Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Tuesday, October 27, 2020

 


WEB SERIES -001

MIRZAPUR (2020) – SEASON – 02- 10 EPISODES.

  எப்ப  அடுத்த சீசன் வரும்னு முதல் சீசன் பார்த்த மொத்த பேரையும் எதிர்பார்க்க வெச்ச சீரீஸ். அதுக்கு மிக முக்கிய காரணம் Kaleen Bhaiya மற்றும் அவர் மகனாக வரும் Munna இந்த ரெண்டு வில்லன் பாத்திரங்கள். முதல் சீசனோட ஒன்பது எபிசோட்ஷும் பெரும்பான்மை காட்சிகள்ல இவங்க ராஜ்ஜியம்தான்.  பாத்திரங்களோட குணாதிசயங்களை ஒவ்வொரு சின்ன சின்ன காட்சிகளிலும் இவங்க ரெண்டு பாத்திரங்கள்லதான் அதிகமா சொல்லிட்டே வந்திருப்பாங்க.

நாயகன் பாத்திரம் பண்ண Guddu, Bubbluவும் இவங்ககிட்ட வேலை பாக்கறவங்களாதான் வருவாங்க.  இந்த தொழிலிலுள்ள நெளிவு சுளிவுகளை ரொம்ப சீக்கரம் இவங்க கைக்குள்ள கொண்டுவந்துடுவாங்க. அவங்க வியாபாரம் எங்கெல்லாம் தடைபடுது, அதை எப்படி சரி பண்ணனும் எல்லாமே சரிபண்ணி. அவங்க வியாபாரத்தை ரொம்ப பெருசா பண்ணிடுவாங்க.

மொத்த DON படங்களோட கதைகளை போலவே. அப்பா, அவங்க (Guddu, Bubblu)ளுக்கு கொடுக்கும் முக்கியதுவம் நமக்கு கொடுக்கலைனு நினைக்க ஆரமிக்கும் இடம், இந்த கதை உச்சபட்ச வேகம் எடுக்க ஆரமிக்கும். தன்னோட அப்பாவையே கொல்ல முடிவெடுத்து, அதுக்கான வேலைகளையும் ஆரமிக்க. இங்க அப்பாவோ இந்த நாயக பாத்திரங்களை கொண்டு ரொம்ப அழகா தன்னோட வியாபார எல்லையை விரிவுபடுத்திட்டு இருப்பாரு.

இந்த சூழல்ல ஆளும்கட்சி அமைச்சரோட ஒரு பொண்ணு விஷயத்துல தன்மகனால பகை ஒருபுறமும். தன்னை மீறி தன்னிடம் வேலைபார்க்கும் Guddu, Bubbluவின் வளர்ச்சியும். தன்மேல் நடத்தப்பட்ட கொலைமுயற்சிக்கு காரணகர்த்தா யார் என்ற குழப்பமும். தன் மகனே சமீபமாக தன்னை விட்டு விலகி நிற்பதால் ஏற்பட்ட மனசோர்வு என இத்தனை குழப்பங்களுக்கு மத்தியிலும், அந்த மாவட்டத்தின் (Mirzapur) ராஜா என்ற கம்பீரத்தையும், நிதானத்தையும் எந்த காட்சியிலும் விட்டுகொடுக்காமல் வளம்வருவார். இவரை மீறி இந்த இடத்துல ஒருத்தனும் ஒன்னும் பண்ணமுடியாதுனு நம்ம எல்லோரையுமே நினைக்கவெச்சிடுவார் Kaleen Bhaiya.

எந்த சின்ன விஷயமாக இருந்தாலும் ரொம்ப யோசிச்சு சரியான வழிமுறைகளோட அதை செயல்படுத்த ஒருவனும், தங்கள் தொழிலுக்கு இடையூரா இருப்பவர் எத்தனை பெரிய நபரா இருந்தாலும், அந்த நபரை சுத்தி எத்தனை பேர் இருந்தாலும் கொஞ்சமும் தயங்காமல் தாக்குதலில் இறங்க ஒருத்தனும் என Guddu, Bubblu ரெண்டு பேரோட பாத்திர வடிவமைப்பு அத்தனை சுவாரசியமா  இருக்கும். இந்த நான்கு முக்கிய பாத்திரம் இல்லாமல் துணை பாத்திரங்களா வரும் அத்தனை நபர்களுமே அவங்க பங்குக்கு இந்த கதையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போய்கிட்டே இருப்பாங்க.

ஒருகட்டத்தில் தன் அப்பாவுடைய அனுமதியோடே Munna ஒரு திருமணநிகழ்வில் Bablu மற்றும் Gudduவுடைய காதலினு இவங்க நெருங்கிய வட்டத்தை சேர்ந்த மொத்த நபர்களையும் ரொம்ப கொடூரமா கொலை பண்றதோட முதல் சீசன் நிறைவடையும்.  இப்ப எதைபத்தியும் யோசிக்காமல் உடனே களத்தில் இறங்க துடிக்கும் Guddu மட்டும் ஒருபுறமும்.  Opiyum, Gun தொழிலில் அந்த மாநிலத்தின் பெரும் சாம்ராஜ்யமாக பரந்து விரிந்து நிற்கும் Kaleen Bhaiya மற்றும் அவரது மகன் Munna மறுபுறமும் என அடுத்த சீசன் தொடங்குகிறது.

இரண்டாவது சீசன் துவக்கத்திலே Guddu, அவங்களை கொல்றது முக்கியமே இல்லை. அவங்களோட சாம்ராஜ்யத்தை கைப்பற்றி இந்த மிர்சாபூருக்கே நான் ராஜா ஆகணும்னு சொல்லுவாரு. அதனால் இந்த சீசன் கொஞ்சம் மெதுவாக நகர்வதை போல தோனலாம். ஆனால் அடுத்தடுத்த சீசனை இதே விறுவிறுப்போடு கொண்டு போவதற்கான அனைத்து சூவாரசிய சங்கதிகளும் இந்த சீசனில் இருக்கு. போன சீசனில் அங்கங்கே வந்து போன குட்டி பாத்திரங்கள் எல்லாமே இதில் பெரிய ஆச்சர்யத்தை கொடுக்கறாங்க.

முழுக்க இது வெறும் பழிவாங்கல் கதையை போல இருந்தாலும், இந்த கதையுடைய களம் மற்றும் திரைக்கதை பெரிய ஆச்சர்யத்தை கொடுக்கும். முதல் சீசன் தமிழிலேயே இருக்கு. இந்த சீசன் தற்போது ஹிந்தி மற்றும் ஆங்கில சப்டைட்டிலுடன் கிடைக்கிறது amazon Primeல்.    


Thursday, October 22, 2020



பார்த்ததில் மிகவும் ரசித்தது – 173.

புத்தம் புது காலை (2020) – தமிழ் –  ANTHOLOGY

 1. இளமை இதோ இதோ – சுதா கொங்கரா – இளமை

மனைவியை இழந்து, மகளும் (காதல்) திருமணமாகி சென்றுவிட தனிமையில் வசிக்கிறார் ஜெயராம். அவரது கல்லூரி கால தோழி ஊர்வசியும் கணவனை இழந்தவர்.  இவர் ஜெயராம் வீட்டிற்கு வரும் காட்சியில் இருந்து இந்த கதை  துவங்குகிறது. பின் இந்த கதைக்கு இளமை இதோ இதோனு தலைப்பு எப்படி பொருந்தும். இவங்க இருவரையும் வெச்சி நல்ல ஹுமர் கதையைதானே பண்ணமுடியும்? இந்த கேள்விக்கு சுதா கொங்கரா தனது மேஜிக் இயக்கத்தில் பதிலளித்திருக்கிறார். ஒரே வீடு முழு கதையிலும் இந்த இரண்டே பாத்திரங்கள் மட்டும்.  

 

2.அவனும் நானும் அவளும் நானும் – கெளதம் மேனன் – முதிர்ச்சி

அவனை முதன் முறையா அந்த காலேஜ் கல்ச்சுரல்லதான் பாத்தேன். இப்படி ஆரமிக்கும் மீண்டும் ஒரு காதல் கதையை கெளதமிடம் எதிர்பார்த்து  பார்க்க ஆரமித்தால் நமக்கு ரொம்ப பெரிய ஆச்சர்யத்தை கொடுத்திருக்கார். ஆம், இது ஒரு தாத்தா, பேத்திக்கு இடையேயான அருமையான கதை. தனது மகள் காதல் திருமணம் புரிந்ததால், அவருடனான தொடர்பை முற்றிலும் தவிர்த்து தனிமையில் வசிக்கும் தாத்தாவாக MS பாஸ்கரும், lockdownல வெளியே எங்கும் தங்கவழி இல்லாமல், பெற்றோர் வற்புறுத்தலால் பல வருடங்களுக்கு பின் தனது தாத்தா வீட்டிற்கு செல்லும் பேத்தியாக ரித்துவர்மாவும். இந்த கதையும் இங்கிருந்தே துவங்க, இத்தனை வருடம் தனது தாயை அவர் ஒதுக்கியதற்கான காரணமும், தன் மனதில் தாத்தா பற்றி இருந்த பிம்பமும் இறுதியில் ஒரு தெளிவிற்கு வருவதுடன் கதை நிறைவடைகிறது. MS பாஸ்கர்க்கு ஒரே ஷாட்ல் அவர் பக்கத்து நியாயத்தை சொல்லும் காட்சி வழக்கம்போல. அட்டகாசபடுத்தி இருக்கார் வழக்கம்போலவே. நிறைய பார்வையாளர்களோட விருப்பபடம் இந்த முதல் ரெண்டு படங்களுக்குள்ளேதான் இருக்கும்.

 



3.COFFEE ANYONE? – SUHASHINI MANIRATNAM – அரைச்சமாவு

கெளதம்மேனன்கிட்ட இருந்து இப்படி ஒரு ஆச்சர்யம்னா. சுஹாசினி மணிரத்னம் இன்னும் என்னலாம் பண்ணிருப்பாங்கனு உடனே வழக்கம்போல நம்ம தமிழ் ரசிகமனசோடு பாத்தா. நிறைய படங்கள்ல டம்மியா ஒரு பேசமுடியாத பாத்திரம் கதைமுழுக்கவே வரும். அந்த கதையோட திருப்புமுனை காட்சில அந்த பாத்திரம் பேசி எல்லோரையும் ஆச்சர்யபடுத்தும். நம்மளும் அப்படியே உச்சி குளிர்ந்து அந்த காட்சிதான் இந்த படத்துக்கே திருப்புமுனைனு நம்பஆரமிப்போம்ல அப்படி ஒரு படம். கோமால இருக்கும் அம்மா. அவங்களுக்கு மூணு பொண்ணுங்க. வெளிநாடுகள்ல இருந்து அம்மாகூட இருக்க ரெண்டு பொண்ணுங்க வராங்க. மத்ததெல்லாம் நம்ம யூகிச்சபடிதான் நடக்குது. என்ன இருந்தாலும் செண்டிமெண்ட்தான் சினிமாக்கு முக்கியம்னு நினைப்பவங்க நெறையவே இந்த படத்தை ரசிக்க முடியும். இதில் பெரிய ஆறுதல் இல்லல ஆச்சர்யம் காத்தாடி ராமமூர்த்தியை பயன்படுத்திய விதம்.

 

4. ரீயூனியன்ராஜீவ்மேனன் ?

எடுத்ததும் மின்சாரகனவு நியாபகம் வரல, காரணம் இதுக்கு முன்னாள் பார்த்த படங்கள் எல்லாமே ராஜீவ்மேனன் படங்கள் போலவே அந்த ரிச் கலர்புல் லுக்ல இருந்ததுதான். என்ன அதெல்லாம் கொஞ்சம் ரசிக்கும்படியான கதைகளோடவே இருந்தது. இந்த படம் பார்த்து முடித்ததும் மின்சாரகனவு நியாபகம் வந்தது. அதே போலவே கதை தவிர்த்து மற்ற அனைத்தும் ரசிக்கும்படி அமைந்ததால்.

 

5. மிராகிள் – கார்த்திக் சுப்புராஜ் – NORMAL

வானமே எல்லை படத்தில் கதைமுழுக்க ஒரு டிரங் பெட்டி வருமே. முழுக்க பணகட்டுகளோடு. அந்த படத்தோட கிளைகதைல முக்கியமா நகைச்சுவைக்கு அந்த பெட்டியை KB  சார் பயன்படுத்தி இருப்பார். அனால் நமக்கு படம் போக போக முக்கிய கதையை விட இந்த டிரங் பெட்டிக்கு ஏதும் ஆகிடகூடாதே. யாரோ ஒருவருக்கு அது பயன்படனுமே. யாரவது அதை திறந்துபாருங்களேனு படபடப்பு நேரம் ஆக ஆக அதிகமாகிட்டே போகும். அப்படி ஒரு கான்செப்ட்தான் இந்த படம். கார்த்திக் சுப்புராஜ் இந்த கதையை அவரோட வழக்கமான பாணில எடுத்திருக்கார். அந்த டிரங் பெட்டிமாறி தேவையில்லாத நெறைய விஷயங்கள் பின்னால போய்தான் வாழ்க்கையை தொலச்சிட்றோம்னு சார்லி, கவிதாலயா கிருஷ்ணன் பாத்திரங்களை வெச்சி மெசேஜ் சொல்லிருப்பார் KB சார். இங்க அவ்ளோலாம் இல்லை. ஆனா ஓரளவு ரசிக்கும்படியே எடுத்து வெச்சிருக்கார்.

சிறுகதை, கவிதை  போட்டிக்கு தலைப்பு சொல்றபோல இந்த படங்களுக்கு LOCKDOWN னு தலைப்பு சொல்லிடாங்க போல. அதால எல்லா கதைலயும் lockdown வருது.  அதால ஒரே வீடு மட்டும்தான் எல்லா கதைகளிலும்  அதும் கெளதம்மேனன் படத்துக்கு PC ஸ்ரீராம் சார் வொர்க் பண்ணிருக்கார். சுதா கதைல GV பிரகாஷ் மியூசிக் பண்ணிருக்கார்.  வேறொவர் கதை பண்ணினதால் முதலில் பிழைத்தது கெளதம்மேனன் தான். எல்லா கதைகளிலும் technical டீம் strong ஆக இருக்கவும் சுமாரான படங்கள்கூட forward பண்ண தோணலை. AMAZON PRIME ல இருக்கு கண்டிப்பா பாக்கலாம்.


Thursday, October 8, 2020

 


பார்த்ததில் மிகவும் ரசித்தது – 172


என் அப்பா பள்ளிக்கூடமே போனதில்ல. நான் பள்ளிக்கூடமும் போனேன் நல்லாவும் படிச்சேன். அப்ப நான் தெரிஞ்சிகிட்டது ஒன்னேஒண்ணுதான். இந்த உலகத்துல ரொம்ப முக்கியமானது படிப்பு மட்டும்தான். என்னோட பையனுக்கு முதல்ல நான் இததான் புரியவெப்பேன். அவனை எப்படியும் ஒரு நல்ல ஸ்கூல்ல சேர்த்தி படிக்கவைப்பேன். அவன் பையனுக்கு 20 வயசாகும் போது  எதுமே பண்ணனும்னு அவனுக்கு அவசியம் இருக்காது. இப்படி  சந்தோசமா இருக்கலாம். ஒருத்தன் சும்மா இருக்கணும்னா இங்க அதுக்காக 3 தலைமுறை உழைக்கவேண்டி இருக்கு.

இது மாசமா இருக்கும் தன்மனைவியோடு ஒரு நட்சத்திர ஹோட்டல் நீச்சல் குளத்தில் விளையாடி கொண்டிருக்கும் குழந்தைகளை காட்டி நவாசுதின் சொல்லும் வசனம். இதுதான் இந்த படத்தோட சாரமும்கூட.  எதும் குழந்தைங்களோட கல்வி, எதிர்கால போட்டி உலகம்னு பாடம் நடத்தாம நவாசுதின் படங்கள்ல இருக்கவேண்டிய எல்லாமும் இருக்கும் படம். கண்டிப்பா இது குழந்தைகளுக்கான படம் இல்லை. இது முழுக்க பெற்றோர்களுக்கான படம்.

நம்ம என்ன ஆகணும்னு ஆசைபட்டோமோ, அதெல்லாம் நம்ம குழந்தைக்கு கிடைக்கனும்,   மெஹாஹிட் அடிச்ச Dangal படத்துக்கும் இதே சாரம்தான். இதுவேறமாறினு சொல்ல ஒரே காரணம். நம்ம பையனுக்கு  அதெல்லாம் கிடைக்க சுலபமா தெரியும் குறுக்குவழிகள் எதுலயும் செல்லும் தந்தையின் கதையிது. ரொம்ப சரியா தனக்கு வரும் எந்தமாறி கதைகளுக்கு உள்ளேயும் தன்னை ரொம்ப சரியா பொருத்திக்கறார். எப்பவும் தன்னை முன்னிலை படுத்திக்காம அந்த பாத்திரம் அந்த சூழ்நிலைல என்ன பண்ணுமோ அதை மட்டுமே பண்றதாலயும், அந்த கதையோட முக்கிய திருப்பம் பெரும்பாலும் இவரோட பாத்திரத்தை கொண்டே நகரும்படியான கதை தேர்வும்தான். இவர்மேல நமக்கு இருக்கும் ஈர்ப்புக்கு பெரிய காரணம்.

ஆனா ரொம்ப அதிசயமா அவர் படங்கள்ல அவரைதாண்டி வேற பாத்திரத்தின் மேல ஈர்ப்பு வந்தது இந்த படத்துலதான் நடந்தது அவரோட பையன் பாத்திரம். ரொம்ப சரியா உணர்ந்து பண்ணிருக்கான். அதும் அவன் அப்பாவும் இவனும் உரையாடும் காட்சிகள் எல்லாமே ரொம்ப யதார்த்தமா அமைய இந்த பையன் ரொம்ப பெரிய காரணம். நவாசுதினை பெருசா ரசிச்ச ஒரு இடம்.

தான் இருக்கும் சூழல், தன்னால் தன் பாஸ் (நாசர் சார்) நிலைக்கு போகமுடியாதுனு அவருக்கு நல்லாவே தெரியும். ஆனா அவர் தன்னோட பாஸ் ஒரு பிரஸ் காண்ப்ரண்ஸ் முடிச்சி எல்லோரும் கலைஞ்சி போனதும்.  அங்க அவரோட சீட்ல இவர் அமர்ந்து தனக்கு முன்னால இருக்கும் காலி இருக்கைகளை பார்க்கும் அந்த காட்சில லைட்டிங் வொர்க்கும் அட்டகாசபடுத்திருப்பாங்க.    

 suthir Mizra இயக்குனர். இவரோட Hazaaron Khwaishein Aaisi படத்துல KK மேனன் பாத்திரம் செம்மையா இருக்கும். அதே போல இந்த படத்தில் நவாசுதினும், அந்த பையனும். NETFLIXல் இருக்கு.    


Search This Blog