Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Monday, October 14, 2019





WEB SERIES -003

பத்து வருஷங்களுக்கு முன்னவரை ஆக்ஷன் படங்கள் முழுக்கவே குடும்ப கதைகளை பின்னணியாக கொண்டே இருக்கும். அந்த Template அப்படியே எடுத்து. அதுல நாயகன் பாத்திரம் Raw  ஏஜென்ட்டா இருக்கும்படியா திரைக்கதை  பண்ணிருக்காங்க. சும்மா சொல்லகூடாது அது இந்த கதைக்கு செம்மையா பொருந்தியிருக்கு. அவருக்கு உளவுத்துறையை சார்ந்த பணி அப்படிங்கறதால நெறைய விசாரணை, துப்பாக்கி சூடு, கார் சேசிங், அந்நிய நாட்டு சதின்னு முழு சீரீஸ்ம் செம்ம விறுவிறுப்பா போகுது. இவ்ளோ சுவாரசியம் கதை முழுக்க இருந்தாலும் நம்மள கதையோட கட்டிபோட்ற மேஜிக்க அந்த குடும்ப பின்னணிதான் பண்ணுது.        


நாயகன் உளவுத்துறைல வேலைபாத்தாலும் ஆபத்து+ ரகசிய பணிங்கறதால வீட்ல அரசாங்கத்தில் க்ளார்க் பணியில் இருப்பதாக தெரிவித்திருப்பார். அவரின் மனைவியும் தொடர்ந்து ஒரே பணியில் இருந்து சலித்து. தன்னோட கேரியரும் வளர்த்துகொள்ள தனது நண்பனின் அலுவலகத்தில் சேர்கிறார். மேலும் இவர்களின் வயதுக்கு வந்த பெண் மற்றும் அவளின் சகோதரனும் சேர்ந்து அவர்களின் வயதுக்கு அதிக ஈடுபாடுடைய எந்த சாகசங்களும் இல்லாமல் அமைதியாக தன்னை வீட்டில் காட்டிகொள்ளும் தந்தையை பெரும்பாலும் கலாய்ப்பதும். மேலும் தங்கள் மகளின் வயதுக்கு மீறிய செயல்களில் பெற்றோர்கள் கிலியாவதும் என முழுக்க கடைசி Episode வரை நம்மை கட்டிபோடும் மேஜிக் இந்த குடும்ப பின்னணியே. இதன் மெயின்கதை  நாயகனின் பணி சார்ந்தது. அது வெறும் அக்சன், சேசிங் மட்டுமில்லாமல் தீவிரவாதிகள், ஜிகாதீஸ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிரயா, பலுசிஸ்தான் என கதையும், லோகேஷன்ஸ்சும் நம்மை முதல் சீசன் முழுக்க பத்து எபிசோட்ஸ்ம் ஒரே மூச்சில் பார்த்து முடிக்கும்படி பல சூவாரசியங்களை கொண்டது. மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என  அனைத்து தரப்பினருக்கும் அறிமுகமான நட்சத்திரங்களை பயன்படுத்தி உள்ளனர்.


இவை அனைத்திலும் அதிக ஈர்ப்பு நாயகன் பாத்திரம் வடிவமைக்க பட்டவிதம். உதாரணமாக கதையின் துவக்கத்தில் தனது குழந்தைகளை பள்ளியில் விட்டு, நண்பருடன் தேனீர் என தாமதமாகவே அலுவலகம் வரும் இவருக்கு. அதன் பின்னான அவசர மீட்டிங்கில் Navy Guards யிடம் ஆயுதங்களுடன் பிடிபட்ட மூவரை கொச்சியிலிருந்து விமானத்தில் இங்கு அழைத்து வருகிறார்கள்.  அவர்களை அழைத்துவந்து விசாரிக்கும் பணி இவருக்கு ஒப்படைக்கபடுகிறது. விமான நிலையத்தில் மற்றொரு அதிகாரி தான் அழைத்துவந்து அவர்களை தங்களது அலுவலகத்தில் ஒப்படைப்பதாக முரண்டு பிடிக்க. நாயகனின் நண்பன் பாத்திரம் அதற்க்கு மறுப்பு தெரிவிக்கிறார். வழியில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் நாயகனே பொறுபேற்க வேண்டிய சூழலிலும் அவர் நிதானமாக அமர்ந்திருப்பார்.
ஆனால் அவரது மகள் படிக்கும் பள்ளியில் இருந்து அழைப்பு வர. அதற்க்கு பதறிஅடித்து கொண்டு இந்த தீவிரவாதிகள் என சந்தேகிக்கபடும் மூவரையும் அம்போயென விட்டு பள்ளிக்கு சென்று விடுவார். அங்கு தலைமை ஆசிரியரிடம் பேசிகொண்டிருக்கும் போது. அழைத்து செல்லும் வழியில் அந்த தீவிரவாதிகள் தப்பிவிட்டதாக இவர் நண்பர் மூலம் தகவல்வர.  இந்த நிலையையும் வெளியே தெரிவிக்க இயலாது. உடனே சென்றே ஆகவேண்டிய சூழலில் தன் மகளை பற்றி புகார் கடிதம் வாசித்து கொண்டிருக்கும் ஆசிரியரிடமிருந்து இவர் தப்பித்து வெளியேறும் காட்சியும். பின் தன் மகளை சஸ்பென்ஷனில் இருந்து காப்பாற்றும் காட்சிகளும் அதகளம்.


இதில் நாயகனாக மனோஜ் பாஜ்பாய் Aligarh போல முழு நீள பாத்திரமாகட்டும், Gangs of Wasseypur, Love Sonia போல கதையின் ஒரு சில இடங்களை நிரப்பும் வேடங்களாகட்டும் மிகசரியாக அந்த கூட்டத்திலும் தன் வேடத்திற்கு நியாயம் சேர்த்து செல்பவர். இதில் முழுக்க இவரை சுற்றி சுழலும் கதை. இந்த முழு சீசனிலும் எந்த காட்சியிலும் கதையோடு வெகு இயல்பாக பயணித்து அந்த கதை அந்த காட்சியில் யாரை தேடுகிறதோ அவரிடம் சேர்ப்பார். இதை அவர் அலுவலகத்தில் புதிதாக பணியில் சேர்ந்த பெண்னுக்கு இவருடனான காட்சிகள் வெகு குறைவு அதிலும். இவர் மனைவியோடு (பிரியாமணி) பேசும் வசனங்களிலும் நீங்கள் அடையாளம் காணமுடியும். அடுத்து எடிட்டிங் இவங்க குடும்ப பின்னணி. நாயகனின் அலுவல் அவரது நண்பன் மற்றும் புதிதாக பணியில் சேர்ந்த பெண், தப்பிய விசாரணை கைதிகள், அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கும் பாகிஸ்தான், காஷ்மீரிஸ் இவர்களது  சீனியர்ஸ் பலுசிஸ்தான் மற்றும் ஆப்கானை சேர்ந்த ஜீகாதீஸ் என்பதோடு மட்டுமில்லாமல் இந்த ஒவ்வொரு பகுதிகளுக்கு பின்னுள்ள கிளைகதைகளையும் மிக சரியாக எதன் பின் எது என்று கோர்த்த விதத்தில் பெரும் மலைப்பை எற்ப்படுத்துகிறார். 


அதன் பின்னே வசனங்கள் தற்போதைய அரசியல் சூழல் முதல். அந்த பாத்திரங்கள் ஏற்றிருக்கும் வேடத்திற்கு மிகபொருத்தமாக அமைந்திருக்கும். தீவிரவாதியை பற்றி துப்புதருவோருக்கு சன்மானம் என அறிவிக்கபட. அவனைபற்றி தகவல் தெரிவிக்கும் டீ கடைகாரர் இப்படி கேட்ப்பார். “ எல்லோருக்கும் 15 லட்சம் தரதா சொன்னிங்கன்னு பேங்க்ல அக்கௌன்ட்லாம் ஆரமிச்சேன். அதுமாறி இல்லாம சரியா கொடுத்துடுவிங்கள? நாயகன் காஷ்மீர் செல்லும் அதே நேரத்தில் ஒரு தீவிரவாதியும் அங்கு வருகிறார். இவர் அவருடைய அலுவல் வாகனத்திலும், அவன் அவர்கள் இயக்கத்தின் வாகனத்திலும் காஷ்மீரை பார்த்தபடியே தங்களது சீனியரிடம் பேசியபடியே செல்வர். இந்த வசனங்கள் மட்டுமே போதுமானது. இருவரும் கிட்டத்தட்ட ஒரே பகுதியைதான் பார்பாங்க. ஆனால் அவர்கள் இருவரும் வெளிப்படுத்தும் வார்த்தைகள் சொல்லும் அவர்களின் புரிதல்களை. பெரும்பாலும் நம் அனைவரும் இந்த இரு வசனங்களையுமே ஏற்றுக்கொள்ளும் படி அமைக்கபற்றதுதான் இதன் பெரும் சிறப்பம்சமே. சீரீஸ் ரசிகர்கள் நிச்சயம் தவறவிடகூடாத படைப்பிது. Scared Games, Mirzappur இரண்டு மட்டுமே இந்திய சீரீஸ்களில் பார்த்துள்ளேன். ஆனாலும் இந்த இரண்டிலும் மிக சிறந்ததாக என்னால் இதை பரிந்துரைக்க முடியும்.

Saturday, October 5, 2019




பார்த்ததில் மிகவும் ரசித்தது: 149.


“வெற்றிமாறன்”  தன்னோட படைப்புக்களுக்கு இவர் தேர்ந்தெடுக்கும் களம். அதற்கான ஆய்வுகள். அதை ஸ்க்ரீன்ல எவ்ளோதூரம் அவரோட பாத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மூலமா வெளிபடுத்தறார் அதுதான் அவரோட முழுமையான வெற்றி. அதும் இவரோட படைப்புகள் எல்லாமே ஏதோ ஒருவகையில் வன்முறையோடே இருக்கும்.  விசாரணைலகூட காவல்துறை செயல்படும் விதத்த அவர் அவ்வளவு நுணுக்கமா விவரிச்சதால தான் ஒரு தனிமனிதன் மேல உச்சபட்சமா அவங்க கட்டவிழ்த்த வன்முறையை கூட நாம எந்த கேள்வியும் கேக்காம ஏத்துக்கொள்ள ஒரே காரணம்.  இந்த வன்முறை, பழிவாங்கல் இல்லாத கதைகள் வியாபார ரீதியில் வெற்றிபெறாதுங்கற அடிப்படைல அவர் தேர்ந்தெடுக்கிறாரா? இல்ல ரத்தம் இல்லாம ரசிகர்கள் மனதை கனமாக்கும் படைப்புகள் அவரால கொடுக்கமுடியாதா? நமக்கு பிடிச்ச எந்த படைப்பாளிங்க கிட்டயும் கேக்க நமக்கு பல கேள்விகள் இருக்கும். வெற்றிகிட்ட எனக்கிருக்கும் ஒரே கேள்வி இது மட்டும்தான்.

அப்படிபட்டவர் இந்த முறை தொட்டது கிட்டத்தட்ட முழுக்கவே மனிதத்தோட பெரும் வன்முறையும் சரிவிகிதத்தில் வழிந்தோடும் வெக்கை நாவலை. ரத்த வீச்சம் இவரோட மற்ற படங்களை காட்டிலும் அதிகம் உணரும் இந்த கதையிலும் இந்த வன்முறைக்கு நியாயம் சேர்ப்பது இவரின் களமும், பாத்திரங்களின் பங்களிப்பும். சமீபமாக நல்ல இயக்குனர்கள் கூட தங்களோட கதை எதைபத்தி பேசினாலும் சம்மந்தம் இல்லாம ஜல்லிக்கட்டையும், விவசாயத்தையும் பத்தி ஒரேயொரு காட்சியோ வசனமோ இல்லாம படங்கள் பண்ணாத மாறியே. வலிந்து புகுத்திய வசனங்களும் காட்சிகளின் மூலமா ஒரு குறிப்பிட்ட பிரிவினரோட வாழ்கையை பதிவுபண்ணாங்க. அந்த படைப்புகள் எந்தளவு ரசிகர்கள் மத்தில தாக்கத்தை கொடுத்துச்சினு தெரியல. ஆனா முழுக்கவே விவசாய நிலங்களின் மேல அதிகார வர்கத்தின் சுரண்டலையும்,  தொழிலாளி வர்கத்தினர் ஜாதிரீதியாக படும் இன்னல்களை மட்டுமே கதையாக கொண்ட இந்த படத்தில். எந்த ஜாதியையும் உயர்த்தி பிடிக்கும் காட்சிகளோ , ஏன் ஒரு வசனமோ கூட இல்லாமல். பார்வையாளர்கள் மொத்த பிரிவினருக்குள்ளும் பெரும் பாரத்தை கடத்திய ஒரே காரணத்திற்கே தூக்கி வைத்து கொண்டாட வேண்டிய படைப்பிது.

தன்னோட கதை என்ன. அதற்கு எந்தளவு நியாயம் செய்யும்படியான காட்சிகள். வசனங்கள். பாத்திரங்கள்னு அதுக்குள்ள மட்டுமே இவர் பயணிச்சி இருக்காரா. எங்கயும் ஒரே ஒரு ஷாட்கூட தேவையில்லாம வசனமோ இவர் சேர்க்கவே இல்லையா? உதாரணத்துக்கு இந்த படத்தில் இருந்தே ஒரே ஒரு காட்சி எந்த விளக்கமும், விரிவான தோரணைகள் எதுமில்லாம பாக்கலாம். அதிகார வகுப்பினரின் வீடு வீடாக சென்று நாயகன் மன்னிப்பு கேட்கும் காட்சி. அதில் ஒரு வீட்டின் வாசலில் குனியும் போதே பதறி அந்த வீட்டுகாரர் இவர் கையைபற்றி இதெல்லாம் வேண்டாம்னு காலில் விழுவதை தடுப்பார். அவர் கருப்பு சட்டை அணிந்திருப்பார் அவ்ளோதான். இதான் வெற்றிமாறன்.

அடுத்ததா இவர் கதையில் சும்மா ஊறுகாய் அளவுதான் காதல் இருக்கும் அதும் பெருசா நம்மள ஈர்க்கும் படில்லாம் இருக்காது.  வன்முறை அளவு இவர் காதலை தொட்டதில்லை. அதும் ஏதோ வியாபாரத்திற்க்காக மட்டும்தானு ஒருபேச்சு. இவர் கதையில் விசாரணை தவிர்த்து காதலுக்கு பெருசா எந்த முக்கியத்துவமும் இல்லாத இந்த படத்தில் இருந்தே உதாரணம் சொல்ல முடியும். இந்த படத்தில் கூட பேச்சியம்மா, மாரியம்மானு ரெண்டு பெண்கள் இருக்காங்க. ஒருத்தி முழுக்க நெருப்புல வெந்து. அடுத்த சில வினாடில உயிர் பிரியற நேரத்துல நாயகனிடம். தன்னோட முழு ரணத்தையும் தாங்கிகிட்டு இப்படி கேப்பா.


“மாமா, நீ என்கூட எப்படிலாம் வாழனும்னு ஆசைபட்டியோ, அத அப்படியே சொல்லு மாமா. நா அதை கேட்டுகிட்டே சந்தோசமா செத்து போயட்றேனு.. ஒரு ரெண்டு மணிநேர காதல்படம் கொடுக்க கூடிய பெரிய வலியை இந்த ரெண்டு வரி வசனம் கொடுத்திடும் – தொடரும்...

Monday, August 12, 2019





பார்த்ததில் மிகவும் ரசித்தது: 148.


திரைப்படங்கள் பார்க்கும் போது பொதுவா எந்த இடையூறும் இல்லாமல் தனியறையில் இரவு நேரங்களில் பார்ப்பது வழக்கம். சில Crime, Horror வகையறா கதைகளில் சட்டென எனக்கு பின்புறமும் யாரோ நிற்ப்பது போலவும், அறையின் வாசலில் நின்று யாரோ கண்காணிப்பது போலவும்  துணுக்குற்று சட்டென பதறி அறையின்  விளக்குளை ஒளிர  செய்தும்பின் அனைத்து அறைகளின் விளக்குகளையும் சமையலரை வரை ஏற்றி தண்ணீர் குடித்து. பின் சிறிது நேரம் கழித்து அந்த படத்தை தொடர்வதும் நிகழும். அதிக பயத்தில் அந்த இரவில் சத்தமாக குரல்எழுப்புவதும் அவ்வப்போது நிகழும். ஆனால் ஒருபோதும் அந்த படத்தை தொடர்ந்து பார்ப்பது நிகழாமல் இருந்ததில்லை. போர்வையை ஒரு கண் மட்டும் தெரியும் அளவில் முழுக்க போர்த்தி கொண்டேனும் மீதி படத்தை பார்த்ததும் உண்டு. ஆனால்  முதல் முறை ஒரு படத்தை அந்த குறிப்பிட்ட காட்சிக்கு பின் பார்க்கும் சக்தியின்றி நிறுத்தியது இந்த படத்திற்கு மட்டுமே. இரண்டு நாட்களுக்கு பின் மீதம் கதையை பகலில் பார்த்த அதிசயம் நிகழ்ந்தது இந்த படத்திற்கு மட்டுமே.


இதே கதையம்சம் கொண்ட பல படங்கள் இதற்க்கு முன் பார்த்திருபோம். படத்தின் முழுகதையையும் ஒருவாறு யூகமும் செய்திருப்போம். இதும் அச்சு அசல் அதே கதைதான். வெறும் திரைக்கதை இல்லாமல் ஒவ்வொரு பாத்திரத்தின் தன்மையை வெறும் வாய்ஸ் ஓவர்ல பாடம் எடுப்பதுபோல சொல்லாமல் கதையோட போக்கில் சொன்ன விதத்துலதான் பெரிய ஆச்சர்யத்த கொடுத்திருக்காங்க. நாயகி டாப்சீக்கு ஒரு முன்கதை  உண்டு. அதனாலதான் அவங்க இப்படி நடந்துக்கறாங்கனு மட்டும் நமக்கு தெரியும். ஆனா அந்த FLASHBACK என்னான்னு அதுக்கு தனியா ஒரு 30 நிமிசத்தை செலவுபண்ணி படத்தோட நீளத்தை அதிகபடுத்தாம. ரொம்ப சரியா ஒரு மணி நாப்பது நிமிசத்துல முழுபடமும் முடியுது.
ஆனாலும் நடக்கும் நிகழ்வுகளில் இருந்தே அவரின் முன்கதையை நமக்கு உணர வெச்ச விதத்திலேயே  Ashwin Saravanan தனித்துவமா தெரியறார். இதுக்கு முன்னால அவர் படம்மாயா வெச்சே பாத்தாகூட அது நமக்கு தெரியும். இருட்டுக்கு பயப்படும் ஒரு பாத்திரம். அதுக்கான சரியான காரணத்தோட, இயல்பு நிலைக்கு திரும்ப குடும்பத்தை விட்டு ஒரு வேலைக்கார பெண்மணியோட தனியா வாசிக்கறாங்க. இயல்புநிலைக்கு திரும்பறதுக்கு முன்னமே தற்கொலைக்கு முயற்சி பண்ணி ரெண்டு காலிலும் எலும்பு முறிவோட சக்கர நாற்காலில இருக்காங்க. என்ன ஏதுன்னு எந்த காரணமும் இல்லாம தனியாக வசிக்கும் பெண்களை கொடூரமாக கொலை செய்யும் பாத்திரம். அவனோட பார்வை இவங்க மேலவிழுது. இவங்க சந்திக்கும் புள்ளி சரியா பாதி படத்துல. அதும் அவங்க வீட்டுக்கு உள்ளே. மீதி கிட்டத்தட்ட நாற்பது நிமிச கதை அந்த வீட்டுக்கு உள்ளேயே.


இதே போல ஏற்கனவே குறிப்பிட்ட மாறி பலபடங்கள் இருக்கு. ஆனா அதெல்லாமும் விட சிறந்ததா இத நினைக்க காரணம். அந்த படங்கள் முழுக்கவே கொலைகாரன் நெறைய சித்ரவதை பண்ணி கொலை செய்பவனா இருக்கும். இல்லஇந்த கொலைகளை ரொம்ப கலைநயமா ரசிச்சு பண்றவனா இருக்கும். அதும் இல்லனா இவன் ஏன் இதுபோல மாறினானு நம்ம அவன்மேல பரிதாபடும்படியான முன்கதை சுருக்கம் இருக்கும். இது எதும் இல்லாம அவன பெரிய புத்திசாலியா மட்டும் காட்டியதில் தனிச்சு தெரியுது இந்த படம்அதும் அவனோட கொலையில் ஒன்னே ஒன்னு மட்டும்தான் அதும் Titlecard லயே வந்திடும். பெருசா ரொம்ப நேரம்லாம் எடுத்துக்காம சட்டுன்னு முடிச்சிடுவான். ஆனா, ரொம்ப அழுத்தமா அத மனசுல பதியவெச்சிடுவார் இயக்குனர். ஏன்னா அடுத்த கொலை கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்துக்கு பின்னால நாயகிய கொல்ல வரும்போதுதான் அந்த பாத்திரமும் கதைக்குள்ள திரும்பவரும்.



ஆனாலும் ஆரம்ப சம்பவத்துல அவர்கொடுத்த அழுத்தம் நமக்கு அப்படியே இருக்கும். “மாயாமாறியே ஒரு அமானுஷ்ய கிளைகதையும் இந்த கதையோடவே பயணமாகும். ஆனா அந்த படம் அளவுக்கு இதுல முக்கியத்துவம் இருக்காது. அத ரொம்ப எளிமையா அவங்களோட Tatoo மூலமே நமக்கு புரியவெச்சிட்டாரு. இந்த  போல கதைகளுக்கு Sound Mixing, Editing & Camera எவ்ளோ முக்கியம் அப்படினு இந்த படத்துல ஒரு சாதாரண  பார்வையாளனும் அத Realize பண்ணிக்கற அளவு Technical பக்கம் அட்டகாசமா வொர்க் பண்ணிருக்காங்க. சின்ன சத்தங்கள் ஒரு சுமாரான திரையரங்கத்தில் பாக்கும் போதுகூட உணரும்படியா  இருந்தது. ரொம்ப பயங்கரமா ஆரமிக்கும் கதை எப்படியும் போக போக அந்த சுவாரசியம் எங்காவது தடையாகும். ஆனா கடைசிவரை அந்த திகிலோட மட்டுமில்லாம நெறைய சூவாரசியங்களோடவும் கொண்டு வந்து முடிச்சதில் ரொம்பவே கவனிக்கவெச்சிட்டார் Aswin Saravanan. சில இயக்குனர்களோட அடுத்த படம் எப்ப வரும்னு காத்திருப்போம்லஇனி அந்த பட்டியல்ல இவரோட பேரும் இருக்கும்.  

Search This Blog