Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Wednesday, July 25, 2018




பார்த்ததில் மிகவும் ரசித்தது: 130.

ஒரு படத்தை பார்க்க பலகாரணம் உண்டு. நமக்கு பிடித்த நாயகன், நாயகி, இயக்குனர் இப்படி. அப்படியில்லாம ஒருசில படங்களை பார்க்க குறிப்பிட்டு சொல்ல எந்த காரணமும் இருக்காது. இந்த படத்தை போல. முதலில் இதன் தலைப்பு. நைஜீரியாவுக்கும் கேரளாவுக்கும் எப்படி சம்பந்தபடுத்துவார்கள். இதில் நைஜீரியாவிலிருந்து திரும்பிய மலையாளியபத்தி இருக்கும்னா அப்படியில்லாம அந்த ஊர் பையனே போஸ்டர்ஸ்ல இருக்கான். அவன் இங்க வர என்ன காரணமா இருக்கும். ட்ரைலர்ல நைஜீரியாலாம் வருது இவ்ளோ செலவு பண்ற அளவுக்கு பெரிய நட்சத்திரங்களும் யாரும் இல்ல. IMDB ல 8.5 STARS வேற.


கேரளால பெருசா எந்த வருமானமும் இல்லாம சொந்தமா ஒரு FOOTBALL டீம நடத்திட்டு. சுத்து வட்டாரத்துல எங்க போட்டி நடந்தாலும் அதுல கலந்துகிட்டு, எப்பவும் கையுக்கும், வாய்க்கும் சரியா போயிட்டு இருக்கற முக்கிய பாத்திரம். சரியான எந்த வேலையும் இல்லாத பையனுக்கு எப்படி பொண்ணு அமையும்னு வருத்ததுல இருக்கும் அம்மா. இவங்க ரெண்டு பேரோடவும் சுத்தமா ஒட்டாம எப்பவும் ஒதுங்கியே இருக்கும் அப்பா பாத்திரம். இவங்க இல்லாம ரொம்ப முக்கிய பாத்திரத்துல ஒரு நைஜீரியாவ சேந்த பையன். அதும்போக அக்கம்பக்கத்து ஜனங்க. இவங்க மொத்தமும் சேந்து கொடுத்தது நிச்சயம் ஒரு நல்ல சினிமா.


எப்பவும் துணை பாத்திரத்துலயே வந்தாலும் பெரும்பாலும் அதிக பேருக்கு அறிமுகமான சௌபின் ஷாகிர்தான் அந்த FOOTBALL டீம நடத்தும் முக்கிய பாத்திரத்துல வராரு. ரொம்ப சாதரணமா இந்த இயல்பான கதைக்குள்ள இருக்கும் அத்தனை நெளிவு சுளிவுக்குள்ளும் எந்த வித்யாசமும் நமக்கு துளிகூட உறுத்தல் தெரியாம பொருந்தி போறாரு. அவரு மட்டுமில்லாம இதுல துணை பாத்திரங்களா வரும் அத்தனை பெரும் அப்படியே. அதுதான் இவங்க படம் பெரும்பாலும் ரொம்ப இயல்பா தெரிய மிக முக்கிய காரணம்.


நைஜீரியால நல்ல FOOTBALL ப்ளேயரா இருந்து இந்தியா வந்து. இங்க சௌபின் குழுவில் சேர்ந்து விளையாடி வராரு. அவரு நைஜீரியால இருந்து இங்க வந்ததுக்கான காரணமும். சௌபின் ஷாகிர் அவரோட அப்பாவ எங்கயும் கண்டுக்காம போறதுக்கான காரணமும்...                பெருசா எதும் இல்ல கில்லில விஜயோட தங்கச்சி கடைசிவரை அவர்கூட சண்டையே போட்டுட்டு இருக்கும். கடைசியா அவருக்காக அழுது நம்மளயும் கலங்கவைக்கும்ல அப்படியான அதே தாத்தா காலத்து பழைய ட்ரிக்தான். ஆனாலும் ஓடி ஓடி உலக சினிமா பாத்தாலும் நம்மாள இன்னும் மாயாண்டி குடும்பத்தார ஒதுக்க முடியல்ல. அப்படியான வகை கதையை இன்னும் ரொம்ப யதார்த்தமா, எளிமை அழகியலோட கொடுத்து இருக்காங்க.


அந்த நைஜீரியா பையன நம்பித்தான் அந்த டீமோட பொழப்பு ஓடிட்டு இருக்கு. ஒரு நாளு அவன் வழுக்கி விழுந்து கால்ல FRACTURE ஆகிடுது. அவன நம்ம டீம் ஓனர் ஹாஸ்பிடல்ல இருந்து வீட்டுக்கே கூட்டி வந்திடறார். ஏற்கனவே நிலையான வருமானம் இல்லாத நிலையில, இவனுக்கும் அடிபட. கூடவே அவனோட மருத்துவ செலவுக்கும் பணம் தேவைப்படும் சூழல்லதான் கதையோட மேலும் அதிகமா நாம் ஒன்றும் நிகழ்வுகள் வருது. சரியான வருமானம் இல்லாம இருக்கும் மகனை கண்டிக்காம, அவனோட வழியிலே விட்டு சற்று தொலைவில் இருந்து வருந்தும் அவனது அம்மாவின் பக்கங்களும். ஒரு பொருட்டாகவும் தனது தந்தையை அவன் நினைக்காததற்க்கான காரணங்களும். இதற்க்கெல்லாம் மேலாக நடக்க இயலாமல் தன் வீட்டிலுள்ள பையனுக்கும் அந்த குடும்பத்திற்குமான நெருக்கத்தை ரொம்ப யதார்த்தமா கொடுத்த விதத்துல படம் நின்னுடுச்சி.



படத்துல தனியா இந்த ஷாட் கேமரா வொர்க் சூப்பர். அந்த BGM அட்டகாசம். இடைவெளியின் போதான எடிட்டிங் ட்விஸ்ட் செம்மனு எதையும் பிரிச்சு சொல்ல முடியாம அனைத்து டெக்னிக்கள் சைடும் கதையோட கதைக்குள்ளவே இருக்கு. படத்தோட எந்த ஒரு ஷாட்லகூட வெளிய தெரியாம இருந்ததுதான் இந்த கதைக்கான மிகப்பெரிய பிளஸ். இவ்ளோ யதார்த்த கதைலயும் ரொம்ப தனியா தெரிஞ்சது படத்தோட வசனம். பணத்தேவைக்கு ரொம்ப குழப்பத்துல இருக்கும் நாயகனிடம் அவரோட நண்பர் சொல்லுவார்.

“இப்பவும் நம்ம டீமே விலைக்கு கொடுத்தா ஒரு ரெண்டரை டூ மூன்றரை லட்சம் வரை கிடைக்கும்னு.

அதுக்கு அந்த குழப்பத்துலயும் ரொம்ப தெளிவா நாயகன் பாத்திரம் சொல்ற வசனம்.

“ரொம்ப இக்கட்டான சூழல்ல நம்ம டீம் கண்டிப்பா தோத்துடும்ற நிலையிலயும் நம்ம என்ன நினைக்கறோம். “எப்படியாது ஒரே ஒரு கோல போட்டு மேட்ச டிரா பண்ணிடமாட்டாங்களானு. அந்த நிமிஷத்துக்குதான காத்துட்டு இருக்கோம். அப்படி இந்த பிரச்சனையில் இருந்தும் வெளிய வர முடியலைனாலும் டிரா பண்ணவாவது எதாவது வழி இருக்கும்னு சொல்லுவாரு.

https://www.youtube.com/watch?v=EHyaTJGmN4k

Wednesday, July 18, 2018





பார்த்ததில் மிகவும் ரசித்தது: 129.

நாயகன், கதை, திரைக்கதையை தாண்டி கொஞ்சம் கதைகளங்கள்தான் அதிக பார்வையாளர்களை ஈர்க்கும். அப்படியான கதைகளங்களில் ஒன்றுதான் சிறைச்சாலையை மையமாக கொண்ட படங்கள். அதும் அங்கமாலி டைரீஸ் போன்ற படைப்பாளியின் அசோசியேட் டைரக்டரின் படைப்பு. ANTONY (அங்கமாலி நாயகன்) மற்றும் விநாயகன் தவிர்த்து பெரும்பாலும் புதுமுகங்களை பயன்படுத்தி வெளிவரும் கதை. அதும் சிறைச்சாலையை மையமாக கொண்டதுனா? அந்த எதிர்பார்ப்பை இவங்க பூர்த்தி செஞ்சாங்களா..

மலையாள படங்களில் பெரும்பாலும் ஸ்பெஷல் எபெக்ட் சமாச்சாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்காது. காரணம் கதையும் களமும் (அவங்க) எளிய மக்களை சார்ந்ததாகவே இருக்கும். இக்கதையும் அதைசார்ந்த களமும் அப்படியே. ஆனா உருவாக்கலில் கதையின் உயிர் எங்கும் சிதையாமல் டெக்னிக்கல் பக்கம் செம்மையா மிரட்டிருக்காங்க. டைட்டில் கார்டில் டெக்னிக்கல் டீம் பெயர்களை பார்த்தாலே தெரியும். குறிப்பா துவக்கத்தில் சிறையிலிருந்து தப்பிக்க ஒரு குழு எடுக்கும் முயற்சியை சொல்லலாம்.

சிறைன்னு சொன்னதும் இந்தியாவின் மிகப்பெரும் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரும் சிறைச்சாலையும், ஆயிரக்கணக்கான கைதிகளும் உள்ள மிகப்பெரும் பட்ஜெட் படங்களை நினைக்க வேணாம்.   ஒரு நாப்பது – ஐம்பது கைதிகள் மட்டுமே உள்ள மத்திய நகரின் ஒரு கிளை சிறைச்சாலையை களமாக கொண்ட கதையில் பிரமாண்ட கதைக்கு சமமான டெக்னிக்கல் சைடு வேலையை இதில் பயன்படுத்தியிருகாங்க. இது போல சிறைச்சாலையை மையமாக கொண்ட கதைகளில் முக்கிய பாத்திரம் அங்கிருந்து தப்பி செல்ல காரணம் ஒரு போர்ஷனா கதையில் வருவது வழக்கம். இதிலும் அவன் தப்பிசெல்ல பெரும்பான்மையான கதைகளில் வரும் காரணமான காதல்தான். அந்த குட்டி போர்ஷன அவ்ளோ இயல்பா கொண்டுபோனதுதான் இந்த கதையில அவங்க தப்பிக்க எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் கண்டிப்பா அது நடந்தே ஆகணும்னு நம்மையும் நினக்க வெச்சிருக்கு.

இவனமாறியே இங்கிருந்து வெளிய போய்டனும்னு நெனப்புல இருக்கும் யாரையும் முதல்ல அவனால அங்க பிடிக்கமுடியாம போகவும், அங்கிருக்கும் தோதானவங்கள அவனே முளை சலவை பண்ணி அவங்கள இவன் இருக்கும் ரூமுக்கு மாத்த எடுக்கும் முயற்சியில் நம்ம நிமிர வெச்சிடறாங்க. அந்த எதிர்பார்ப்ப கடைசி வரை எங்குமே தோய்வில்லாம  கொண்டுபோய் முடிச்சிருக்காங்க. அந்த கதை முழுக்க இருக்கும் மழையின் ஈரத்தை, அந்த குளிரை அப்படியே நமக்கும் கடத்திருக்காங்க.  ஒவ்வொரு முறை காலை உணவுக்கு கைதி அறைகளில் இருந்து இவர்கள் வெளியேறும் காட்சியின் அடுத்தகட்டமாக இவர்கள் மூவ் என்னவாக இருக்குமென அனைவரையும் எதிர்பார்க்க வைத்துள்ளார்கள்.

இவங்க படங்களை போலவே முக்கிய பாத்திரமான வினாயக்கும் ரொம்ப சாதாரணமாதான்  அறிமுகமாறாரு. ஆனா கதையின் விறுவிறுப்பிற்கு இவரது பாத்திரம் மிகமுக்கிய பங்கு வகிக்குது. இடைவேளையில் ஏற்படும் பெரிய திருப்பமும் இவர மையப்படுத்திதான் நகருது. பெரிய கிளாஸ் படமாகூட இந்த படத்த உருவாக்கியிருக்கலாம். ஆனா இந்த ஒரு ஆள் இந்த முழுபடத்தையும் பெரிய மாஸ் லுக்குக்கு கொண்டுபோறார். அதும் கிளைமாக்ஸ்க்கு முந்தின காட்சில இவரோட என்ட்ரி செம்ம்ம்ம. இவரில்லாம வேற ரொம்ப முக்கிய பாத்திரமா பெரும்பான்மையான கைதிகளின் கைகளிலும் வாயிலும் புகையும் பீடிகளே.    


முக்கிய பாத்திரமா வரும் எல்லாரும் பீடிபிடிக்கறாங்க. அதிலும் அவங்க அடுத்து என்ன பண்ணபோறாங்க, அவங்க மனநிலைய அவங்க புகைக்கும் லாவகத்த வெச்சே யூகிக்க வெச்சிருக்காங்க. முழுக்க ஆண்கள் மட்டுமே நிரம்பிய கதைகளில், வரும் ரெண்டே பெண் பாத்திரங்கள். அவர்களுக்காகவே இக்கதையில் நிகழும் அனைத்து திருப்புமுனைகளும். அவங்க வரும் குட்டி காட்சிகளில் கூட அவங்கள எதும் பண்ணசொல்லாம, அவங்க கண்களுக்கு மட்டும் பெரும்பான்மையான காட்சிகள் அமைத்ததே. கடைசிவரை இந்த மழை, அழுக்கான சிறைச்சாலை, இத்தனை ஆண்கள் மற்றும் இவ்ளோ பீடி புகைக்கு நடுவிலும் நாம அவங்கள மறக்காம இருக்க ரொம்ப முக்கிய காரணம். எடிட்டிங், காமெரா, BGM மூணும் கதையில எங்கயும் இவங்க லைன தாண்டாமயே வரும். அதிலும் சிறைச்சாலையோட துவக்க காட்சில வரும் ஆக்ஷன் ப்ளாக்ல இந்த மூணு டீமோட வொர்த் தெரியும்.  

TRAILER LINK:
https://www.youtube.com/watch?v=_7tWbhAi4L8   












Friday, July 13, 2018




வாசித்ததில் வசீகரித்தவை - ௦௦1

நண்பர் சிவராஜோட ஏழு சிறுகதைகள் அடங்கிய புத்தகம். சினிமா பதிவுகளின் மூலம் அறிமுகமானவர். இப்புத்தகம் அச்சில் இருக்கும் சமயங்களிலேயே இவரின் சிறுகதைகள் எனக்கு அறிமுகமானது. கையில் கிடைக்கும் புத்தகத்தில் உள்ள சிறுகதைகளை மட்டுமே வாசித்து, விகடனின் தீவிர வாசகனான பின் அதில்வரும் ஒரேகதையை மட்டும் படித்து பழகியவனுக்கு. வெறும் சிறுகதைகள் மட்டுமே அடங்கிய முழுபுத்தகம் புது அனுபவம். ஒவ்வொரு கதையும் வேறவேற களங்கள்ல இவரோட எழுத்தில் படிக்க புது அனுபவம். ஒரே மூச்சில் படிக்கவிடாமல் ஒவ்வொரு கதையிலிருந்தும் நாம் வெளியிலவந்து அடுத்த கதையை படிக்கவேண்டி இருப்பதே இவரோட எழுத்துக்கு ஒரு சான்று.
  1. கழுத்து மணி. – கலக்கம்.
பள்ளிசெல்லும் செல்லும் சிறுவனுக்கும், அவன் வீட்டுக்கு புது வரவாக வரும் ஆட்டுகுட்டிகுமான பந்தமே இக்கதை. அந்த ஆட்டுடன் பெரிய ஈர்ப்பு ஏதுமின்றி உள்ள சிறுவன். ஒருகட்டத்தில் அந்த ஆடு தொலைந்து போக, அதை தேடும் படலத்தில் துவங்கும் கதை. அத்தேடலுடன் அவன் வீட்டிற்கும் அந்த ஆட்டிற்குமான நினைவுகளில் அதன்மேல் ஏற்படும் ஈர்ப்பில் தீவிரமாக தேடி அந்த ஆட்டை கண்டடைகிறான். பின் அதனோடு நெருக்கமாக, இறுதியில் அந்த ஆட்டிற்கு நேர்ந்ததென்ன என்ற வழக்கமான கதைதான். ஆனால் இதில் அந்த ஆட்டின் கழுத்திலுள்ள சிறுமணி ஒன்றை ஒரு பாத்திரமாக கதைநெடுக உலவவிட்டுள்ளதே இதன் சிறப்பு. அந்த ஆட்டுடன் அவனுக்கு திடீர் ஈர்ப்பு வரவும் அந்த மணி முக்கியபங்கு வகிக்கும். இந்த கதையுடைய இறுதி வரியையும் அந்த மணியை கொண்டே முடித்ததும் மிக பொருத்தம். அடுத்தடுத்த கதைகளிலும் இந்த சுவாரசியம் தொடருமானு நம்மள நினைக்க வெச்சதே இந்த கதைக்கான சிறப்பு.    

2.PARADOX -  அசத்தல்.
முதல் கதைக்கு துளியும் தொடர்பில்லாத வேறொரு களத்தில் நகரும் கதை. பெரும் தொழில் அதிபர் தனது காதல் மனைவி தற்கொலை செய்துகொண்ட காரணத்தை தேடி கால இயந்திரத்தில் பயணிக்கும் கதை. இந்த கதையோட சிறப்பே கடைசில இந்த தலைப்பிற்கான அர்த்தம் நமக்கு புரிபடும் இடம்தான்.

3.அய்யா -  கணம்.
ரொம்ப சில கதைகளை படிக்கும்போது மட்டும்தான் அந்த எழுத்தாளர் மேல உரிமையா கோவப்படவோ, சில கேள்விகளை அவரிடம் கேட்க்க தோணும். இது அப்படியான கதை. ரொம்ப செல்வாக்கா வாழ்ந்து சில வருசத்துக்கு முன்ன காணாம போன அய்யா. அவரை பார்த்ததா ஊர்காரங்க சொல்ற இடத்துக்கு தேடி செல்லும் மகன். அவன் தனது அய்யாவின் நினைவுடனே  பயணத்தை தொடர்ந்து அவரை சந்திக்கும் கதை. நம் மனதில் பல கேள்விகளை எழுப்பும் இதன் முடிவு.

4.மெல்ல தமிழினி – கலக்கம்.
ராஜேஷ்குமாரின் கதைகளில் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத கதைகளை அடுத்தடுத்த அத்தியாயங்களில் வரும். இந்த இரு கதைகளும் இணையும் புள்ளியில் கதையை முடிப்பார். இது கிட்டத்தட்ட அப்படியான வகையை சேர்ந்த கதை. ஆனா இந்த பாணி எளிய கதைகளை ஒரே நேர்கோட்டில் கூட இதே தரத்துடன் கொண்டு சென்று முடிக்கலாம். ஆனா மூணு – நான்கு கதைகளாக பிரித்து முடித்தது வாசிப்பாளர்களுக்கு நிச்சயம் புது அனுபவத்தை தரும்.   

5.ப்ளான்- A பழனி – சிரிப்பு.
சமீபமா கேரளால நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையா கொண்ட கதை. அந்த சம்பவம் ஒரு திருட்டை பத்தியது. இதில் சூவரசியமே அந்த உண்மை சம்பவத்திலும் இந்த பழனியை போன்ற நபர் ஒருவன் கண்டிப்பா இருந்திருப்பானு நம்ம எல்லோரையும் நம்பவெச்சதுதான். சினிமாமாறியே எழுத்திலும் நகைச்சுவை படைப்பு அவ்ளோ சுலபம் இல்லை. இவருக்கு அதும் கைக்கூடி வந்திருப்பது மகிழ்ச்சியே.

6.தண்டனை – மனபாரம்.
செய்யாத குற்றத்திற்கு கிடைக்கும் தண்டனையின் வலியை காட்டிலும், அதிக வலிதருவது. நம்ம, தவறான நபர்மீது சுமத்தும் குற்றச்சாட்டும், உதிர்த்த வார்த்தைகளும். இவ்வளவு லேசான பாத்திரங்களை கொண்டே, இந்த கருவின் வீரியத்தை சிதைக்காமல் ஒரு கதை. எந்த கதையிலும் யூகிக்க முடியாத முடிவை கொடுத்தவர். இந்த கதையின் பாதியிலே நாம் யூகிக்கும்படி இல்லாமல் இருந்திருந்தால், இக்கதையால் நம் பாரம் இன்னும் சற்று கூடியிருக்கும் என்பது நிதர்சனம்.
இறுதியாக இப்புத்தகத்தின் தலைப்பில் உள்ள கதை. பெரும்பாலோருக்கு இக்கதையே தங்களுக்கு மிகப்பிடித்த கதையாக இருக்கும். மொத்தமாக இதன் ஒவ்வொரு கதையும் நம் அனைவருக்கும் ஒவ்வொரு உணர்வை வெளிப்படுத்தும். நேரமிருப்போர் நிச்சயம் வாங்கி படிக்கவும்.

இப்புத்தகம் தேவைபடுவோர் :

9840967484 - KALAKKAL DREAMS

Search This Blog