Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Monday, February 25, 2019



பார்த்ததில் மிகவும் ரசித்தது: 145.


பள்ளி காலத்துல தமிழ் படங்களை தாண்டி ஆக்ஷன்ல நமக்கு பெரிய நிறைவை தந்ததுனா அது தெலுங்கு சினிமாக்கள்தான். முன்னணி நடிகர்களோட பெரும்பான்மையான படங்கள் இங்கு தமிழ் டப்பிங்கில் வெளியாகும். அது நம்ம பெரிய நடிகர்களோட படங்களுக்கு இணையாக வெற்றிகரமாகவும் ஓடும். 9௦களுக்கு பின்னான காலங்கள்ல கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தரும் படங்களே பெரும்பாலும் இங்கு வெளியிட்டாங்க. . அதேசமயம் இங்க நமக்கு அதுக்கு மாற்றா அமைஞ்சது (ஷாருக் உச்சத்துக்கு போய்கிட்டு இருந்த சமயம்) நேரடி ஹிந்தி சினிமாக்கள். இந்த இணையத்தோட பயன்பாட்டுல பலமொழி படங்கள் பாக்கறது சாத்தியமானதும் முதல்ல நெனச்சது, இப்ப தெலுங்கு படம்லாம் எப்படி இருக்கும்னுதான். நண்பர்கள் பரிந்துரைத்த படங்களில் “மனம்” தவிர்த்து வேற படங்கள் பெருசா எந்த ஈர்ப்பும் ஏற்படுத்தல. அதில்லாம காதல் காட்சிகள்லகூட கணவன் மனைவி சண்டைல பேசற மாறி ரொம்ப வேகமா பேசறாங்க. ஓடி ஓடி சப்டைட்டில வேற படிக்கமுடியல.


இப்படியான சூழல்ல போன வருஷம் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாம இந்த படம் வெளியாகுது. நடிகர் நாணிதான் இந்த படத்த ரிலீஸ் பண்றாரு. பொதுவாவே சினிமால வேற துறைல குறிப்பா நடிகர்கள் தயாரிக்கற அல்லது வெளியிடும் படத்து மேல எப்பவும் எனக்கு ஒரு ஆர்வம். காரணம் அந்த படத்துல ஏதோ ஒன்னு இருக்கவும் தான, அவங்க சொந்த செலவுல அதவெளியிட்றாங்க அப்படின்னு. இத்தனவருசஷம் காத்திருந்ததுக்கும் சேத்துவெச்சி ஒரே படத்துல அவங்க நம்மளமாறியே, ஏன்! அதவிடவே முன்னால இருக்காங்கனு சொல்ற மாறி ஒருபடம்தான் இது.


இதுல ஆறு தனிதனி கதை. அந்த கதைங்க கடைசியா ஒரு புள்ளில முடியறமாறின்னு சராசரியா நெனச்சிடாதிங்க. இந்திய சினிமால இதுவரை யாரும் திரையில கொண்டுவர ரொம்ப யோசிக்கற, ஆனா நாம அத ரொம்ப பெருசா கொண்டாடற வகைய சேர்ந்த கதைங்க. எப்படினா?
ஒரு கணவன் மனைவி அவங்க பொண்ணு ஒரு ரெஸ்டாரென்ட்ல வெயிட் பண்றாங்க. அந்த பொண்ணு தான் காதலிக்கற நபர அவங்க பெத்தவங்களுக்கு அறிமுகபடுத்த அங்க வந்திருக்காங்க. அந்த நபர் இன்னும் வரல. அப்பாவேற ஒவ்வொரு கேள்வியா கேக்க ஆரமிக்கராரு. இவங்க பொத்தாம் பொதுவா பதில் சொல்லிட்டே, அந்த நபருக்கு மெசேஜ் பண்றாங்க. அவங்களும் டிராபிக்ல இருக்கறதாவும், வரேனும் சொல்றாங்க. இதுல அப்பாவோட தயக்கமான கேள்விகளுக்கு பதில் சொல்லிட்டே, மௌன விரதம் இருக்கற அம்மா பேசாம கண்லயே எரிக்கற மாறி பாக்கறதலாம் சமாளிச்சுனு அந்த நபர் வரவரைக்குமான போர்ஷன் அவ்ளோ அழகா இருக்கும். இந்த பொண்ணு கொடுத்த பில்டப்ல கிட்டத்தட்ட அவங்க ரெண்டுபேருமே ஓகே சொல்லபோற நேரத்துலதான் மாப்பிள்ளை என்ட்ரி. சும்மா ஒரு டார்க் கலர் ஜீனும் ப்ளூ கலர் காட்டன் செக்ட் ஷர்ட்ல முதல் பட்டன் போடாம, கைல ஹெல்மெட்டோட செம்ம ஸ்டைலிஷா நம்ம ஹீரோ என்ட்ரி. யாருன்னு பாத்தா நம்ம “நித்யாமேனன்”. அந்த பொண்ணும் இவங்களதான் லவ் பண்றேன்னு சொல்லுது. இப்படி இதுல வர மிச்ச கதைகளும் நம்ம பெரும்பாலும் பாக்காத ஏதோ ஒரு சுவாரசியம் அந்த கதைகள்லயும் இருக்கறமாறியே பாத்து பண்ணதுதான் இந்த படத்தோட பெரிய வெற்றியே.



இப்படி ஒன்னுகொன்னு சம்பந்தம் இல்லாத கதைகளா அந்த ரெஸ்டாரெண்ட்ட சுத்தி நடக்குது. இதோட முடிவு இப்ப சமீபத்திய சினிமாக்கள்ல வரமாறி கடைசியா சம்பந்தமே இல்லாத ஒரு பாத்திரத்த அறிமுகப்படுத்தி இவங்கதான் இதுக்கு காரணம்னு சொல்றமாறி இல்லாம, படத்தோட துவக்கத்திலேயே இதோட முடிவு இதுதான்னு சொல்லிடுவாங்க. அதில்லாம ஒரு பாத்திரம் மட்டும் இந்த கதைல அதோட அடுத்தடுத்த மூவ்மெண்ட்ஸ் கிளைமாக்ஸ் நோக்கியே போகும். படத்தோட கதைகள் மாறியே டெக்னிகல் பக்கமும் ரொம்ப பெரிய உழைப்பை கொடுத்து இருக்காங்க. அதுலயும் எடிட்டிங்க்கும் காமெராவும் ஒரு பேய் வர போர்ஷன்ல அதகளமா இருக்கு. அந்த MAGICIAN வர கதைதான் இதுல என்னோட MOST FAVOURITE. நல்ல சினிமா விரும்பிகள் நிச்சயம் தவறவிட கூடாத படம்,

Trailer Link:
https://www.youtube.com/watch?v=YJeezU36l4M

Monday, February 18, 2019




பார்த்ததில் மிகவும் ரசித்தது: 144.

தன் கண்முன்னே அவனது தாய் கோரமாக கொல்லபடுகிறார்.    வேட்டையர்களில் ஒருவனால் இவனும் இவனது சகோதரனும் உயிர் பிழைகின்றனர். நிராதரவாக அந்த அடர்ந்த வனத்தில் அவர்கள் வளர்ந்துவரும் சூழலில், சில வருடங்களில் அவனது சகோதரனும் சில வேட்டையர்களால் கொல்லப்படுகிறான். தனித்து விடப்பட்டவன் வெறிகொண்ட வேங்கையாக மாறி அந்த வேட்டையர்களை எவ்வாறு பழிக்கு பழி வாங்கினான் என்பதே கதை. இதில் என்ன பெரிய சுவாரசியம், இதேபோல் பல கதைகள் பார்த்தாயிற்றே என தோன்றுவோருக்கு. இக்கதையின் நாயகனே வேட்டையர்களை காட்டிலும் அதிக தந்திரங்களை பயன்படுத்தி அவர்களிடமிருந்து தப்பித்து கொண்டிருக்கும் அசல் புலி என்பதே.சுவாரசியம்.


1935-ல் தென்கொரியாவின் ராணுவத்தில் MAJOR போன்ற உயர்பதவி வகிப்பவர்கள் தங்கள் பதவிகாலத்தில் எத்தனை புலிகளை வேட்டையாடி தங்கள் அலுவகத்தில் அவற்றை பாடம் செய்து வைத்துள்ளார்கள். என்பதை கொண்டே அவர்களின் மதிப்பு கணக்கில் எடுத்து கொள்ளபடுகிறது. எனவே தனக்கு முன்பிருந்தவர்களை காட்டிலும் நமது காலத்தில் அதிக புலிகளை வேட்டையாட படவேண்டும் என்பதையே அங்கு பதவிக்கு வரும் அனைத்து MAJOR GENERALகளின் விருப்பமாகவும் இருந்தது. எனவே அவர்கள் புலிகளை வேட்டையாட அக்காடுகளில் உள்ள ஆதிவாசிகளில் சிலரை பயன்படுத்தி வந்தனர்.


தற்போது புதிதாக வந்த MAJOR வேட்டையை மேலும் கடுமையாக்குகிறார். முன்பிருந்தவர்கள் வேட்டையாடிய எண்ணிக்கையை கணக்கில் கொள்ளாமல். அந்த காட்டில் உள்ள அனைத்து புலிகளையும் குட்டிகள் முதற்கொண்டு வேட்டையாட உத்தரவிடுகிறார். ஏற்கனவே புலிகளின் எண்ணிக்கை மிகசொற்ப்பமாக இருக்கும் சூழலில் இருக்கும் சிலபுலிகளும் வேட்டையாடபடுகிறது ஒரு புலியை தவிர. வேட்டையர்களின் எந்த முயற்சியும் பலன் அளிக்காத சூழலில். ராணுவ சிப்பாய்களுடன் இறுதி முயற்சியாக வேட்டைக்கு செல்கின்றனர். இதற்க்கு முன் தாங்கள் பயிற்சி பெற்ற பல தங்கள் குரு CHUN MAN DUK யை சந்திக்க செல்கின்றனர். அவருக்கும் அவரது 13 வயது மகனுக்கும் இடையேயான சிறு மனவேற்றுமையை பயன்படுத்தி அவருக்கு தெரியாமலே அவனையும் வேட்டைக்கு அழைத்து செல்கிறான் தற்போதைய வேட்டை குழுவின் தலைவன். அவர் இல்லாமல் பெரும் படையுடன் சென்றாலும் தங்களால் அப்புலியை வேட்டையாட முடியாது என்பதை உணர்திருந்தான். அதனாலே அவர் தன்மகனை தேடி அங்கு வருவார். அவரை வைத்து இந்த ஒற்றை புலியை வேட்டையாடிட திட்டமிடுகிறான்.


2.5 மணிநேர கதையில் மேலே குறிப்பிட்டது முதல் 3௦ நிமிட கதை மட்டுமே. இந்த முதல் 3௦ நிமிட கதை தெரிந்தே பார்த்தாலும் புலிகள் வேட்டையாடபடும் காட்சிகள் நமக்கு திகிலூட்டும்படியே காட்சிபடுத்தி இருப்பர். அதிலும் அந்த குரு மற்றும் தற்போது வேட்டையாடும் குழு அவர்களின் வேட்டைமுறையை கொண்டே இந்த இவர்களின் குணநலன்களை மதிப்பிடும்படி. படத்தின் துவக்கத்திலே இவர்கள் வேட்டையாடும் முறை தனித்தனியே காட்சிபடுத்தபட்டிருக்கும். மேலும் தன் காலம்முழுக்க பல புலிகளை வேட்டையாடிய குரு. தன் மகனை கண்டிப்பாக அந்த ஒற்றை புலியை வேட்டையாட அனுமதிக்காததன் காரணம். வேட்டைக்கு அவர்களுடன் சென்ற குரு மகனின் நிலை இந்த இரு இடங்களும் காட்சிகளாக விரியும் பகுதியே இந்த மொத்த கதைக்கான பற்றுதல். அவை நமக்கு பெரும் பதைபதைப்பையும் மனதை கூடுதல் இலகுவாக்கும் இடங்கள்.


கதைக்கு முக்கிய பாத்திரம் அந்த ஒற்றை புலி. கதையில் முதல் இருபுலியை வேட்டையாடிய பின்னே இந்த புலியை பற்றிய பேச்சு துவங்கும். அதிலும் அதன் இடது கண் கிடையாது என்ற தகவலுடன். அதிலிருந்து படம் முழுக்க இந்த ஒற்றை புலியை வேட்டையாடுதல் என்பதை நோக்கியே கதை செல்லும். ஆனால் முழுதாக இதன் உருவம் திரையில் காண்பிக்கப்படும் இடம் கிட்டத்தட்ட 75% படத்திற்கு பின்னே. அதுவரை அந்த புலி காட்டப்படும் காட்சிகள் அனைத்தும் நாமும் அந்த காட்டில் மாட்டிகொண்ட திகிலிலேயே இருக்கும். இது கிட்டத்தட்ட நம் விருப்ப நாயகர்களை திரையில் கண்டதும் ரசிகனுக்குக்கு ஏற்படும் பரவசநிலையை. ஒவ்வொரு முறை அப்புலியை திரையில் பார்க்கும் நமக்கும் ஏற்படும்படி அதன் இடபக்க முகம் சரியாக காட்டபடாமலே காட்சிபடுத்தபட்டிருக்கும்.


மேலும் குருவின் பாத்திரத்தில் வருபவர். இப்படத்தின் இயக்குனர். இதன் பின்னணி இசை. படத்தில் CG பயன்படுத்தப்பட்ட விதம் என இந்த படத்தை போலவே. அதன் உள்ளேயும் நிறைய சுவாரசியங்கள் புதைந்துள்ள படைப்பிது.

Trailer Link:
https://www.youtube.com/watch?v=uTYTKLVKXgc

Search This Blog