பார்த்ததில் மிகவும் ரசித்தது: 137.
BIOGRAPHY அப்படின்னு தமிழ் சினிமால யோசிச்சா சில விநாடிகள்ல
ஞாபகம் வர படம் நாயகன். அதுக்கு பின்னால ரொம்ப யோசிச்சா (கொஞ்சம் தயக்கமாவே) தவமா
தவமிருந்துதான். ரெண்டுக்கும் நடுவுல கிட்டத்தட்ட இருவது வருஷம் தமிழ் சினிமாவும் இருந்திருக்கு.
இதே BIOGRAPHY லையே ஒரு களத்தை பத்தின கதையை யோசிச்சா எதுமே இருந்ததா நினைவில்
வரவேஇல்ல. ஏன்? “அதான் சுப்ரமணியபுரம் வந்ததேனு நண்பர்கள் சிலரும் வாதத்திற்கு
வந்தனர்.’ அந்த களம் அந்த கதைக்கானது மட்டுமே. இங்குயாரும் தனியாக எந்த களத்தின்
வரலாறையும் சினிமாவில் கொண்டு வந்ததாக நினைவில் இல்லை. இது வடசென்னை எனும்
மீனவகிராமத்தின் வரலாறை, அதே உப்பு காற்றும், கருவாட்டு வாசனையும். அந்த முரட்டு மனிதர்களின்
வாழ்வின் போராட்ட பக்கங்களின் சரித்திரம்.
எனது பதிவுகளில் பெரும்பாலும் சொல்வது ஒரு கதைக்கு அவர்கள்
தீர்மானிக்கும் களமே அந்த கதையின் உணமைதன்மையை தீர்மானிப்பதில் முக்கியபங்கு
வகிக்கும் என்பதே. காரணம் அவர்கள் தீர்மானிக்கும் களம் குறித்த ஆய்வை நிச்சயம்
அந்த இயக்குனர் மேற்கொண்டே ஆகவேண்டும். அதை தனது கதையில் பொருத்துகையில் அவர்களின்
பேச்சு வழக்கு, உடை, பின் அதே அந்த கதைக்கான உண்மைத்தன்மையை கொண்டுவந்து விடும்.
நமது அரசாங்கம் ஒவ்வொரு 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த மீனவ கிராமங்களை நகர
விரிவாக்கம். தூய்மை இந்தியா இப்படி ஏதேனும் திட்டத்தின் கீழ் அவர்களை காலி செய்ய
முயல்வதும். அவை இன்று வரை பெரும்பாலும் தோல்வியிலே இழுத்துகொண்டு செல்வதும்
வரலாறு. இதை 1987 லில் ஒரு கொலையில் துவக்கி NON LINEAR முறையில் 2000 வரை
திரைக்கதை வடித்துள்ளார் வெற்றிமாறன்.
ராஜன் (அமீர்), குணா (ச.கனி), செந்தில் (கிஷோர்),
தம்பி (டேனியல்), வேலு (பவன் – பொல்லாதவன் அவுட்) சந்திரா (ஆண்ட்ரியா), பத்மா
(ஐஸ்வர்யா ராஜேஷ்), முக்கிய கதாபாத்திரங்களில். மூன்று பாகங்களாக வரவிருக்கும்
வரலாறு இந்த படம். தன் கதைக்கான பாத்திரங்களை வடிவமைப்பதில் இவரை அடித்துக்கொள்ள
சமகாலத்தில் எந்த இயக்குனரும் கிடையாது. பொல்லாதவன் மற்றும் ஆடுகளத்தில் தான் பயன்படுத்திய
பாத்திரங்கள்தான் பெரும்பாலும் எனினும் இதில் முற்றிலும் வேறு களம். வேறு பேச்சு மொழி, நடை, உடை என முற்றிலும்
அனைத்தும் வேறு. அதை அப்பாத்திரங்கள் வெளிப்படுத்திய விதம் ஒவ்வொருவருக்கும்
வேறுபடலாம். ஆனால் அதை நீங்கள் அனைவரும் இந்த குப்பத்து மக்கள்தான் என்பதை
அவர்களுக்கு உணர்த்தி ஒரே வரிசையில் கொண்டுவந்த விதம்.
தனி ஒருவராக திரையில் யாருக்கும் எந்த காட்சியும்
இல்லை. அனைத்து காட்சிகளிலும் குறைந்தது நான்கு முதல் பத்து நபர்கள் வரை. அந்த
கூட்டத்திலும் குட்டி குட்டி பாத்திரங்களில் வரும் அன்புவின் மச்சினன், “என் உயிரை
காப்பாத்தி கொடுத்து அண்ணனை யாரு போட்டாங்கனு சொல்ல முடியாம பண்ணிடியேடானு அழும்
அன்புவின் ஜெயில் சிநேகிதன். செந்தில் உடன் ஜெயிலில் இருக்கும் திடகாத்திர நபர்.
குணாவோட இடது கழுத்து, தோள்பட்டை வழியே வலது மார்புவரை இருக்கும் வெட்டு தழும்புனு
நெறைய நெறைய பேர் அந்த கூட்டத்திலும் நம் கவனத்தை ஒவ்வொரு காட்சியிலும் தொடர்ந்து
இழுத்து கொண்டே வருகின்றனர்.
நண்பர்கள் பலரின் பதிவுகளில் படித்ததுபோல் இந்த பாத்திரங்களை
நினைவுபடுத்தி கொள்வதில் எந்த சிரமமோ, குழப்பங்களோ இல்லை. ஒரே நிமிடம் நம் மனதுள்
நிதானித்து நிறுத்தினால் காலத்திற்கும் நம்முடன் பயணிக்க போகும் நபர்கள் இவர்கள்.
இப்பாத்திரங்களை உள்வாங்கி கொண்டால் மட்டுமே இக்கதையின் வீரியத்தை முழுதும்
உங்களால் அனுபவிக்க எதுவாக இருப்பதால் முதல் முப்பது நிமிட படத்தை மட்டுமேனும்
மொபைல் நோண்டல், பக்கத்து சீட்டு பல்லிளிப்பு ஏதும் இல்லாமல் சற்று கவனத்துடன்
நோக்கினால். அதே உங்களுக்கு பழகிடும். முதல் மூன்று படங்களில் இருந்து இது
வெற்றிமாறனுக்கு மட்டும் அசுர பாச்சல் இல்லை. வேல்முருகன் (கேமரா), SREESAN (SOUND
DEPT), DHILIP SUBBURAAYAN க்கு மட்டுமில்லாது. குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மிக
முக்கிய இருநபர்கள் சந்தோஷ் நாராயணன், எடிட்டர் வெங்கடேஷ் அவர்கள்.
UNDERPLAY ல இன்றைய நடிகர்கள்ல அடிச்சிக்கவே முடியாத
ஒரே நபர் அன்பு. அதை திரும்ப திரும்ப அவர் நிருபிச்சி மேல மேல போயிட்டே இருக்கார்.
அடுத்த பாகம் முழுக்க அன்புவின் எழுச்சியே பிரதானம் என்பதால் இப்பொழுதே அடுத்த
பாகத்திற்கான எதிர்பார்ப்பும் படம் முடியும் நிமிடம் முதல் தானாக
எழுந்துவிடுகிறது. ஒரே நபர மட்டும் இந்த மூணு பாகத்திலும் சேர்த்து குறிப்பிட வேண்டும்
என்று சொன்னால் என்னுடைய ஒரே தேர்வு சந்திரா மட்டுமே. அமீரின் COOLERS எடுத்து
கொண்டு அந்த அறையில் இருந்து வெளியில் வரும் ஒரே ஷாட் அவங்களுக்கு போதுமானது. வரும்
மாதங்களில் அனைத்து பத்திரிகை, வார இதழ்களிலும் நிரப்பும் செய்தியாக மட்டும்
இல்லாமல் இப்படமும், இதன் technical டீம் அனைவரும் செல்லவிருக்கும் உயரம்
மிகப்பெரியது.
ஹோட்டலில் அந்த கொலைக்கு முன் அமீர் பேசும் அரசியல்
வசனங்கள் இதுவரை தமிழ் சினிமா காணாதது. அது அடுத்தடுத்த பாகங்களில் மிக வீரியமாக
வெளிப்படும் என்பதில் துளியும் ஐய்யமில்லை. காரணம் இக்கதை பேசும் களவரலாறு
அவ்வாறானது .