துடனும். தன்னால் காப்பாற்றப்பட்ட பயணிகளுடனும். இந்த சேதம்அடைந்த ஓடுதளத்திலும் வெற்றிகரமாக விமானத்தை TAKEOFF செய்த மகிழ்வில் பறக்கிறார்.


மேற்கூறிய அனைத்தும் காட்சிவடிவில் நம்மை மேலும் ஆச்சர்யபடுத்தும். அதும் பயணிகளை விமானம் டூ விமானம் மாற்றும் கட்சிகள். பயணிகளை மீட்டுவருகையில் அந்த வாகனத்தின் சாகசமும். அவ்வாகனத்தின் முகப்புகண்ணாடியில் வெடித்து கிளம்பும் எரிமலையை காட்டபடுவதும். அந்த விமானநிலைய செட் மற்றும் விமானம், ஓடுதளம், கேப்டன் அவரின் அதிகாரம் குறித்த பல தகவல்களும் நம்மை மென்மேலும் ஆச்சர்யபடுத்துபவை. இந்த இரு காட்சிகள் மட்டுமின்றி காட்சி:௦1ல் இந்த இரு விமானிகளுடன் வந்த பெண்விமானிக்கும் இவனுக்குமான குட்டி லவ். மற்றும் இரு விமானிகளின் முன்கதை சுருக்கமும் நம்மை அசதிஆக்காது. ரொம்ப ஆர்வமா விரும்பி அனைவரும் பாக்கலாம். ADVENTURE, ACTION விரும்பிகளுக்கு SPECIAL TREAT இந்த ரஷ்யன் படம்.

TRAILER LINK:

https://www.youtube.com/watch?v=vTzlfO_zKsQ

Thursday, October 18, 2018




பார்த்ததில் மிகவும் ரசித்தது: 137.


BIOGRAPHY அப்படின்னு தமிழ் சினிமால யோசிச்சா சில விநாடிகள்ல ஞாபகம் வர படம் நாயகன். அதுக்கு பின்னால ரொம்ப யோசிச்சா (கொஞ்சம் தயக்கமாவே) தவமா தவமிருந்துதான். ரெண்டுக்கும் நடுவுல கிட்டத்தட்ட இருவது வருஷம் தமிழ் சினிமாவும் இருந்திருக்கு. இதே BIOGRAPHY லையே ஒரு களத்தை பத்தின கதையை யோசிச்சா எதுமே இருந்ததா நினைவில் வரவேஇல்ல. ஏன்? “அதான் சுப்ரமணியபுரம் வந்ததேனு நண்பர்கள் சிலரும் வாதத்திற்கு வந்தனர்.’ அந்த களம் அந்த கதைக்கானது மட்டுமே. இங்குயாரும் தனியாக எந்த களத்தின் வரலாறையும் சினிமாவில் கொண்டு வந்ததாக நினைவில் இல்லை. இது வடசென்னை எனும் மீனவகிராமத்தின் வரலாறை, அதே உப்பு காற்றும், கருவாட்டு வாசனையும். அந்த முரட்டு மனிதர்களின் வாழ்வின் போராட்ட  பக்கங்களின் சரித்திரம்.

எனது பதிவுகளில் பெரும்பாலும் சொல்வது ஒரு கதைக்கு அவர்கள் தீர்மானிக்கும் களமே அந்த கதையின் உணமைதன்மையை தீர்மானிப்பதில் முக்கியபங்கு வகிக்கும் என்பதே. காரணம் அவர்கள் தீர்மானிக்கும் களம் குறித்த ஆய்வை நிச்சயம் அந்த இயக்குனர் மேற்கொண்டே ஆகவேண்டும். அதை தனது கதையில் பொருத்துகையில் அவர்களின் பேச்சு வழக்கு, உடை, பின் அதே அந்த கதைக்கான உண்மைத்தன்மையை கொண்டுவந்து விடும். நமது அரசாங்கம் ஒவ்வொரு 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த மீனவ கிராமங்களை நகர விரிவாக்கம். தூய்மை இந்தியா இப்படி ஏதேனும் திட்டத்தின் கீழ் அவர்களை காலி செய்ய முயல்வதும். அவை இன்று வரை பெரும்பாலும் தோல்வியிலே இழுத்துகொண்டு செல்வதும் வரலாறு. இதை 1987 லில் ஒரு கொலையில் துவக்கி NON LINEAR முறையில் 2000 வரை திரைக்கதை வடித்துள்ளார் வெற்றிமாறன்.

ராஜன் (அமீர்), குணா (ச.கனி), செந்தில் (கிஷோர்), தம்பி (டேனியல்), வேலு (பவன் – பொல்லாதவன் அவுட்) சந்திரா (ஆண்ட்ரியா), பத்மா (ஐஸ்வர்யா ராஜேஷ்), முக்கிய கதாபாத்திரங்களில். மூன்று பாகங்களாக வரவிருக்கும் வரலாறு இந்த படம். தன் கதைக்கான பாத்திரங்களை வடிவமைப்பதில் இவரை அடித்துக்கொள்ள சமகாலத்தில் எந்த இயக்குனரும் கிடையாது. பொல்லாதவன் மற்றும் ஆடுகளத்தில் தான் பயன்படுத்திய பாத்திரங்கள்தான் பெரும்பாலும் எனினும் இதில் முற்றிலும் வேறு களம். வேறு பேச்சு மொழி, நடை, உடை என முற்றிலும் அனைத்தும் வேறு. அதை அப்பாத்திரங்கள் வெளிப்படுத்திய விதம் ஒவ்வொருவருக்கும் வேறுபடலாம். ஆனால் அதை நீங்கள் அனைவரும் இந்த குப்பத்து மக்கள்தான் என்பதை அவர்களுக்கு உணர்த்தி ஒரே வரிசையில் கொண்டுவந்த விதம்.

தனி ஒருவராக திரையில் யாருக்கும் எந்த காட்சியும் இல்லை. அனைத்து காட்சிகளிலும் குறைந்தது நான்கு முதல் பத்து நபர்கள் வரை. அந்த கூட்டத்திலும் குட்டி குட்டி பாத்திரங்களில் வரும் அன்புவின் மச்சினன், “என் உயிரை காப்பாத்தி கொடுத்து அண்ணனை யாரு போட்டாங்கனு சொல்ல முடியாம பண்ணிடியேடானு அழும் அன்புவின் ஜெயில் சிநேகிதன். செந்தில் உடன் ஜெயிலில் இருக்கும் திடகாத்திர நபர். குணாவோட இடது கழுத்து, தோள்பட்டை வழியே வலது மார்புவரை இருக்கும் வெட்டு தழும்புனு நெறைய நெறைய பேர் அந்த கூட்டத்திலும் நம் கவனத்தை ஒவ்வொரு காட்சியிலும் தொடர்ந்து இழுத்து கொண்டே வருகின்றனர்.

நண்பர்கள் பலரின் பதிவுகளில் படித்ததுபோல் இந்த பாத்திரங்களை நினைவுபடுத்தி கொள்வதில் எந்த சிரமமோ, குழப்பங்களோ இல்லை. ஒரே நிமிடம் நம் மனதுள் நிதானித்து நிறுத்தினால் காலத்திற்கும் நம்முடன் பயணிக்க போகும் நபர்கள் இவர்கள். இப்பாத்திரங்களை உள்வாங்கி கொண்டால் மட்டுமே இக்கதையின் வீரியத்தை முழுதும் உங்களால் அனுபவிக்க எதுவாக இருப்பதால் முதல் முப்பது நிமிட படத்தை மட்டுமேனும் மொபைல் நோண்டல், பக்கத்து சீட்டு பல்லிளிப்பு ஏதும் இல்லாமல் சற்று கவனத்துடன் நோக்கினால். அதே உங்களுக்கு பழகிடும். முதல் மூன்று படங்களில் இருந்து இது வெற்றிமாறனுக்கு மட்டும் அசுர பாச்சல் இல்லை. வேல்முருகன் (கேமரா), SREESAN (SOUND DEPT), DHILIP SUBBURAAYAN க்கு மட்டுமில்லாது. குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மிக முக்கிய இருநபர்கள் சந்தோஷ் நாராயணன், எடிட்டர் வெங்கடேஷ் அவர்கள்.

UNDERPLAY ல இன்றைய நடிகர்கள்ல அடிச்சிக்கவே முடியாத ஒரே நபர் அன்பு. அதை திரும்ப திரும்ப அவர் நிருபிச்சி மேல மேல போயிட்டே இருக்கார். அடுத்த பாகம் முழுக்க அன்புவின் எழுச்சியே பிரதானம் என்பதால் இப்பொழுதே அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பும் படம் முடியும் நிமிடம் முதல் தானாக எழுந்துவிடுகிறது. ஒரே நபர மட்டும் இந்த மூணு பாகத்திலும் சேர்த்து குறிப்பிட வேண்டும் என்று சொன்னால் என்னுடைய ஒரே தேர்வு சந்திரா மட்டுமே. அமீரின் COOLERS எடுத்து கொண்டு அந்த அறையில் இருந்து வெளியில் வரும் ஒரே ஷாட் அவங்களுக்கு போதுமானது. வரும் மாதங்களில் அனைத்து பத்திரிகை, வார இதழ்களிலும் நிரப்பும் செய்தியாக மட்டும் இல்லாமல் இப்படமும், இதன் technical டீம் அனைவரும் செல்லவிருக்கும் உயரம் மிகப்பெரியது.


ஹோட்டலில் அந்த கொலைக்கு முன் அமீர் பேசும் அரசியல் வசனங்கள் இதுவரை தமிழ் சினிமா காணாதது. அது அடுத்தடுத்த பாகங்களில் மிக வீரியமாக வெளிப்படும் என்பதில் துளியும் ஐய்யமில்லை. காரணம் இக்கதை பேசும் களவரலாறு அவ்வாறானது .

Wednesday, October 17, 2018


பார்த்ததில் மிகவும் ரசித்தது: 136.

இந்திய சினிமாக்களில் NATIONAL SECRET FORCE, SECRET OPERATION இப்படியான MISSION IMPOSSIBLE வரையறா கதைகளில் அதே தேசத்தை காப்பது. அதற்க்கு எதிராக செயல்படும் இயக்கத்தை அழிப்பது. இந்த SECRET OPERATIONல் ஏதேனும் தவறு நடந்தால், அந்த இயக்கத்தின் மீது அரசாங்கமே நடவடிக்கை எடுத்து அனைவரையும் கைது செய்வது என இவை ஒரே பாணி JAMESBOND கதைகளே. இதில் சுவாரசியம் இதன் திரைகதையில் மட்டுமே ஒளிந்துள்ளது. இப்படியான கதைகளை இந்திய சினிமாக்களில் முயற்சிப்பதில் பெரும் சிக்கலே அவை பல ஹாலிவுட் படங்களை நினைவூட்டும் படி இருப்பதுவே.

இதும் அதே CBI ல் இணைந்து பணியாற்ற துடிக்கும் நாயகன். அவனை அவர்கள் தேர்ந்தெடுத்து. பயிற்சி கொடுக்கும் விதம் பல படங்களை நினைவூட்டினாலும் இந்த 3௦ நிமிட காட்சிகளை தவிர்த்து படத்தின் இறுதிவரை கதை எங்கையும் வேறு படங்களை நினைவுபடுத்தாததே இப்படத்திற்கான வெற்றி. ஒரு ஹெட். மார்சியல் ஆர்ட் கற்றுதரும் பெண், கம்ப்யூட்டர் ஹக்கிங் பயிற்சிதரும் நபர் என மொத்தம் மூன்றே நபர்கள் இந்த TRINETHRA எனும் இக்குழுவை வழிநடத்த. அனைவரும் பயிற்சி முடித்து ஒவ்வொரு துறைக்கு செல்கிறார்கள். பயிற்சியின் போதே தீவிரவாத இயக்கம் இவர்களை பின்தொடர. பயிற்சி முடித்த முதல் நாள்  நாயகன் TARGET செய்யபடுகிறான். அதும் சாதாரணமாக இல்லாமல் அவனுக்கும் அவன் குழுவுக்கும் பதவி பிரமாணம் செய்துவைத்த அதன் நிறுவன தலைவரை தீர்த்துகட்டுதல் வாயிலாக.

அதும் அவரை கொன்றது நாயகன்தான் எனும் பக்கா ஆதாரங்களுடன் அக்கொலை அரங்கேறுகிறது. அவரை கொன்ற துப்பாக்கியில் நாயகனின் கைரேகை. கொன்றவர்கள் செல்லும் வாகனம் நாயகனின் அப்பார்ட்மென்ட் வருகிறது. இந்த சம்பவம் நடக்கும் நாளில் பாகிஸ்தானில் இருந்து அவனது வங்கி கணக்கிற்கு ருபாய் இரண்டு கோடி TRANSFER செய்யபடுகிறது. இதும் போக இந்த விழாவிற்கு வரும் நாயகன் தனது CHIEF ற்க்கு கொண்டுவரும் ஸ்காட்ச்ல் விஷம் கலக்கப்பட்டு அதை அருந்தி அவரும் உயிர் துறக்கிறார்.

நாயகன் இந்த கொலையை செய்யவில்லை என்பதற்கான ஒரே ஆதாரம் அந்த தாக்குதல் அரங்கேற இருக்கும் கடைசி நிமிடத்தில் அதை அறிந்து நாயகன் மொபைல் அழைப்பு ஒன்றே. அவர்களும் இறந்துவிட மொத்த தேசத்தின் பார்வைக்கும் தீவிரவாதியாக அடையாளம் காட்டபடுகிறான். இதில் அந்த தாக்குதல் நடைபெறுவதை நாயகன் இறுதி நிமிடத்தில் எவ்வாறு கணித்தான் என்பதற்கு படத்தின் துவக்கம் முதல் சிறு சிறு காட்சிகளின் வாயிலாக க்ளு கிடைத்து கொண்டே வருவதும். தன் மீதும் தாக்குதல் நடக்கும் இறுதி நிமிடத்தில் அதை அறிந்து நாயகன் தெரிவிக்க அழைப்பதும் கூடுதல் சூவரசிய காட்சிகள்.

மேலும் இந்த துறையில் சேர எதற்காக இவ்வளவு வெறியாக உள்ளான் என்பதை கதையின் துவக்கத்திலே வரும் கதையும். இறுதி காட்சியில் வரும் திருப்பங்களும் இந்திய சினிமாவிற்காக என்றாலும், நிச்சயம் ரசிக்கும்படியான காட்சிகளே. மேலும் நாயகன் அனைத்து விதங்களிலும் குற்றவாளியாக்கப்பட்டது முதல் ஒரு மணிநேர படத்தில். அதற்க்கு பின்னான அதே குற்றவாளியை பின்தொடர்ந்து தான் நிரபராதி என நிருபிக்கும் கதையில் பரபர திரைக்கதை மூலம் நம்மை அசத்தயுள்ளனர் என்றே சொல்ல வேண்டும்.


தெலுங்கு சினிமாவை பற்றி துளியும் தெரியாததால் இதன் TECHNICAL TEAM  DIRECTOR பற்றி எந்த வரலாறும் பதியபடவில்லை. மேலோட்டமான ஒரே காட்சியை பற்றிய பார்வையை பற்றி மட்டுமே பதிவிட்டு உள்ளேன். இதனுள் பல கிளைகதைகள் ஒவ்வொரு காட்சியிலும் நம்மை வேறு சிந்திக்க விடாமல் முழு படத்தையும் ரசிக்க வைக்கும்.

TRALIER LINK:

https://www.youtube.com/watch?v=lysoF97MOMk

Saturday, October 6, 2018





பார்த்ததில் மிகவும் ரசித்தது: 135.

பொதுவாக இப்படிபட்ட பொண்ணு கிடைச்ச இவன் உண்மையிலே ரொம்ப அதிர்ஷ்டசாலிங்கற எண்ணத்தை தான் அதிக முறை உணர்ந்திருப்போம். அல்லது நண்பர்களிடம் சொல்லிக்கூட இருப்போம். ஆனால் இப்படியான ஒரு பையன் கிடைச்ச இந்த பொண்ணுதான்ப்பா ரொம்ப கொடுத்து வெச்சவனு சொல்லிகொள்ளும் படியான ஒரு பாத்திரப்படைப்பு பரியனுக்கு. அதுதான் இந்த கதைக்கான சாராம்சமும். சட்ட கல்லூரியில் முதலாம் ஆண்டு பரஸ்பர அறிமுகத்தில்
“உங்க பேரு..
அதான் அப்பவே சொன்னனே “ஜோதி மகாலக்ஷ்மி”
ஓ.. உங்களுக்கு ரெண்டு பேரா?
இல்ல.. மூணு பேரு. வீட்ல “ஜோ”/
ஜோ பாத்திரம் இத சொல்லிக்கொண்டே வகுப்பறையில் இருந்து வெளியேறும் போது. பரியன் சொல்லுவான். ஏங்க ஜோவா, ஜோதிகா பேருங்க. குஷி 19 தடவ பாத்திருக்கேன். ஜோதிகானா எனக்கு அவ்ளோ பிடிக்கும்னு அவன் சொல்லிமுடிக்கும் போது. ஜோ முழுக்க வகுப்பறைய விட்டு வெளியேறி அவங்க தலைகூட மறைஞ்சிருக்கும். அவன் சொன்னதமட்டும் மனசுல வாங்கிட்டே போனவங்க. தலைய மட்டும் உள்ள நீட்டி அதே புன்னகை முகத்துல கூடுதல் பிரகாசத்த மட்டும் பரியன்கிட்ட காமிச்சிட்டு மீண்டும் நடக்க ஆரமிப்பங்க அவங்களோட முழு வெக்கத்தையும் கொஞ்ச கொஞ்சமா முழுங்கிகொண்டே...

இதுவரை வெறும் பரியன் அப்படிங்கற ஒரே பாத்திரத்தை மட்டுமே நம்பி போன அத்தனை பார்வையாளனையும் தன்னை கவனிக்க வெச்சிடும் இந்த ஜோ பாத்திரம். படம் துவங்கிய முதல் பதினைந்தாவது நிமிடத்தில் வரும் இப்பாத்திரமே நம்மை எந்த அசௌகர்யத்திற்கும் உட்படுத்தாமல் முதல்பாதி கதை முழுக்க மனநிறைவோடு கொண்டு செல்லும். தான் சொல்லும் எல்லா கதைகளிலும் தனது சொந்த எண்ண ஓட்டத்தை புகுத்தாமல். தன் கதை அது செல்லும் பாதையின் உள்ள அனைத்து கீழ் சாதி துவேசங்களையும் துளியும் மிச்சமில்லாமல் கதையின் வழியே நமக்கு குறியீடு போன்ற எந்த மேதாவிதனமும் இல்லாமல் மூலம் வெகு இயல்பாகவும். அதே வலியுடனும் காண்பித்த இயக்குனருக்கு மிகப்பெரும் வாழ்த்துக்கள்.

வீட்டுபாடம், டீச்சர், BABL மேல ஒரு கொடுன்னு அதே தன் கிராமத்து பேச்சு வழக்கிலேயே ரொம்ப அப்பாவியான சட்டகல்லூரி மாணவன் பரியனனுக்கு. தன் சாதி .குறித்த சீண்டல்களை மட்டும் பொறுத்து கொள்ளாமல் கோவப்படுவதற்கான அனைத்து காரணங்களையும்  கதையில் தேவைப்படும் அனைத்து இடங்களிலும் ரொம்ப அழுத்தமாக சொல்லபட்டிருக்கும். அதுவே அவனின் ஆக்ரோஷத்தை எந்த இடத்திலும் ஒரு பார்வையாளருக்கும் தவறாக நினைக்க தோன்றாது. ஜோ உள்ள பரியனின் ஆவேச காட்சிகளில் ஜோவை எத்தனை சதவிகிதத்தினர் கவனித்தனர் என்று தெரியாது. ஆனால் இயற்கையிலே அந்த பெரிய கண்களில் தோன்றும் கூடுதல் மிரட்சியும். அந்த ஒடிசல் தேகத்தில் ஏற்படும் நடுக்கமும் அவனின் மேல் உள்ள பிரியத்தின் மொத்த சாட்சி.

முதல் முறை அவனது கோவத்தை பார்த்து, பின் அவனிடம் ரொம்ப தயக்கமா.. ENGLISH சுத்தமா தெரியாம எப்படி 1௦, +2 லாம் பாஸ் பண்ணிங்கன்னு கேக்கும் போது.. அந்த கதை FLASHBACK போகும். (அத  அவ்ளோ சுவாரசியமா பண்ணிருப்பாங்க) போது ஜோ அந்த கதைய ரொம்ப சரியா ஒரு குறிப்பிட்ட இடத்துல பரியன DIVERT பண்ணி அடுத்த கதைக்கு கூட்டிபோய்டுவாங்க. அவனும் கதை சொல்ற சுவாரசியத்தில் அடுத்தடுத்து சொல்லி முடிச்சதும். ப்பா... நான்லாம் ஸ்கூல் பாஸ் பண்ணேன். அப்ப “லா” படிக்க சொன்னாரு படிக்கறேன் அவ்ளோதான். ஆனா உங்களுக்கு உள்ள இவ்ளோ கதைகளானு கேப்பாங்க.

இப்படி வாழ்கையில் தனக்கான கதைகள் இல்லாத மனிதர்கள் நிரம்ப அதிர்ஷடசாலிகள். அவர்களாலே வெறும் கதைகளோடு மட்டுமே அலையும் பரியன்களின் கதைகளை வெகு ஆர்வமாக ரசிக்க இயலும். ரொம்ப கணக்கும் இதயத்தோடு இறுதி காட்சியில் நாம் கிளம்பும் ஒரு 1.3௦ நிமிடங்களுக்கு முன்ன பரியன ஜோ அப்பா பாத்திரம் சந்திக்க வருவார். கிட்டத்தட்ட இரண்டாம் பாதி முழுக்க நாம ஜோவ மறந்தே போய் இருப்போம்.  பரியன் மட்டுமே ரொம்ப ஆழமா நமக்குள்ள இருப்பான். அந்த நேரத்துல அவங்க அப்பாவையும், பரியனையும் உக்கார வெச்ச்சிட்டு ஜோ ஏதாவது வாங்கிவர CANTEEN போவாங்க. அப்ப அவங்க அப்பாகிட்ட ஏதாவது பேசசொல்லி சைகை பண்ணுவாங்க. இந்த ஆனந்தி பொண்ணு இன்னும் இருவது வருஷம் இங்க இருந்தாலும் இப்படியான ஒரு காட்சி திரும்ப கிடைக்காது. ஆனா அதுக்கு அப்பறமும் அது எல்லார் மனசிலையும் நிக்கும்படி அந்த சில வினாடி காட்சிகளில் அவ்ளோ அட்டகாசபடுத்தி இருக்காங்க.

இந்த படம் காதல மட்டும் சொல்லையே. இது சொன்ன விசயமே வேற. ஆனா இந்த படம் அனைத்து பார்வையாளரும் ஏற்று வெற்றி படமானதுக்கு மிகபெரிய காரணம் அந்த பெரிய கண்ணும், ஒரே வெக்க சிரிப்பையே அனைத்து காட்சிக்கும் பொருந்திபோற போல கொடுத்த ஜோதான். தமிழ் சினிமா தொடாத பாத்திரபடைப்புகள் இந்த படத்தில் உண்டு. இப்படியான படங்களை பார்க்கும் போதுதான். பாவம் அவனும் எத்தனை கதைதான் எடுத்துட்டே இருக்கமுடியும். எல்லா கதையும்தான் சொல்லியாச்சேனு நாம அடிக்கடி சமாதானம் சொல்லிகிட்டது. எவ்ளோ பெரிய முட்டாள்தனம்னு நமக்கு தெரியும். இன்னும் சொல்லபடாத கதைகளும். அறிமுகபடுத்தபடாத பாத்திரங்களும் லட்சகணக்கில் நம்மள சுத்தி இருப்பது நமக்கே உரைக்கும். முதல் கதையில் இப்படியான எதிர்பார்ப்பை சமீபமா எந்த புது இயக்குனரும் ஏற்படுத்தல. தன்னோட முதல் படைப்பிலே இப்படியான வலியயும் யாரும் சமீபமா தரல. இந்த ஒரே படத்துக்கு மட்டும் தான் அடுத்து இன்னொரு பதிவும் எழுத தோணுது. இதே மாரிசெல்வத்துக்கு பெரிய வெற்றிதான!..

Tuesday, September 18, 2018



பார்த்ததில் மிகவும் ரசித்தது: 134.


9௦ களில் GULF நாடுகளை நோக்கி படையெடுக்கும் கலாசாரம் துவங்கிய காலகட்டமே இப்படத்திற்கான களம். கணவன் பிழைப்பிற்கு வெளிநாடு செல்ல, மும்பையில் பெரும் இரைச்சல்களுக்கிடையே வெறும் தனிமையை மட்டுமே துணையாக கொண்டு வாழும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பெண். தன் ஆடைகளை தைய்க்கும் தையல்கார இளைஞன் மீது ஏற்படும் ஈர்ப்பையும் தாண்டிய ஒரு உணர்வு. தன்னில் வயதிலும் தோற்றத்திலும் சற்று மூத்தவள். அதற்க்கான இடைவெளியுடனும் படத்தின் துவக்கத்தில் ஆரம்பமாகும் வெறும் சம்பாசனைகள் இறுதிவரை வெறும் சம்பாசனைகளாகவே இருந்தும், இவர்கள் ஒரு முழு காதல் கதையின் அனைத்து உணர்வுகளையும் நம்முள் கடத்தியது எப்படி??..

வெறும் தனக்கான ஆடையை தைக்கும் விதம் குறித்த பேச்சில் துவங்குகிறது இக்கதை. தனது வாடிக்கையாளர் மற்றும் நம் பகுதியில் வசிக்கும் குடும்பத்தாருடன் பழக்கமான பெண். இந்த அளவுகோலிலே அவனது பேச்சும் இதனில் அவளது சிறு தடுமாற்ற பார்வைகளும், சிறு தினரல்களுடன் அவளது பேச்சும் முதல் நிமிடத்திலே துவங்கிவிட. அவனது பேச்சிலும் அந்த தடுமாற்றம் தொற்றி கொள்கிறது. பின் அவளது நடுக்கத்திற்கு இடையே அரைகுறை புரிதலுடன் தேனீர் அருந்த சம்மதிக்கிறான். தேநீர் தயாரிப்பிற்காக அவள் உள்ளே செல்ல அவள் அருகமையில் இருந்து விடுபட்டு தன்னை அந்த சில நிமிடங்களில் ஆசுவாசபடுத்தி கொண்டவனின் அதன் பின்னான பேச்சில் துளியும் நடுக்கமோ, தயக்கமோ இருக்காது.

தேநீரையும் ரசித்து குடித்தவன். தனது சகோதரன் அடுத்த வாரங்களில் RIYADH செல்லவிருப்பதால் தங்கள் கணவருக்கு ஏதேனும் கொடுத்து அனுப்புமாறும் தெரிவித்து விட்டு நகர்கிறான். அவனுக்கு பின்னே சென்று கதவடைத்தவள். மீண்டும் தன் தனிமை உலகத்திற்குள் நுழைகிறாள்.  தனது தடுமாற்றத்தை அவன் கண்கூடாக கண்டுகொண்டதை உணர்கிறாள். எப்பொழுதும் சற்று வேகமாக எந்த பணியையும் செய்பவள். சிறு குழந்தையை குளிப்பாட்டுவது போல அவன் தேநீர் அருந்திய கோப்பையை சுத்தம் செய்கிறாள். தன் நிலையை தினமும் நடுநிசி வரை ஓயாமல் கேட்கும் இரைச்சல் இடையே நினைத்தபடியே தனது தொழுகையை துவக்குகிறாள். பின்னணியில் மெலிதாக துவங்கும் வயலின் அவளின் தொழுகை நிறைவடையும் பொழுதில், நம் மனம் முழுக்க அதனுள் லயிக்கும் நொடியில் அவளின் விசும்பல் பெரும் அழுகையாக மாற நாம் அந்த பின்னணி வயலினை நிறுத்தி அவளை எப்படியேனும் காத்திட இயலாதா என எண்ணவைக்கும். நம்மை லயிக்க செய்த அந்த இசை. நமக்கு இது நாம் வேறுவிதமாக நாம் கணித்த கதையல்ல என்பதை ஆணித்தரமாக கூறி செல்லும்.

தன் கணவனுக்கானதை வாங்க கடைவீதிக்கு செல்பவள். அவன் தன்னை பின் தொடர்வதை உறுதிபடுத்தி கொண்டு பதறி மீண்டும் கூடடைகிறாள். பின்னும் அவன் பின்னே தொடர்கிறானா எனும் எதிர்பார்ப்பும், தன் நினைப்பை அவன் அறிந்திட நேருமோ என்ற தயக்கமும். மிக மெலிதாக நம் நிலையை அவன் உணர்ந்திட மாட்டானா என்றும் எதிர்பார்கிறாள்.. தான் அவளை பின்தொடர்ந்ததும், தன்னை அவள் கண்டுகொண்டதையும் உணர்ந்தவன். அவனுக்கான அடுத்த சந்திப்பிற்கு ஆயத்தமாகிறான். ஆம் அவளுக்காக ஆடையை மிக நேர்த்தியாக அப்பொழுதே தைய்க்க துவங்குகிறான். ஒரு வாரத்திற்குள் கொடுக்க வேண்டிய ஆடையை ஒரே இரவில் முடித்து அடுத்த நாள் விடியலில் அவளுக்கான காலை சிற்றுண்டியுடனும் ஆடையுடனும் அவளை சந்திக்க இருக்கிறான். இந்த யோசனை ஏதுமின்றி அவள் அந்த இரவிலே கரைந்திருக்கிறாள். இது இப்படத்தின் முதல் பத்து நிமிடத்திற்கான காட்சி மட்டுமே.

முழுக்க இந்த இரு கதாபாத்திரங்களும், அந்த இரைச்சலான பம்பாய் நகர வீதியும். இவர்களுடனே நம்மை பிடித்து வைத்திருக்கும் வயலின் மற்றும் புல்லாங்குழலின் பிண்ணனியும். எந்த காதல் ரசம் பூசிய பாசாங்கில்லாத வெறும் உரையாடல்கள் மட்டுமே. அதன் வழியே அவர்களின் எண்ண ஓட்டங்களை உணர்வுகளாக்கி நமக்கும் கடத்தியது என சராசரியாக நாம் பார்த்த, ரசித்த கதைகளில் உணர்ந்த பல... இப்படத்தில். அதில் விசேஷம் அவற்றை எந்த அலங்காரங்களும் அழகிய நாயகிகள் அறிந்த முகங்கள் என எதுமில்ல ஏதோ நாடக ஒத்திகை போன்ற இப்படத்தில் உணர்செய்தது ஒன்றே இப்படத்தை ரசிக்க போதுமானதாகும்.


TANUJA CHANDRA இயக்குனர். DIL TO PAGAL HAI படத்திக்கு திரைக்கதை இவர்தான். ஒரு மணி நேரத்திற்கும் குறைவான படம். ஆனால் அதை உணர செய்யாத முழு காதல் படம் பார்த்த உணர்வை கொடுக்கும் . 

Sunday, September 2, 2018




பார்த்ததில் மிகவும் ரசித்தது: 133.

எந்த திறமையான இயக்குனரும் அனைத்து களங்களிலும் தனது  பாணியில் படைப்புகளை கொடுக்கயியலும் சில களங்களை தவிர. அதில் மிக முக்கிய களம் SPORTS GENRE. காரணம் அவை இதற்க்கு முன் நம்மிடையே உருவாக்கி வைத்திருக்கும் பிம்பம். ஏழ்மையான இளமை காலம். தனது முயற்சிக்கு தனது குடும்பமும் சமூகமும் எதிராக இருப்பது. இடையில் வரும் காதல். (பெரும்பாலும்) அதை தனது லட்சியத்திற்காக தியாகம் செய்வது. உயிரை வருத்தி தனது லட்சியத்திற்காக உடலையும், மனதையும் தயார் செய்வது. கிட்டத்தட்ட அனைத்தையும் இழந்து இறுதியில் வெற்றி பெறுவது. இந்த வகைகளில் ஏதேனும் மூன்று, நான்கு கண்டிப்பாக அனைத்து SPORTS GENRE கதைகளிலும் இருந்தே ஆகவேண்டும். அப்படிப்பட்ட களத்தை தனக்கான பாணி கதை சொல்லல் மூலம் இந்திய சினிமாவை கவனம் ஈர்த்த ஒருவர் தொடுகிறார். இவரும் இவ்விதிகளுக்கு உட்பட்டு மட்டுமே இக்கதையை கையாள முடியும் என்ற எண்ணத்தை கதை துவங்கிய முதல் நிமிடத்திலேயே அடித்து நொறுக்குகிறார்.

இந்த பாணி கதையில் இவருக்கான STYLE கொண்டு வர வாய்ப்பே இருக்காதே. அதையும் கதையின் போக்கை எங்கேயும் மாற்றாமல் வெகு இயல்பாக உள்நுழைக்கிறார். சொல்லப்போனால் துவக்க அந்த கலவர காட்சிகளில் இருந்தே படம் துவங்குகிறது. இதுவரை அவர் அதிகம் பயன்படுத்தாத காதலை அதன் பின் இக்கதையினுள் கொண்டுவருகிறார். அதன் பின்னான கதை அந்த சாதிய கலவரமும், குறுகுறு காதலுடனும் + BOXING உடனும். இந்த பாணி கதைகளுக்கே துளியும் சம்பந்தம் இல்லாத திடுக் கிளைமாக்ஸ் உடன் முடிகிறது. இதில் அவர் எங்குமே தனது பாணியையும் SPORTS GENRE க்காக விட்டு தரவில்லை. அதே போல இந்த விளையாட்டிற்கு உண்டான மரியாதையையும் குலைக்கவில்லை. சொல்ல போனால் அதே பழைய பாணியை காட்டிலும் இவ்விளையாட்டிற்கு அதிக முக்கியத்துவமே கொடுத்துள்ளார்.

அதே நடுத்தர வர்கத்தை சேர்ந்த நாயகன். தனது ஒரே கனவான NATIONAL LEVEL BOXING TOURNAMENT ல் வெற்றி பெற வேண்டி தன்னை தயார் செய்கிறான். ஜாதி வெறி பிடித்த தனது பயிற்சியாளரிடம் ஏற்படும் சிறு மோதலால் அங்கிருந்து வெளியேறுகிறார். இதில் அவரின் குடும்ப பெண்ணுடனே காதல். அதன் பின் DISTRICT TOURNAMENT முதல் NATIONAL வரை அவர் சந்திக்கும் பிரச்சனைகள். அதில் அவர் வெற்றி வாகை சூடினாரா? என்பது  மட்டுமே கதையல்ல. அந்த பயிற்சியாளரால் ஏற்படும் தடைகளும் அதிலிருந்து இவர் அடுத்தடுத்த படிகளுக்கு செல்வதுமே இக்கதையின் சுவாரயசித்திற்கு மிக முக்கிய காரணம்.
மற்ற வகை கதைகளை காட்டிலும் அதிகபட்ச உழைப்பை இவ்வகை கதைகள் நாயகனிடமிருந்து எடுத்து கொள்ளும். அதை GANGS OF WASSEPPUR மற்றும் UGLY படங்களில் தலை காட்டிய VINEETH KUMAR SINGH இப்படத்திற்காக சற்று கூடுதலாகவே வழங்கியுள்ளார். இயல்பிலே நல்ல கட்டுமஸ்த்தான தோற்றம். இதில் BOXING கதைக்காக கூடுதல் முருக்கேறியவர். அவரை ஒரு சிறு சிரிப்பில், ஒரு தெனாவட்டு பார்வையில், தெற்று பல் தெரிய முகம் சுளிக்கும் அழகில் காதலில் விழவைத்தால் அது பார்வையாளனால் நம்பமுடியாது என நினைத்தாரோ என்னவோ ZOYA HUSSAIN எனும் அழகியை தருவித்திருக்கிறார். இயல்பிலே அந்த கண்களில் திமிரும், எகத்தாளமும் நிரம்பி வழிகிறது. இப்பொழுது நம் நாயகன் முதல் பார்வையிலே காதலில் விழுகிறான்.

தனியே தன் சகோதிரியின் கணவரோடு உரையாடுகையில் தன்னை எதிர்த்து பேசினார் என்பதற்காக வஞ்சம் வைத்து பழிவாங்கும் வில்லனாக அந்த பயிற்சியாளர் வேடத்தில் JIMMY SHEIRGIL. இதற்க்கு முன் A WEDNESDAY, MY NAME IS KHAN, MUNNABHAI போன்ற பெரிய படங்களில் தலை காட்டினாலும் பெரிதும் வெளியில் சோபிக்காதவ்ர். அஞ்சாதே மூலம் தன்னை வேறு பாணியில் நிலைநிறுத்தி கொண்ட பாண்டியராஜனை போன்று. இந்த படம் இவரை வேறு தளத்திற்கு அழைத்து செல்லும். இக்கதையின் அனைத்து சுவாரசிய காட்சிகளுக்கும் சொந்தகாரனாக. மொத்த பார்வையாளனின் கவனமும் நாயகனை தாண்டி இவர் மீதே நிலைத்திருக்க செய்யும் உழைப்பை (எனக்கு தெரிந்து) முதன்முறை இக்கதைக்காக வழங்கிஉள்ளார்.

இப்படியான கலவர கதையில் SPORTS GENRE களமாக தேர்ந்தெடுத்ததற்கே இயக்குனருக்கு மிகபெரும் பாராட்டு. அதிலும் காதலை இந்த களத்தில் பயன்படுத்திய அளவு இந்த வகை படங்களில் இதற்க்குமுன் பார்த்ததில்லை. வழக்கமான இந்த இயக்குனரின் படங்களில் LIGHTING, மிரட்டல் CAMERA ANGLES, SHARP EDITING, BGM என TECHNIAL சங்கதிகள் அனைத்தும் இப்படத்திலும் மிகசிறப்பாக கையாளப்பட்டுள்ளது. அந்த இயக்குனர். (இந்த பயிற்சியாரின் நடவடிக்கைகளும், இப்படத்தின் காதல் காட்சிகளும் திட்டமிட்டே விவரிக்கபடவில்லை.)


“அனுராக் காஷ்யப்”

TRAILER LINK:

https://www.youtube.com/watch?v=fl3gun0J8XM

Saturday, August 25, 2018




பார்த்ததில் மிகவும் ரசித்தது: 132.

எந்த படமும் பார்ப்பதற்கு முன் அந்த படத்தை பற்றிய அபிப்பிராயம் நம் மனதில் பெரும்பாலும் இருக்கும். அதாவது இதன் கதை இவ்வாறே இருக்கும் என்ற யூகம். அல்லது படம் துவங்கிய சில நிமிடங்களில் இந்த கதையை இவ்வாறே நகர்த்தி செல்ல இயலும் என்பது போல அந்த படமும் அவ்வாறே அமையும் பட்சத்தில் கொஞ்சம் தோய்வான திரைக்கதையோடே இருப்பினும் அவை நம் மனதுக்கு சற்று நெருக்கமானதாக உணர செய்யும். மாறாக அப்படம் நம் யூகங்களுக்கு அப்பாற்பட்டு வேறொரு தளத்திற்கு கொண்டு செல்லும் மாய விந்தைகள் நிகழ்த்தினாலும் அவை பார்வையானின் மனதிற்கு நெருக்கமாவது சற்று கடினம். இக்கதையும் அவ்வாறே நம்யூகத்திலிருந்து வெளியேறி தலையில் நடந்து காட்டும் பிரயாத்தனங்கள் ஏதும் பண்ணாமலே சட்டென நம் மனதிற்கு நெருக்கமானது.


வேறெந்த எதிர்பார்ப்பில் வரும் பார்வையாளனை விட காமம் மேலோங்கிய கதையென வருபவனுக்கு ஒரு மூன்று காட்சிகளேனும் அவனுக்கானதாக இருந்தே ஆகவேண்டும். அதைதவிர்த்து`எந்த குட்டி கரணமும் அங்கு செல்லுபடியாகாது. அவ்வாறான பார்வையாளனாகவே இக்கதைக்குள் நானும் நுழைந்தேன். என்னுடைய எந்த யூகங்களையும் ஒரு பத்து சதவீதத்திற்கு மேல் பூர்த்தி செய்யாத இக்கதை மனதிற்கு நெருக்கமானது மட்டுமின்றி. மனதில் சம்மணமிட்டு அமர என்ன காரணம்.


சிறைச்சாலை நோக்கி விரையும் வாகனம். கைதிகளின் பெரும் கூச்சளுக்கிடையே நீலத்தையே வெப்பமான வண்ணமாக்கிய (BLUE IS THE WARMEST COLOUR – நாயகி) அந்த அரூப அழகி ADELE யின் அறிமுகம். அது பழைய நினைவுகளுடன் நம் யூகங்களை மேலும் பலமடங்காக்குகிறது. அவ்வாகனம் ஒரு சிறைச்சாலைக்குள் விரைகிறது. அதே வழக்கமான சம்பிரதாயங்களுடன் சோதனைக்கு பின் சீருடை வழங்கபடுவது. தனது அறையில் சககைதிகளுடனான ஆரம்பகட்ட மோதல் பின்வரும் காட்சிகளில் அவர்களுடனான நட்பு. அந்த சிறையில் உள்ள மோசமான கைதிகளுடனான கைகலப்பு. இதில் பெரும்பான்மையான எந்த யூகங்களும் இல்லாமல் முழுகதையும் சிறைச்சாலை உள்ளேயே.


அச்சிறைசாலையின் கடைசி அறைக்கு அழைத்து செல்லப்படுகிறாள். அவளுடனே பயணிக்கும் நமக்கும் அவ்வளாகத்தின் யதார்த்த சூழல் அனைத்து இடங்களையும் நமக்கும் பரிச்சயமாக்குகிறது. அவ்வளாகம் மற்ற சிறைச்சாலையை போன்றே வடிவங்களை கொண்டிருப்பினும், அங்குள்ள யதார்த்த சூழல் இப்படத்தை மற்ற வகையிலும் தரமான நல்ல படைப்பாக்க விளைகிறது. நீண்ட இந்த துவக்க காட்சியே நமது யூகங்களை தாண்டிய வேறொரு எதிர்பார்ப்பு இக்கதையின் மேல் ஏற்பட முதல் புள்ளி இடுகிறது. இப்படியான துவக்க காட்சியிலேயே இதன் இயக்குனர் யார் என்ற கேள்விகள் நம்முன் எழவைத்ததும் அவரின் வெற்றியே.


அவர் MR. NOBODY படத்தின் இயக்குனர் PIERRE GOFEAU என்றதும். நம் யூகங்களை வேறொரு ரசனைக்கு நம்மை அறியாமல் மாறும் இரண்டாம் புள்ளி இது. அவளுக்கு ஒதுக்கப்படும் சமையல் பணியில், எதிர்பாரா நொடியில் அவனை சந்திக்கிறாள். அவன் அச்சிறைசாலையின் முக்கிய அதிகாரி. கைதிகள் ஒவ்வொருவரின் அன்றாட நடவடிக்கைகள் குறித்தி அரசாங்கத்திற்கு தெரிவிக்கும் பணியில் உள்ளவன். அவனிடம் தன் ஒரே உறவான தாயால் அதிக தொலைவின் காரணமாக தன்னை சந்திப்பதில் உள்ள சிரமங்களை கூறி வேறு சிறைக்கு மாற்ற கூறிவருகிறாள். அவனும் அதற்க்கான ஆவணம் செய்வதாக உறுதி அளிக்கிறான்.


இதில் பார்த்ததும் வரும் காதல் கொள்ளும் காட்சிகளில்லை. காமமும் உடனடியாக கசிந்தொலுகும் சூழல் இல்லை. இப்படியான நாயகியையும், சிறைச்சாலை என்ற களத்தையும் கொண்டு வெகு எளிதாக பார்வையாளனை நிறைவடைய செய்திருக்க இயலும். ஆனால் இக்கதைக்காகவும், இவர்களுக்கிடையேயான அந்த ஈர்ப்பை மிக யதார்த்தமாக வெளிக்கொண்டுவர எடுத்து கொண்ட முக்கியத்துவமும். கைதி மற்றும் அதிகாரி என்ற நிலையில் இருந்து எங்கும் விலகாமல், அவர்களின் முதல் கூடல் வரையான உருவாக்கல் தான். தனது யூகங்கள் பொய்த்து போனாலும் இக்கதையின்பால் பார்வையாளன் ஆர்வமேற்ப்பட மிக முக்கிய காரணியாகும்.



துவக்க காட்சி முதல் சிறிது சிறிதாக மாறிவரும் இவர்களின் எண்ண ஓட்டத்தை மிக அழகாக நமக்கு கடத்திய பின்னணி இசையும். துவக்கத்தில் அவனுடன் இணைந்து, பின் அடுத்த காட்சிகளிலே அவனது குடும்பம் குறித்து கோபத்துடன் வினவும் இடங்களில், வீக்கென்ட் குடும்பத்துடன் செலவழிக்க செல்பவனை ஆத்திரத்துடன் அணுகும் இடங்கள் மற்றும் இறுதியில் அவனுடன் விடுதியில் கழிக்கும் பொழுதுகள் என அனைத்து காட்சிகளுக்குமான லைட்டிங்கை இவர்கள் இருவரின் மனநிலைக்கு ஏற்ப அமைக்கபட்டிருக்கும். அவை நம்மையும் வெகு இயல்பாக அவர்களுடன் பயணிக்க செய்யும். இவை அனைத்திற்கும் மேல் நாயகி ADELE முழுக்க இந்த ஒரு பாத்திரத்தின் மாற்றங்களை கொண்டே கதை நகரும் என்ற சூழல் உணர்ந்த அவரின் பங்களிப்பே இக்கதைக்கான முக்கிய புள்ளியாகும்.

http://www.distribfilmsus.com/our-movies/down-by-love-eperdument/

Saturday, August 11, 2018




பார்த்ததில் மிகவும் ரசித்தது: 131.

இந்திய சினிமாவில் பெரும்பான்மை நடிகைகளால என்ன செஞ்சிட முடியும். தன் அழகால ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கலாம். தான் நடிக்கும் கதாபாத்திரத்தின் மூலமா கொஞ்சம் நல்ல பெயர் கூட வாங்கலாம். அடுத்த வருடங்களில் வாய்ப்பு குறையும் நேரத்துல கொஞ்சம் கவர்ச்சி வேடங்களை ஏற்கலாம். பின் நாளாவட்டத்தில் அவங்க பேர் மட்டும் கொஞ்சமா ஞாபகத்துல இருக்க. அவங்கள திரையில பாக்கமுடியாது . இதுதான் பெரும்பான்மை நாயகியரின் நிலமை. இதிலும் தன்னோட அபிமான நடிகைனு எந்த ரசிகனும் ஒரு படத்தை பார்க்க போறதில்ல. தன் விருப்ப நாயகன். இயக்குனர் இல்லனா அந்த படத்தை பற்றிய பாசிடிவ் ரிசல்ட். இதுல ஏதாவது காரணம்தான் இருக்கும். அவன் பாக்கும் படத்தில அவன் விருப்ப நாயகி  இருந்தா ரசிப்பாங்க. அடடா இந்த நல்ல படத்துல நம்ம நாயகி இல்லைன்னு வருந்தமெல்லாம் யாருக்கும் இல்ல. இதுதான் கிட்டத்தட்ட எல்லா நடிகைகளின் நிலை. இப்படி ரொம்ப நல்ல நடிகைகளுக்கும் நிரந்தரமில்லாத இந்ததுறைல 19 வயதில் நடிக்க தொடங்கி, இந்த ஆறு வருடங்களில் 14 படங்கள். அப்படங்களின் TEASER இல்ல, அதோட FIRST LOOK லயே தெரிஞ்சிக்கலாம் இந்த படத்துல அவங்க பண்ற பாத்திரத்த பத்தி. இன்னைக்கு இவர் ஒரு படத்தில் இருக்கறது ஒன்னே போதும் நல்ல சினிமா அபிமானிகளுக்கு. இந்தப்படம் கூட அவரோட திரைபயணத்தில ரொம்ப முக்கியமானதுதான்.


1971 ல நடந்த இந்தியா பாகிஸ்தான் போருக்கு முன்னாடி ரெண்டு வருஷம்தான் இந்த படத்துக்கான கதைக்களம். ஜம்முகாஷ்மீரிலிருந்து தொழில் விஷயமா பாகிஸ்தான் போயிட்டு வரும் நாயகியோட அப்பா. இந்தியா பாகிஸ்தான் மீதான ரகசிய நடவடிக்கை பத்தி அங்க உளவு சொல்லிட்டு இருக்கார். அவரோட தகவல்கள் பெரும்பாலும் உண்மையாவே இருக்க. அவங்க ராணுவத்தில ரொம்ப பெரிய அதிகாரிகளோட பழக்கம் எற்படுது. அதுல உயர் பதவில இருக்கற ஒரு அதிகரியோட இளைய மகனுக்கு தன்னோட பொண்ண நிக்கா பண்ணி வைக்கறார். இந்த கதையே கொஞ்சம் சுவாரசியமாக இருக்கில்ல.  ஆனா பாகிஸ்தானுக்கு உளவு பார்த்துவந்த நாயகியோட அப்பாவே ஒரு டபுள் ஏஜண்ட். அவர் பொண்ண நிக்கா பண்ணிவெக்கறதே அவளும் இந்தியாவுக்காக பாகிஸ்தானுக்கு உளவு பார்க்கறதுக்குதான். இப்ப கதையும் டபுள் சுவாரசியமாகுதா. இப்ப இந்த திர்ல்லிங் கதைகளத்தில நம்மள கடைசிவரைக்கும் எதிர்பார்போடவே வெச்சிக்க அவங்க கதையில சேர்த்த எல்லா சமாச்சாரமும் செமசுவாரசியம்.


தன் திருமணத்திற்கு ஒரு மாசம் மட்டுமே இருக்கும் சூழல்ல சிபிஐ-ன் சிறப்பு பயிற்சிக்கு நாயகி போறார். மேற்சொன்ன சங்கதிகள்தான் படம்னு நினைக்க வேணாம். இக்காட்சிகள் படம் துவங்கிய முதல் 15-2௦ நிமிடங்களுக்குள் வரும் காட்சிகளே. பயிற்சிக்கு போகும் நாயகிக்கு நம்ம நினைக்கற போல COMPUTER HACKING வேலையெல்லாம் கிடையாது. ஏன்னா கதை எழுபதுகளில் நடக்குது. அந்த காலத்திலயே நம் உளவுதுறையில உள்ள சங்கதிகள், சங்கேத வார்த்தை பரிமாற்றங்கள்னு சொல்லப்படும் சமாச்சாரங்கள் பூரா நாயகியோட சேர்த்து நம்மையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துது. அத கொஞ்சம் கொக்கு மாக்கு இருந்தாலும் கடைசி வரை கொண்டு வந்து முடிச்சிருக்காங்க. கல்லூரிக்கு போற ரொம்ப இளகிய மனம் படைச்ச பொண்ணாதான் நாயகி அறிமுகமாறாங்க. அப்பா மாறியே நம்ம தேசத்துக்கு ஏதாவது செய்ய நினைச்சிதான் இந்த நிக்காக்கும் சம்மதிக்கறாங்க. ஆனா அந்த பயிற்சி சமயத்துல தான் பெரிய தப்பு பண்ணிட்டத உணர்றாங்க. பயிற்சில நெறைய விசயங்கள தப்பா செஞ்சி பயிற்சியாளர்கிட்ட மன்னிப்பு கேக்கும்போது சொல்லுவாரு.

“நான் இங்க மன்னிச்சு எதும் ஆகபோறதில்ல. அங்க உன்ன மன்னிக்க யாரும் இருக்க மாட்டாங்க.” நீ பண்ற ஒரே ஒரு சின்ன தப்பு உன் வாழ்க்கை அதோட முடிஞ்சிடும். அதனால கவனமா இருனு சொல்லுவாரு.”

அப்ப நம்மள மாறியே அந்த பொண்ணுக்குள்ளவும் ஒரு பயம் படரும். அத கதையோட எல்லா எடத்துலயும் அந்த பொண்ணோட கண்ல அப்படியே இருக்கும். அவ கணவனோட காதல் காட்சில கூட அந்த குற்ற உணர்வோடவே இருப்பா. இதுல அதிக திர்லிங்கே பாகிஸ்தான்லதான். அவ கணவனை சின்ன வயசில இருந்தே தூக்கி வளர்த்த சீனியர் வேலையாள்தான் அந்த வீட்டில் எல்லாமும். தற்செயலா ஆலியா சொதப்பும் சின்ன சின்ன விசயமெல்லாம் அவனுக்கு இவமேல சந்தேகமாவே இருக்க. ஒரு காட்சில கையும், களவுமா அவன்கிட்ட மாட்ட. அவனை கொல்ல வேண்டிய சூழல். ராணுவத்தின் முக்கிய முடிவு எடுக்கற அதிகாரியோட அந்தரங்க வேலையாள் மர்ம மரணம்.  அந்த அரசாங்கத்தையும், அந்த குடும்பத்தையும் விழிக்க வெச்சிடும்.


ஒவ்வொரு முடிச்சாக விலகி மாட்டிகொள்ளும் சூழல் நெருங்க, நெருங்க அதிலிருந்து எப்படி தப்பிகறா இதுதான் கதை. இதற்கிடைல அவங்களோட ராணுவ தகவல்கள வேற இங்க பாஸ் பண்ணனும். இன்னும் தல போற நேரத்துல அவளுக்கு உதவ அந்த நாட்டில் பஜாரில் ஒரு மளிகைகடைகாரர், ஒரு பூ வியாபாரி, ஒரு ரிக்க்ஷாகாரர் இருப்பாங்க.  ஆனா அவங்கள நேரடியாக மட்டுமேதான் சந்திக்க முடியும். ஆனால் புகுந்த வீட்டிலும் காரணமில்லாமல் வெளியே போக முடியாது. யோசனையும் யார்கிட்டவும் கேக்கவும் முடியாது. அவகிட்ட இருக்கும் உபகரணங்கள வெச்சி வெறும் தகவல்களை சங்கேத வார்த்தைகளா அங்க அனுப்ப மட்டும்தான் முடியும். நம்ம பக்கமிருந்து எந்த தகவலும் அவளுக்கு சொல்ல முடியாது.


இவளுக்கு உதவ இருந்தவங்களும் ஒவ்வொருதரா பாகிஸ்தான் உளவுதுறைல மாடிக்கறாங்க. அந்த நேரத்துலதான் அவங்க கடல் வழியா நம்ம நாட்டுமேல போர் தொடுக்க போறதா உறுதியான தகவலும் இவளுக்கு கிடைக்கும். ஆனா அத சொல்ல எந்த வழியும் இருக்காதுன்னு. படம் முழுசாவே ரொம்ப திர்ல்லிங்காவே போவும். சின்ன சின்ன ரியாஷன்லையே செம்மதையா ஸ்கோர் பண்ற பொண்ணுக்கு இந்த படம் பூரா மொத்த ஷாட்ஸ்யும் தன்னோட கன்ட்ரோல்லயே வெச்சி அதகளம் பண்ணிடுச்சி. அவகூடவே நம்மளையும் பயந்து, லேசா சிரிச்சி, அழவெச்சினு. இப்பவும் நான் கதையா சொன்னது ஒரு பத்து சதவீதம்தான். .

காதலால கடமைல வரும் தடுமாற்றங்கள நமக்கு அருமையா சின்ன சின்ன முகபாவங்கள்ளயே சொல்லிருக்கு. எல்லாத்தையும் விட ரொம்ப முக்கிய விஷயம் பாகிஸ்தானி பூரா இந்த படத்த ரொம்ப பெருமையா பாக்கலாம். அவங்கள அவ்ளோ கௌரவமா காட்டி இருக்காங்க.


“ஒரு சின்ன பொண்ணுகிட்ட இப்படி ஒரு அரசாங்கமே ஏமாந்துடுச்சேனு ஆலியா மாமனார் கோவப்பட ஆரமிக்கற நொடியிலேயே, ஆலியா கணவன் சொல்லுவான். “ அவள தப்பா பேசாதிங்கப்பா அவளும் இதெல்லாம் அவ நாட்டுக்காகதான செஞ்சானு.” கூடுதல் சுவாரசியம் இது உண்மை கதையாம். உண்மையா இப்படி போன ஒரு பொண்ணு கொடுத்த தகவலாலதான் அந்த போர்ல நம்மால ரொம்ப சுலபமா வெற்றி அடைய முடிஞ்சிதாம். TALVAAR, DRISHYAM பண்ண MEGNA GULZAR தான் இந்த படம் பண்ணிருக்காங்க. அங்க இருந்தும் இன்னும் ஒருபடி இப்ப மேலதான் வந்திருக்காங்க. 

TRAILER LINK:

https://www.youtube.com/watch?v=YjMSttRJrhA

Search This Blog