Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Wednesday, May 6, 2020

THE NIGHTINGALE 2018 – AUSTRALIAN – REAL REVENGE

பார்த்ததில் மிகவும் ரசித்தது: 164.

முன்பொரு காலத்திலே என துவங்கும் கதை. நகரில் இருந்து வெகுதொலைவில் காடுகளை ஒட்டி ராணுவத்தில் சேர பயிற்சி எடுக்கும் சிப்பாய்கள் மற்றும் அவர்களை பயிற்றுவிக்கும் உயரதிகாரிகளுக்கான விடுதி. அதில் அவர்களை மகிழ்விக்க பாடல்களை பாடவும் அவர்களுக்கான பணிவிடைகளை செய்ய. உயரதிகாரியின் குதிரையை பராமரிப்பவரின் மனைவி பணியமர்த்தபடுகிறாள்.


தங்கள் பணிக்கான எந்த அடிப்படை வரவுகளோ, கடந்த சில வருடங்களாக இங்கேயே இருப்பதால் தங்கள் சொந்த நாட்டிற்கு சென்று வர அனுமதியோ இதுவரை கிடைக்கவில்லை. அந்த அதிகாரியிடம் அதை பற்றி கேட்க, நடக்கும் வாதம் கைகலப்பில் முடிகிறது. அவளின் கண்முன்னே அவள் கணவன் கொலைசெய்யபட்டு, அவளின் கை குழந்தையும் கொலை செய்யபடுகிறது. மயக்கம் தெளிந்து அடுத்தநாள் விடியலில் இறந்த கைகுழந்தையுடன் நியாயம் கேட்க விடுதிக்கு வருபவளுக்கு அதிர்ச்சி.


அந்த அதிகாரிகள் தொலைவில் உள்ள நகரத்திற்கு சென்றதை அறிகிறாள். மேலும் அங்கு ராணுவத்தில் லேப்டினன்டாக பதவிஉயர்வு பெறபோவதால், இனி அவன் இங்கு வருவதற்கான சாத்தியங்கள் இருக்காது. தனது மொத்தமும் இழந்து, அதற்கு காரணமானவனை ஒரு கேள்விகூட கேட்கவழியில்லாத அந்த நொடியில் அவள் எடுக்கும் முடிவும், அதற்கு பின்னான கதையும் நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குபவை.


அந்த அதிகாரி மற்றும் அவரது குழுவினர், அந்த பெரும் வனத்தை கடந்தே நகரத்திற்கு செல்லவேண்டும். அதற்கு அங்கு உள்ள ஆதிவாசிகள் யாரேனும் துணையில்லாமல் செல்லமுடியாது. இவளுடன் பணிபுரியும் பெண்ணின் கணவன் மூலம் ஒருவனை துணைக்கு அமர்த்திகொண்டு தனியொருவளாக அவனை பழிவாங்க முடிவெடுக்கிறாள். இந்த காடுகளின் இடையே ஆட்கள் மரங்களை வெட்டி நகரத்திற்கு அனுப்பும் பணிகளும் நடைபெற்று கொண்டிருக்கும்.
தட்பவெப்பநிலையை பொறுத்து 3 நாட்கள் வரை எடுத்துகொள்ளும் அந்த பயணம். பணிவிடை செய்ய ஆட்கள். பாதுகாப்பிற்கு இரு வீரர்கள் என பயணிக்கும் அந்த அதிகாரியை, தனியொருத்தியாக பழிவாங்க கிளம்பும் கதை. இதைமட்டுமே கொண்டு பார்த்தால் ஒரு சராசரி கதைபோலவே தோன்றும்.


ஆனால் இதைதாண்டி இவளது பயணம் சொல்லி செல்லும் சங்கதிகள் ஏராளம். அந்த பழங்குடி வகுப்பை சேர்ந்த இவளது வழிகாட்டியுடன் வெள்ளையர்களுக்கு எதிரான இவர்களது சம்பாசனைகள். குறிப்பாக எந்த பெரிய துரத்தலோ, ஆயுதங்களுடன் மோதல், ஒன்றிரண்டு காட்சிகள் தவிர்த்து ரத்தமும் இல்லாத கதை. அன்று இந்த கறுப்பினத்தவர்கள் அங்கு எந்த வகைகளில் சிறுமைபடுத்தபட்டனர் என்பதை கொஞ்சம் (கோரமாக) நிஜமாகவும் தந்துள்ளனர்.



ஏதோ உலகப்படம். அரசியல் நிறைய உள்ள கதை வெறும் வார்த்தைகளிலே கதை முடிந்திடும் என நினைக்கும் அக்ஷன் த்ரில்லர் ரசிகர்கள். இக்கதையின் மூலம் பழிவாங்கல் என்பதால் நிச்சயம் ரசித்து பார்க்க நிறைய சங்கதிகள் உள்ளன.

4 comments:

Search This Blog