Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Friday, July 28, 2017


OZHIVUDIVASATHE  KALIi – இந்தியாவின் மிகச்சிறந்த அரசியல் படம்.


ஒரு கதை அது தாங்கி வரும் கருவை முழுபடத்தில் ஒரு ஷாட்கூட நேரடியாக கூறாமல் ஆங்காங்கே மறைமுகமாக மட்டுமே கூறி. அது பார்வையாளர்களையும் சலிப்பேர்ப்படுத்தாமல் முழுதாக சென்று சேரும்படியான மிகச்சரியான படைப்பு.


கிட்டதட்ட நாற்பது வயதிலுள்ள ஐந்து நண்பர்கள் அவர்கள் மாநிலத்தின் தேர்தல் நடைபெறும் அன்று விடுமுறை தினமானமானதால் (வாக்காளர் கடமையை கூட நிறைவேற்றாமல்) ஒன்றாக குடிக்க தங்களுக்கு சௌகர்ய இடம் ஒன்றுக்கு செல்கின்றனர். அங்கு அவர்கள் உதவிக்கு சமைத்து பரிமாற ஒரு ஆண் மற்றும் பெண் இருக்கிறார்கள். படம் துவங்கி பதினைந்து நிமிடத்தில் அங்கு செல்லும் இந்த ஐந்து நண்பர்கள் மேலும் அந்த இரண்டு பணியாளர்கள் இந்த ஏழு நபர்களின் அடுத்த ஒன்றரை மணிநேர வாழ்க்கையே இப்படம்.


நண்பர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து குடிப்பது. அருகிலுள்ள குளத்தில் குளிப்பது. பலாபழம் பறிப்பது. அவர்கள் தங்களுக்குள் நடத்தும்   உரையாடல். அவர்களின் சந்தோசம், கோபம், வஞ்சம், காமம் இதை மட்டுமின்றி இவர்கள் நடவடிக்கையின் ஒவ்வொரு அசைவும் நேரடியாக இல்லாமல் மறைமுகமாக அரசியல் பேசவேண்டும். ஒரே லொகேஷனில் ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்ப்படுத்தாமல் சொன்னதில் உள்ளது இவர்களின் சிறப்பு.


அவர்களில் இருவர் அந்த பெண்ணிடம் தவறாக அணுக முயற்சிக்கின்றனர். அதில் அதிக செல்வாக்கானவர் அப்பெண்மணியிடம் அரை வாங்குவது. மேலும் இலவசமாக கிடைத்த பலாபழத்தை தங்களில் செல்வாக்கானவருக்கு அதிக பங்கும் அதில் குறைந்தவருக்கு சிறு பங்கும் மற்றவருக்கு ஏதும் இல்லாமல் பாகம் பிரிப்பது. சமைக்க கொண்டுவரும் கோழியை என்னால் கொல்ல இயலாது என சமைக்கும் பெண்மணி கூறுவதால், அவர்களில் மிக எளிமையானர் தலையில் அந்த பாவச்செயல் கட்டப்படுவது. பின்னால் அந்த பாவமே அவரது தலையில் விடிவது.
அவர்களிடையிலான உரையாடல் வாக்குவாதமாகி அந்த வீட்டை விட்டு வெளியேறும் நண்பர் ஒருவரை அதற்க்கு காரணமானவர் தவிர மற்றவர்கள் (குறிப்பாக அந்த எளியவர்) சமாதானப்படுத்துவது. இறுதியில் அவர் மூலமே இவர் வாழ்க்கை முடிவது. இக்கதையின் ஒவ்வொரு காட்சியும் நமக்கு வேறு ஏதோ ஒன்றை ஞாபகப்படுத்தியே செல்லும்படியான திரைக்கதை அபாரம். மேலும் கதையின் அனைத்து காட்சிகளும் மறைமுகமாக பேசும் உள்ளார்ந்த அரசியல் நிலையை பற்றி சிந்திக்காமல் மேலோட்டமாக பார்த்தாலும் அந்த நண்பர்களிடயேயான இந்த ஒன்றரை மணிநேர கதை மிக சூவாரசியமாகவே செல்வதும் இதன் சிறப்பம்சம். ஆதலால் பொழுதுபோக்கிற்கு படம் பார்க்கும் ரசிகர்களையும் இக்கதை கவரும்.


இந்த நண்பர்கள் மற்றும் பணியாட்கள் மட்டுமின்றி மிக முக்கிய கதாபாத்திரமாக மழை மற்றும் அவர்கள் தங்கியுள்ள வீட்டின் அருகிலுள்ள குளத்தின் நீர் காற்றில் ஏற்ப்படுத்தும் சலனத்தையும் கதையின் போக்கோடு இணைத்து வைக்கப்பட்ட அனைத்து ஷாட்ஸ்ம் அட்டகாசம். உதாரணமாக நண்பர்களிடையே வாக்குவாதம் நடைபெற்று ஒருவர் வெளியேறி மற்றவர்கள் சமாதானப்படுத்தி அழைத்து வரும் காட்சியில்,  அவர்கள் வாதத்தின் போது துவங்கும் மழை. அவர்களின் வாதம் உச்சநிலையை அடைகையில் வலுபெருவதும். ஒருவர் வெளியேறி மற்ற நண்பர்கள் சமாதானப்படுத்துகையில் மிதமாகி, பின் அவரை அறைக்கு அழைத்து வந்து சமாதானபடுத்துகையில் தூறலாக மாறுவதும். அவரின் வெளியேற்றத்திற்கு காரணமானவரே வந்து கட்டியணைத்து பேசுகையில் தூறலும் சுத்தமாக நின்றுவிடுவது என அற்புத உருவாக்கல்.


படத்தின் இறுதி காட்சிவரை இக்கதையை அரசியல் படமாக எந்த சராசரி சினிமா ரசிகனாலும் உணர இயலாத வகையில் அமையப்பெற்ற நல்ல குதூகல படம். கண்டிப்பாக அனைத்து ரசிகர்களையும் கவரும். இதில் பணியாளர்களை பொதுமக்களாகவும், இலவசமாக கிடைத்த பலாவை லஞ்ச பணமாகவும், நண்பர்கள் ஒவ்வொருவரையும் ஒரு அரசியல் கட்சியாகவும் (யார் எந்த கட்சி என நீங்களே யூகித்துகொள்ளவும்). இறுதி காட்சிக்கு பின் தொலைகாட்சியில் ஒலிக்கும் கம்யூனிசம் குறித்த வாதத்தை தவறவிட வேண்டாம். நமக்கு கேரள அரசியல் குறித்த பார்வை எவ்வளவவு அதிகமோ அதை விட அதிகமாகவும் ஆழமாகவும் இப்படத்தை ரசிக்க இயலும்.

Saturday, July 22, 2017










பார்த்ததில் மிகவும் ரசித்தது: 115.


நோலன் மற்ற படைப்பாளிகளில் இருந்து அதிகளவில் மாறுபடுவது தனது கதை சொல்லும் பாணியில் மட்டுமே. ஒரே ஊருக்கு ஒரே பயணத்தில் மூன்று வெவ்வேறு பாதையின் வழியே கூட்டி செல்வது. அதில் ஆச்சர்யம்  அந்த அனைத்து பாதையுமே பயணிகளுக்கு பெரும் சுவாரசியமாகவே அமையும்படி பார்த்து கொள்வது. ஆதலாலே அதிக பயணிகள் மற்ற ஓட்டுனர்களை (இயக்குனர்கள்)  விட இவரிடம் அதிகம் எதிர்ப்பார்ப்பது.


ஷூட்டிங் ஸ்பாட்டைவிட அதிக உழைப்பையும், நேரத்தையும் தனது ஸ்கிரிப்ட்திற்கு இவர் செலவழிப்பது இவரது அனைத்து படைப்புகளின் மூலம் நமக்கே தெரியும். இந்த படமும் ஒரு ஊருக்கு பல வழி பயணமே. பல வேலைகளில் இவர் தேர்ந்தெடுக்கும் பாதை பயணிகளுக்கு புதிராகவே இருப்பதால் இம்முறை DUNKRIK செல்லும் பயணிகள் ஒரு முறை இந்த மேப்பை (பதிவை) பார்த்து சென்றால் இந்த பயணம் உங்களுக்கு எளிய புரிதலை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.


கதை அனைவரும் அறிந்த அதே இரண்டாம் உலகபோரில் பெல்ஜியம், பிரான்ஸ், மற்றும் பிரிட்டிஷ் படை வீரர்கள் சுமார் நான்கு லட்சம் பேர் ஜெர்மன் படை வீரர்களால் சுற்றி வளைக்கப்பட்டனர். 26.05.1940 முதல்  04.06.1940 வரை என கிட்டத்தட்ட இந்த ஒன்பது நாட்கள் இவர்களின் வாழ்க்கையே இப்படம். 


இதே கதை உலகின் எந்த இயக்குனர் வசம் ஒப்படைக்கபட்டிருப்பினும் லட்ச கணக்கில் துப்பாக்கிகளும், டன் கணக்கில் தோட்டாக்களும், ஆயிரக்கணக்கான வெடிகுண்டுகளும் பயன்படுத்தி கதை முழுக்க இவை வெடிக்கும் சப்தத்தையும், இதனால் பாதிப்படைந்த வீரர்களின் மரண ஓலத்தையும் பின்னணியில் ஒலிக்கவிட்டு பார்வையார்களின் பரிதாப ஓட்டுகளை வாங்கி சென்றிருப்பர். மேலும் அந்த கடல் முழுக்க ரத்தத்தையும் பிணங்களையும் கொண்டு மறைத்திருப்பர். உடைந்த கை மற்றும் கால்கள் என அந்த பீச் முழுக்க மனித உடல் பாகங்களின் கண்காட்சி வேறு தனியே நடந்திருக்கும். 


ஆனால் இதே கதையை இவரிடம் சென்றதால் அடைந்த மேன்மை என்ன?


இந்த டீசரில் வரும் பின்னணி இசையும், போர் விமானத்தின் இஞ்சின் ஒலி. அதை மட்டுமே (பெரும்பாலும்) கொண்டு பார்வையார்கள் அனைவரையும் இருக்கையிலே கட்டிபோட்டது. மேலும் வீரர்கள் அனைவரும் கதை துவங்குவதற்கு முன்னே சுற்றி வளைக்கப்பட்டு விட்டனர். ஆதலால் தாங்கள் உயிர் பிழைத்ததாக வேண்டிய கட்டாயத்தில் மட்டுமே உள்ளதால் கதை முழுக்க (பெரும்பாலும்) துப்பாக்கி, தோட்டா மற்றும் வெடிகுண்டுகளுடனே திரிவதில்லை. ஒரு கப்பல் போர்விமானம் மூலம் சாய்க்கபடுவதை அந்த கப்பல் முழுக்க இன்ச் பை இன்ச்சாக வெடித்து முழுகுவதையும், வீரர்கள் உடல் சிதறி உயிரிழப்பதையும் மற்றும் அவர்களின் மரண ஓலங்கள் பின்னணியில் ஒழித்து பார்வையாளர்களை பீதியில் ஆழ்த்தவில்லை. ரத்தம் வீரர்களின் உடலில் இருந்து ஒரு துளி கூட பூமியில் சிதறும் காட்சிகள் இல்லை. மேலும் அவர்களின் உடல் பாகங்கள் அனைத்தும் அவர்களிடமே இறுதிவரை இருந்ததால் நாம் நிம்மதியாக வீடு திரும்ப ஏதுவாக இருந்தது.


இது எதுமே இல்லாம எப்படி ஒரு இரண்டாம் உலக போரின் ஒரு பகுதி படமாக்க சாத்தியம்? மேற்கூறிய அனைத்தும் இந்த கதைகளிலும் நிகழ்ந்தது. ஆனால் அவை நமக்கு உணரவைக்க பட்டதே அன்றி காட்சிப் படுத்தபடவில்லை. உதாரணமாக ஒரு கப்பல் போர் விமானத்தின் மூலம் சுட்டு வீழ்த்தப்படும் போது அது பார்வையாளனுக்கும் அந்த விமானியின் பார்வையில் இருந்தே காட்டப்படும். நமக்கு மரணம் என நேரடியாக காட்டப்பட்டதே இருவரின் மரணம் மட்டுமே. ஒன்று வீரர்களை காக்க தனது சொந்த படகை எடுத்துவரும் (MARK RYLANCE) பெரியவரின் பதினேழு வயது மகனின் மரணம் (குண்டடிபட்டு இறப்பது போல் இல்லாமல் சிறு கைகளப்பில் தவறிவிழுந்து இறப்பது). மற்றும் பிரிட்டிஷ் வீரர்கள் பலர் மறைந்திருக்கும் படகில் ஒளிந்துள்ள பிரெஞ்சு வீரனை பயன்படுத்தி அவர்கள் தப்பித்துகொள்ள அவன் மட்டும் நீரில் மூழ்கி (அதிலும் அவன் தத்தளித்து மூச்சி முட்டி இறப்பது போல் இல்லாமல் அவரது துடிக்கும் கை அசைவு மட்டுமே காட்டப்படும்) இறப்பது. ஆக நாம் நேரடியாக பார்த்தது இந்த இரு மரணங்களை மட்டுமே அதுவும் இந்த போரின் மூலம் நிகழ்ந்ததல்ல. இவையேதுமில்லாமல் நம்மால் ஒரு போர் திரைபடத்தை பார்த்த மனதிருப்தியை எவ்வாறு ஒரு இயக்குனராக அவரால் தர தரமுடிந்தது.


முன்பே கூறியது போன்று அவரின் கதை சொல்லும் பாணி. படம் துவங்கி இரண்டாம் நிமிடத்தில் நகரில் இருந்து கடற்கரை நோக்கி ஓடி வரும் ஒரு வீரனுடன் பயணிக்கும் கேமரா ஒரு ஷாட் (மறக்காமல் அந்த சிலிர்ப்பை அனுபவிக்கவும்). இந்த ஒற்றை கதை அங்கே மூன்றாக பிரியும் தரைவழி, ஆகாயவழி மற்றும் கடல் வழியென.


கிளை கதை:1.ஜெர்மன் விமானவழி தாக்குதல்களை சமாளிக்க இரு பிரிட்டிஷ் போர் விமானிகளாக JACKLOWDEN மற்றும் TOM HARDY இருவரின் ஆகாய வழி கதை.

கிளை கதை:2. DUNKIRK பகுதியில் இருந்து தப்பிக்க பிரிட்டிஷ் நாட்டினரின் சில கப்பல்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் அவர்கள் நாட்டின் வீரர்களுக்கே முன்னுரிமை என்பதால் பிரெஞ்சு வீரர்களான FIONN WHITEHEAD மற்றும் ANEURIN BARNARD கப்பலில் திருட்டு தனமாக பயணிக்கும் கடல்வழி கதை.

கிளை கதை:3. கடற்கரையில் எஞ்சியுள்ள லட்சகணக்கான வீரர்களை கூட்டி செல்ல வரப்போகும் சுமார் 70௦ பிரிட்டிஷ் படகுகளுக்காக அவர்களுடனே காத்திருக்கும் ராணுவ உயர் அதிகாரி மற்றும் வீரர்களின் தரைவழி கதை.

இப்பதிவின் மூலம் படத்தின் கதை முழுக்க கூறியது போன்று தோன்றினாலும். இந்த மூன்று கதைகளையும் ஒரு சேர கூறாமல் தனது பாணியில் கூறிய விதத்தில் உள்ளது இயக்குனரின் சாதுர்யம். அனைத்து தொழில் நுட்ப வல்லுனர்களும் மிகச்சரியாக தங்களது பணியை நிறைவேற்றி இருப்பினும் இக்கதைக்கு உயிர்நாடியான  எடிட்டிங் LEE SMITH (BATMAN series, INSPECTION) மற்றும் MUSIC HANS ZIMMER இருவரின் மூலமே இப்படம் முழுமை அடைந்துள்ளது. இந்த பதிவு முழுக்க இப்படத்தை பார்க்கும் வழிமுறை மட்டுமே. இதை முழுக்க படித்திருப்பினும் தனது கதை சொல்லும் பாணியில் மிகபெரும் ஆச்சர்யத்தை ஒளித்துள்ளர். திரையில் தரிசித்து ஆசிபெற்று கொள்ளவும்.

Wednesday, July 5, 2017







பார்த்ததில் மிகவும் ரசித்தது : 081.

பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லைக்கு மிகஅருகில் அமைந்துள்ள கிராமத்தை சேர்ந்த சர்ப்ஜித்சிங். இவர் 9௦களில் தோட்ட வேலைக்கு சென்ற இடத்தில் மாயமாகிறார். பின் ஓராண்டு கழித்து அவரிடமிருந்து வரும் கடிதம் BHIKHIWIND எனும் அந்த கிராமத்தை மட்டுமின்றி அம்மாநிலத்தையே உலுக்கியது.
பாகிஸ்தான் மாநில எல்லையை அத்துமீறி நுழைந்தது, உரிய ஆவணங்கள் ஏதுமில்லாதது கைது செய்தது பாகிஸ்தான் ராணுவம். அது மட்டுமின்றி தனது பெயரை மஞ்சித்சிங் என கூற வலியுறுத்துவதாகவும் (199௦களில் பாகிஸ்தானில் நடைபெற்ற பல வெடிகுண்டு வழக்குகளில் தொடர்புடையவன்) இந்த விஷயங்கள் மட்டுமே இந்த நிகழ்வுகள் திரைப்படமாக மாற காரணமன்று.


அதன் பின் அவரது தங்கை தனது 23 ஆண்டுகள் தொடர் போராட்டங்களால் தமது குடும்பத்தை இழக்கும் சூழலிலும் நமது மத்திய அரசின் கவனத்தை ஈர்த்து சர்ப்ஜித்யை நமது நாட்டுக்கே திரும்பி வர செய்த முயற்சிகளே...
சர்பஜித்தாக ONCE UPON A TIME IN MUMBAI, MANSOON WEDDING, HIGHWAY படங்களில் நம்மை ஈர்த்த ரந்தீப் ஹூடா. அந்த பாத்திரமாக தன்னை மாற்றிக்கொண்ட இவரின் ஆத்மார்த்த உழைப்பு, சில நிமிடங்களே வரும் பாகிஸ்தான் சிறைச்சாலை சித்ரவதை கூடம் காட்சிகளுக்காக ஹூடா எடுத்துக்கொண்ட உழைப்பை விட அதற்காக காத்திருந்த தயாரிப்பு தரப்பை நிச்சயம் மெச்சி கொள்ளலாம்.


ஹூடா வின் மனைவி பாத்திரத்தில் தனது சிறு சபலத்தால் தனது வாழ்வே திசைமாறி சென்ற ரோலை அனாயசமாக செய்த கடந்த வருடம் மிகபெரும் வரவேற்ப்பை பெற்ற MASAAN பட நாயகி. எவ்வளவு கனமான கதையை இவரது தலையில் வைத்தாலும் வெறும் இறுக்கமான முகபாவனைகளை கொண்டே நம்மை ஈர்க்கும் வல்லமை.


இவர்கள் அனைவரின் பங்களிப்பை விட ஹூடாவின் தங்கையாக, இத்தனை ஆண்டு காலம் அந்த கண்களில் காதல் மற்றும் பிரிவின் சோகம் தவிர வேறு உணர்ச்சிகளே கண்டிராத நமக்கு முதன்முறையாக அந்த கண்கள் மனோதைரியத்தையும், போராட்ட குணத்தையும், தனது சகோதரனை அவனது குடும்பத்துடன் சேர்த்து வைக்கப்படும் துயரங்களும், சிறையில் இருவது ஆண்டுகளுக்கு பின் தனது குழந்தையாகவே பாவிக்கும் தனது அண்ணனை சந்திக்கும் கணங்களில் என படம் நெடுக முதல் முறை திரையில் இந்த கண்கள் மட்டுமின்றி அதன் உரிமையாளர் (ஐஸ்வர்யா ராய்) பெண்ணின் பங்களிப்பு அபாரம்.


நமக்கு அறிவு சார் படங்கள் மேல் எப்பொழுதும் பெரும் ஈர்ப்பு இருந்தாலும், இது போன்ற மனம் சார் படங்களை என்றும் நம்மால் ஒதுக்கவே முடியாது என்பதற்கு ஹூடாவை அவனது குடும்பத்தார் சிறைச்சாலையில் சந்திக்கும் காட்சி மட்டுமே போதுமானது.


மேரி கோம் படத்தில் நூலிலையில் தவறவிட்ட காரணிகளை களைந்து இம்முறை அழுந்த தடம் பதித்துள்ளார் இயக்குனர் ஓமுங்குமார். இவர் மற்றும் நாயகன் ஹூடாவின் அர்ப்பணிப்புக்கு அடுத்த தேசிய விருது பட்டியலில் நிச்சய சிறிய ஆறுதலேனும் இருக்கும்.

https://www.youtube.com/watch?v=OppDLt2BKAE

Saturday, July 1, 2017





பார்த்ததில் மிகவும் ரசித்தது :114.

த்ரில்லர் கதைக்கான அடிப்படை சூத்திரமே அதன் பரபரப்பான திரைக்கதை. அதிவேக சேஸிங் காட்சிகள். ஆயுதங்களின் பெரும் இரைச்சல். குறிப்பாக ஒரே இடத்தில் நில்லாமல் அனைத்திலும் வேகமாக சுழலும் கேமரா. அதற்கேற்ற எடிட்டிங். 


ஆனால், மிக நிதானமாக நின்று பயணிக்கும் ஒரு திரைக்கதையில், மிகயதார்த்தமான ஒரு மெலோ டிராமாவில், சேஸிங், ஆயுதங்கள் ஒலி எதுவுமே கேட்க்காத ஒரு கதையில், துவக்கம் முதல் இறுதிக்கு முந்திய காட்சிவரை வரை நூலிழை அளவு மட்டுமே தெரியும் பெரும் திர்ல்லருக்கு உண்டான அறிகுறிகள். மிகஅடக்கமாக இறுதிகாட்சி வரை எந்தவித ஆர்ப்பாட்டமும் மின்னல்வேக சுழலும் காமெராக்கள் மற்றும் சேஸிங்கும் இல்லாமல் கொண்டுவந்து இறுதிகாட்சியுடன் இணைத்தது. மேலும் இக்கதைக்கு பீரியட் (193௦)யை கதைகளமாக பயன்படுத்தியது என இப்படம் பார்வையாளனுக்கு நிச்சயம் ஒரு புதுவித அனுபவத்தை தரும் என்பதில் சந்தேகமில்லை. 


இங்கு கொரியாவில் இருந்து ஜப்பானில் பெரும் செல்வந்தர் வீட்டிற்கு வேலைக்கு செல்லும் #பணிப்பெண்_HANDMAIDEN பிரதான பாத்திரம். இங்கு வரும்பொழுதே அவள் அங்கு ரகசியமாக செய்ய வேண்டிய பணிகளுக்கு ஒப்புக்கொண்டே வருகிறார். ஊருக்கு சற்று தள்ளி அமைந்துள்ள அந்த பெரும் மாளிகையினுள் SOKEE எனும் அப்பனிப்பெண்னுடனே நுழைகிறது அந்த நூலிழை அளவு திர்ல்லிங்கும். எந்த இடத்திலும் அந்த நூல் முடிச்சிட்டு பார்வையாளரை குழப்பாமலும். அதே நேரம் அங்கு நம்மால் இனம் கண்டுகொள்ளப்படாத ஏதோ ஓர் நிகழ்வு நடந்துவருவதை ஹாரர் கதைகளை போல ஒலி மூலம் நமக்கு உணர்த்தாமல். யதார்த்த காட்சி அமைப்பின் மூலமே உணரச்செய்யும் உருவாக்கல் அசாத்தியம். 


பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை நம் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டு பணத்தை பிரதானமாக கொண்டு நடைபெறும் விதங்களில் ஒன்றை எவ்வாறு யுத்தம் செய் வெளிச்சமிட்டு காட்டியது. அதனினும் பலமடங்கு முதிர்ச்சி பெற்றவராலும் யூகிக்க இயலா வகையில் அங்கு நடைபெறும் சம்பவ(ம்)ங்கள் நமக்கு மிகபெரும் அதிர்வை ஏற்படுத்துகிறது. திட்டத்துடன் நுழையும் அந்த பெண்ணின் பாத்திரம் வழக்கமான வெகுளியாக சித்தரிக்கப்பட்டாலும், அவளின் பிடிவாதமும்,          விடாமுயற்சியுமே இக்கதையை வெறும் முடிவுக்கு கொண்டுவராமல் சுபமாக முடிவுற செய்கிறது.


இப்படத்தின் இயக்கம் CHAN_WOOK_PARK. இவர் OLDBOY படத்தின் திரைக்கதை இயற்றியவர். SYMPATHY FOR MR. VENGEANCE, LADY VENGEANCE, THIRST படங்களின் இயக்குனர். கதையின் போக்கில் காட்டப்படும் காட்சிகளுக்கும் அது செல்லும் முடிவும் உண்மையல்ல என்று சால்ஜாப்பு காட்சிகளின் மூலம் ஒப்பேற்றிவிடாமல் அதற்க்கு தரப்பட்ட டீடைலிங்க் இந்த மேதையின் திரைக்கதைக்கான மிகபெரும் சான்று. “SARAH WATERSன் “FINGERSMITH” நாவலை அடிப்படையாக கொண்டே இக்கதை உருவாக்கப்பட்டாலும் இவரை விட யாராலும் இதன் மூலம் கெடாமல் அதை மேலும் சிறப்பிக்கும்படி உருவாக்க முடியாது என இந்நூலின் ஆசிரியர் கூறியதே இவருக்கான மிகப்பெரும் சான்று.

TRAILER LINK: உங்களுக்கு தில் இருந்தா இந்த ட்ரைலர் மட்டும் பார்த்திட்டு படத்தை பார்க்காமல் இருக்கவும்.

https://www.youtube.com/watch?v=IkvHtfRAKNk 

இதில் அதிர்ச்சியளிக்கும் பல சம்பவங்களும், நாம் அறிந்திடாத பல பாத்திரபடைப்புக்களும் நிச்சயம் உங்களை வியப்பில் ஆழ்த்தும்.

Search This Blog