Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Thursday, May 14, 2020


பார்த்ததில் மிகவும் ரசித்தது: 165.

1989 களில் அதுவரை இல்லாதவகையில் பெரும்மழைக்கு முந்தைய கருமேகங்கள் மற்றும் இடி மின்னலும் சூழ்ந்த சிறுநகரம். கிடார் வாசிப்பதில் ஆர்வமுள்ள ஒரு சிறுவன்.  ஒவ்வொரு முறையும் தான் வாசிப்பதை வீடியோவாக பதிவு செய்து தொலைகாட்சியில் அதை கண்டுகளிப்பது அவனது பிரதான பொழுதுபோக்கு. அப்படியான ஒரு நாளில்  தனது பக்கத்து வீட்டிலிருந்து  ஏதோ வழக்கத்துக்கு மாறான ஓசை கேட்க. அங்கு செல்பவன், அந்த வீட்டு பெண்மணி சடலமாக கிடப்பதை கண்டு அதிர்கிறான். உடன் அவள் கணவன் கையில் ஆயுதத்துடன் இருப்பதையும் கண்டு, அங்கிருந்து தப்பிசெல்ல விரைகிறான். அந்த வீட்டிலிருந்து வெளியேறி சட்டென சாலையை கடக்கையில் எதிர்பாராவிதமாக வாகனத்தில் மோதி இறந்துவிடுகிறான்.


கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு பின் இப்படியான ஒரு அசாதாரண சூழல். 1989களுக்கு பின் இப்படியான Strom மீண்டும் நம்நகரில் FM எங்கோ ஒலித்துகொண்டிருக்க. அதே இடி மின்னலுடன் கருமேகம் சூழ்ந்த அந்த நகருக்கு குடிவந்த ஒரு தம்பதியர் தங்களது பொருட்களை ஒழுங்குபடுத்துவதில் தீவிரம் காட்டிவருகின்றனர். தங்களது பக்கத்து குடித்தனகாரர்களை இரவு விருந்துக்கு அழைக்க. அவர்கள் மூலம் 25 ஆண்டுகளுக்கு முன் இவர்களது வீட்டில் குடியிருந்த சிறுவன் இறந்ததகவலை அறிகின்றனர். அடுத்த நாளே அந்த சிறுவன் பயன்படுத்திய வீடியோ கேமரா மற்றும் அதே தொலைக்காட்சியும் அந்த வீட்டிலிருந்து அப்பெண்ணிற்கு கிடைக்கிறது.


நாம் ஒரு படம் பார்த்துகொண்டிருக்கும் போதே, அட யாருங்க இந்த இயக்குனர்னு தோணும்ல. அப்படி இவர் யாரென ஆராய்ந்ததில்  Oriol Paulo. இவருடையதே  Invisible Guest, The Body, மற்றும் Juliyas Eyes படங்கள். வெவ்வேறு சூழல்களில் இந்த படங்களை பார்த்து சிலாகித்து இருந்தாலும், தற்போது இந்த படங்களின் தனித்துவம் மற்றும் ஒற்றுமைகளை ஒப்பிட்டு பார்க்க தோண்றுகிறது. இதில் இறுதி இரண்டு படங்களும் இங்கு ரீமேக் செய்யபட்டு நல்ல வரவேற்பை பெற்றவையே. முதல் படம் தற்போதுவரை நிறைய படங்கள் அல்லது சில காட்சிகள் இந்த படத்தின் பாதிப்பில் வெளிவந்துள்ளது.
இவரது படங்கள் மற்ற நல்ல த்ரில்லர் கதைகளை போன்றே இருந்தாலும், அனைத்து கதைகளிலும் ஒரு கூடுதல் சூவரசியத்தை காணமுடியும். The Body யில் தொலைந்து போன ஒரு பிரேதத்தை தேடும் கதையில், அந்த பிரேதம் கிடைக்கவிடாமல் செய்யும் ஒரு கூடுதல் கதையும். Julias Eyes ல் பார்வையற்ற ஒரு பெண்ணின் தற்கொலை வழக்கை கிட்டத்தட்ட முடியும் தருவாயில். அதுகொலை என விசாரிக்கதுவங்கும் இறந்தவளின் சகோதரி. அந்த கூடுதல் சுவாரசியம் இந்த பெண்ணும் படிப்படியாக பார்வையை இழந்து வருபவள். அதாவது கொலையாளியை நெருங்க நெருங்க இவளின் பார்வை திறனும் குறையதுவங்கும். 

  
Invisible Guest ல் யாருமற்ற சாலையில் நிகழ்ந்த விபத்தை மறைக்கமுயலும் தம்பதியர். அந்த எக்ஸ்ட்ரா சர்ப்ரைஸ் இறந்தவனின் தந்தை இந்த கதைக்குள் வருவது. அப்படியான கூடுதல் சுவாரசியம் இந்த கதையிலும் உண்டு. 25 ஆண்டுகளுக்கு முன் இறந்த சிறுவனின் கேமரா & தொலைக்காட்சியை கொண்டு அவனுக்கு நடந்த விபத்திலிருந்து அவனை காப்பற்றிவிடுகிறார். அடுத்த விடியலில் இருந்து அவனது வாழ்க்கை மற்றும் இறந்த அந்த பெண்மணி பற்றிய கிளைக்கதை.


இதுமட்டுமல்லாது அந்த கூடுதல் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்தவனை அந்த காலத்தில் சென்று மீட்டுவந்தபின் இவளது வாழ்கையில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்களும். அதை அந்த சிறுவனை கொண்டே மீட்டிட இவளின் முயற்சிகளும் என வெகுசூவாரசிய கதைகளம். துவக்கத்தில் அந்த ஸ்ட்ரோம். நம்மை இந்த கதையோடு பயணபட பெரும் பங்குவகிப்பது. சற்று கவனகுறைவாக இருந்தாலும். அடுத்தடுத்து நிகழும் மாற்றங்களில் சில சூவாரசியங்களையும், கதையின் தொடர்ச்சியையும் தவறவிடும் வாய்ப்புகள் அதிகம். NETFLIXல் காண கிடைக்கிறது.

Wednesday, May 6, 2020

பார்த்ததில் மிகவும் ரசித்தது: 164.

முன்பொரு காலத்திலே என துவங்கும் கதை. நகரில் இருந்து வெகுதொலைவில் காடுகளை ஒட்டி ராணுவத்தில் சேர பயிற்சி எடுக்கும் சிப்பாய்கள் மற்றும் அவர்களை பயிற்றுவிக்கும் உயரதிகாரிகளுக்கான விடுதி. அதில் அவர்களை மகிழ்விக்க பாடல்களை பாடவும் அவர்களுக்கான பணிவிடைகளை செய்ய. உயரதிகாரியின் குதிரையை பராமரிப்பவரின் மனைவி பணியமர்த்தபடுகிறாள்.


தங்கள் பணிக்கான எந்த அடிப்படை வரவுகளோ, கடந்த சில வருடங்களாக இங்கேயே இருப்பதால் தங்கள் சொந்த நாட்டிற்கு சென்று வர அனுமதியோ இதுவரை கிடைக்கவில்லை. அந்த அதிகாரியிடம் அதை பற்றி கேட்க, நடக்கும் வாதம் கைகலப்பில் முடிகிறது. அவளின் கண்முன்னே அவள் கணவன் கொலைசெய்யபட்டு, அவளின் கை குழந்தையும் கொலை செய்யபடுகிறது. மயக்கம் தெளிந்து அடுத்தநாள் விடியலில் இறந்த கைகுழந்தையுடன் நியாயம் கேட்க விடுதிக்கு வருபவளுக்கு அதிர்ச்சி.


அந்த அதிகாரிகள் தொலைவில் உள்ள நகரத்திற்கு சென்றதை அறிகிறாள். மேலும் அங்கு ராணுவத்தில் லேப்டினன்டாக பதவிஉயர்வு பெறபோவதால், இனி அவன் இங்கு வருவதற்கான சாத்தியங்கள் இருக்காது. தனது மொத்தமும் இழந்து, அதற்கு காரணமானவனை ஒரு கேள்விகூட கேட்கவழியில்லாத அந்த நொடியில் அவள் எடுக்கும் முடிவும், அதற்கு பின்னான கதையும் நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குபவை.


அந்த அதிகாரி மற்றும் அவரது குழுவினர், அந்த பெரும் வனத்தை கடந்தே நகரத்திற்கு செல்லவேண்டும். அதற்கு அங்கு உள்ள ஆதிவாசிகள் யாரேனும் துணையில்லாமல் செல்லமுடியாது. இவளுடன் பணிபுரியும் பெண்ணின் கணவன் மூலம் ஒருவனை துணைக்கு அமர்த்திகொண்டு தனியொருவளாக அவனை பழிவாங்க முடிவெடுக்கிறாள். இந்த காடுகளின் இடையே ஆட்கள் மரங்களை வெட்டி நகரத்திற்கு அனுப்பும் பணிகளும் நடைபெற்று கொண்டிருக்கும்.
தட்பவெப்பநிலையை பொறுத்து 3 நாட்கள் வரை எடுத்துகொள்ளும் அந்த பயணம். பணிவிடை செய்ய ஆட்கள். பாதுகாப்பிற்கு இரு வீரர்கள் என பயணிக்கும் அந்த அதிகாரியை, தனியொருத்தியாக பழிவாங்க கிளம்பும் கதை. இதைமட்டுமே கொண்டு பார்த்தால் ஒரு சராசரி கதைபோலவே தோன்றும்.


ஆனால் இதைதாண்டி இவளது பயணம் சொல்லி செல்லும் சங்கதிகள் ஏராளம். அந்த பழங்குடி வகுப்பை சேர்ந்த இவளது வழிகாட்டியுடன் வெள்ளையர்களுக்கு எதிரான இவர்களது சம்பாசனைகள். குறிப்பாக எந்த பெரிய துரத்தலோ, ஆயுதங்களுடன் மோதல், ஒன்றிரண்டு காட்சிகள் தவிர்த்து ரத்தமும் இல்லாத கதை. அன்று இந்த கறுப்பினத்தவர்கள் அங்கு எந்த வகைகளில் சிறுமைபடுத்தபட்டனர் என்பதை கொஞ்சம் (கோரமாக) நிஜமாகவும் தந்துள்ளனர்.



ஏதோ உலகப்படம். அரசியல் நிறைய உள்ள கதை வெறும் வார்த்தைகளிலே கதை முடிந்திடும் என நினைக்கும் அக்ஷன் த்ரில்லர் ரசிகர்கள். இக்கதையின் மூலம் பழிவாங்கல் என்பதால் நிச்சயம் ரசித்து பார்க்க நிறைய சங்கதிகள் உள்ளன.

Sunday, May 3, 2020

பார்த்ததில் மிகவும் ரசித்தது: 163.

காதலர்கள் அவரவர் கணவன்/மனைவிக்கு தெரியாமல் ஒரு Trip முடித்து மகிழ்ச்சியாக திரும்பி கொண்டிருக்கின்றனர். ஒரு மைக்ரோ வினாடியில் சட்டென பாதையை கடக்கும் மானை தவிர்க்க, இடபக்கம் நின்றிருத்த வாகனத்தில் மோதுகிறார். அதிவேகத்தில் மோதியதால் அதிலிருந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிறிழக்கிறார்.


போக்குவரத்து ஏதுமில்லா சாலை. காவல்துறைக்கு தகவல் தெரிவித்தாலும், அவரவர் குடும்பங்களுக்கு இவர்களது உறவு தெரியவரும். இந்த சூழலில் காதலர்கள் அங்கிருந்து எந்த சுவடும் இல்லாமல் கிளம்ப முடிவெடுக்கிறார்கள். அவர்களது வாகனம் கிளம்ப மறுக்க, உச்சகட்ட படபடப்பில் இந்த சூழ்நிலைக்கு காரணமாக ஒருவர் மற்றவரை குறைகூறி அவர்களது வாதம் வலுக்கும் சூழலில். அந்த மலைபாதையில் கீழிருந்து ஒரு வாகனம் மேல்நோக்கி வருவதை இருவரும் பார்கின்றனர்.


ஹோட்டல் அறையில் ஏதோ ஒலிகேட்க்க. ஊழியர்கள் நீண்டநேரம் அழைத்தும் உள்ளிருந்து எந்த பதிலும் வராததால் காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கபடுகிறது. உள்ளே ஒரு பெண் இறந்துகிடக்க, அவளது காதலன் கைது செய்யபடுகிறான். தான் இந்த கொலையை செய்யவில்லை எனவும். தன்னை யாரோ தாக்கியதாகவும். தான் மயக்கம் தெளிந்து பார்க்கையில் தனது காதலி இறந்தது தெரியவந்ததாகவும் உறுதியாக கூறுகிறார். ஆனால் அறையின் எந்த ஜன்னல் மற்றும் கதவும் இவர்களது சாவியை கொண்டே திறக்கயியலும். AC வெண்டிலேட்டர் மற்றும் ட்ரைனேஜ்வரை சோதித்த காவல்துறை உறுதியாக இந்த அறைக்கு யாரும் வந்து செல்லவில்லை என அறிக்கை தாக்கல் செய்கின்றனர்.
முதல் பத்தியில் குறிப்பிட்ட அந்த திடுக்கிடல் சம்பவத்திலிருந்து அவர்கள் எவ்வாறு மீண்டனர் என்பது மட்டுமல்ல இந்த கதை. அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து அவர்கள் செய்த சம்பவங்கள். நிச்சயம் இவர்கள் மீளவே முடியாது என்ற சூழலையும் கதையின் துவக்கத்திலே நமக்கு உணர்த்திவிடும். சரி, அனைத்து பக்கங்களும் அடைபட்ட இதிலிருந்து வெளியேவர முதலில் தாங்கள் சந்தித்து கொள்வதையும், தொலைபேசி உரையாடலையும் தவிர்க்கின்றனர்.



இதுவரை ஒரு நல்லபடம் பார்க்கும் உணர்விலிருக்கும் நமக்கு அடுத்தடுத்த காட்சிகள் வேறொரு தளத்திற்கு எடுத்து சென்றிடும். அதாவது மீண்டும் இவர்கள் இருவரும் சந்தித்தே ஆகவேண்டிய சூழல். இதுவரை இவர்கள் சட்டத்தின் பிடியில் சிக்காமல் தப்பியதும். இந்த இக்கட்டான நிலையில் மீண்டும் இவர்கள் சந்திக்கவேண்டிய திரைக்கதையும் பிரமிப்பு. இங்கு பகிரப்பட்டது கிட்டத்தட்ட முழு கதையும். ஆனால் நாம் திரையில் பார்க்கையில் இந்த அனைத்து காட்சிகளும் மீண்டும் நமக்கு அதே பிரமிப்பை ஏற்படுத்தும். காரணம் கதை இதோடு மட்டுமில்லாமல் தொட்டு செல்லும் இதர சம்பவங்களால். சமீபமாக இந்த இயக்குனரின் படங்கள் இந்திய மொழிகளில் ரீமேக் செய்யபட்டு வருவதற்கு மிகமுக்கிய காரணம் இவரின் இந்த படைப்பே. Netflix ல் கிடைக்கிறது.

Search This Blog