Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Monday, November 20, 2017

Raman Raghav 2.0 (2016) -

 
பார்த்ததில் மிகவும் ரசித்தது : 082.

அலமாரியில் உள்ள புத்தாடையை அணியும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள சிறார்களை போல், பெரும்பான்மை இரவுகள் தன்னால் கொடூரமாக கொலை செய்யப்படும் நபர்களை அறிய வெகு ஆவலுடன் காத்திருக்கும் இக்கதையின் பிரதான பாத்திரம்.


தானோ அல்லது தனது குடும்பத்தார், நண்பர்கள், காதலி இவர்கள் யாரால் பாதிக்கப்பட்டர்களோ அவர்களை ஆக்ரோசமாக பழிவாங்கும் அல்லது இறுதியில் அவர்களை மன்னித்து செல்லும் பாத்திரங்களை மட்டுமே பார்த்து மகிழ்ந்த நம்மை செவிட்டில் அறையும் சினிமா.


இலக்கே இல்லாமல் தன் மனதுக்குப்பட்ட, தனக்கு மிகப்பிடித்த நபர்களாக தேர்ந்தெடுத்து. சாதாரணமாக இல்லாமல் கொடூரமாக பெரும்பாலும் இரும்பு ராட்டில் அடித்தே கொல்வதை மிக இயல்பாக, ரசித்து மகிழும் பாத்திரம் எப்படி இருக்க வேண்டும். என எந்த வரைமுறையும் அற்று மிகச்சாதரணமாக நவசுதின். இந்த முறை அவர் தொட்டது உச்சம்.


அவரின் நடை, பாவனை, நக்கல் பேச்சின் லாவகம், போலீசாரிடம் சிகரட் கேட்க்கும் பாங்கு. முதல் கொலையில் தென்படும் பதற்றம், தனது இயல்பிலிருந்து சட்டென மாரும் நொடியில் கொலை புரிய துவங்குவது. கொல்ல யாருமற்று நடுஇரவில் சாலையில் செல்கையில் கடக்கும் தெருநாய் தன்னை கேலி செய்வதாக எண்ணி அதை விரட்டும் இடத்தில் தென்படும் கோபம்.  விரக்தியுடன் செல்லும் வழியில் கைக்குழந்தையுடன் வெட்ட வெளியில் சமைத்து கொண்டிருக்கும் பெண்ணை காணும் நொடியில் அவன் கண்களில் தென்படும் பரவசம். பெரும் ஆனந்தத்துடன் அவளை கொல்ல அவசரத்தில் ஒரு செங்கலை எடுத்து ஓடிவரும் வேலை, அங்கு பத்திற்கும் மேற்பட்டோர் அமர்ந்து உணவருந்தி கொண்டிருப்பதை கண்ட வினாடி அவன் முகத்தில் சடாரென பரவும் வெறுமையும், ஏமாற்றத்தையும்.... என இவ்வளவு உணர்ச்சிகளையும் வார்க்கப்பட்டது போல நவசுதின்.


தனிமனிதனை மட்டுமே சுற்றி சுழல கூடிய கதையில் அகன்ற ஈர விழியும், உலர்ந்த உதட்டின் சொந்தக்காரி அசிஸ்டன்ட் கமிஷனர் காதலியும், தனது அண்ணனை சந்தித்த பதட்டத்தை உடலின் அனைத்து பாகங்களிலும் வெளிப்படுத்தி நம்மையும் தொற்றிக்கொள்ள வைத்த நவசுதினின் தங்கை பாத்திரமும், பெரும் சத்தத்தால் திடும்மென கதவை திறந்து பார்க்கையில், தனது கணவன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்க அருகில் பெரும் இரும்பு ஆயுதத்துடன் நிறுக்கும் கொலையாளியை காண்கையில் ஏற்ப்படும் மரண பீதியை நமக்கும் கடத்திய வேலைக்காரி பாத்திரம். இந்த கொடூர, இலக்கு ஏதுமற்ற, வரைமுறைக்கு சற்றும் ஒவ்வாத இந்த சினிமாவின் திருப்பங்களும், சுவாரசியமும் பெண்களை கொண்டே ....

https://www.youtube.com/watch?v=xq1cEmhVa68

No comments:

Post a Comment

Search This Blog