Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Tuesday, September 18, 2018



பார்த்ததில் மிகவும் ரசித்தது: 134.


9௦ களில் GULF நாடுகளை நோக்கி படையெடுக்கும் கலாசாரம் துவங்கிய காலகட்டமே இப்படத்திற்கான களம். கணவன் பிழைப்பிற்கு வெளிநாடு செல்ல, மும்பையில் பெரும் இரைச்சல்களுக்கிடையே வெறும் தனிமையை மட்டுமே துணையாக கொண்டு வாழும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பெண். தன் ஆடைகளை தைய்க்கும் தையல்கார இளைஞன் மீது ஏற்படும் ஈர்ப்பையும் தாண்டிய ஒரு உணர்வு. தன்னில் வயதிலும் தோற்றத்திலும் சற்று மூத்தவள். அதற்க்கான இடைவெளியுடனும் படத்தின் துவக்கத்தில் ஆரம்பமாகும் வெறும் சம்பாசனைகள் இறுதிவரை வெறும் சம்பாசனைகளாகவே இருந்தும், இவர்கள் ஒரு முழு காதல் கதையின் அனைத்து உணர்வுகளையும் நம்முள் கடத்தியது எப்படி??..

வெறும் தனக்கான ஆடையை தைக்கும் விதம் குறித்த பேச்சில் துவங்குகிறது இக்கதை. தனது வாடிக்கையாளர் மற்றும் நம் பகுதியில் வசிக்கும் குடும்பத்தாருடன் பழக்கமான பெண். இந்த அளவுகோலிலே அவனது பேச்சும் இதனில் அவளது சிறு தடுமாற்ற பார்வைகளும், சிறு தினரல்களுடன் அவளது பேச்சும் முதல் நிமிடத்திலே துவங்கிவிட. அவனது பேச்சிலும் அந்த தடுமாற்றம் தொற்றி கொள்கிறது. பின் அவளது நடுக்கத்திற்கு இடையே அரைகுறை புரிதலுடன் தேனீர் அருந்த சம்மதிக்கிறான். தேநீர் தயாரிப்பிற்காக அவள் உள்ளே செல்ல அவள் அருகமையில் இருந்து விடுபட்டு தன்னை அந்த சில நிமிடங்களில் ஆசுவாசபடுத்தி கொண்டவனின் அதன் பின்னான பேச்சில் துளியும் நடுக்கமோ, தயக்கமோ இருக்காது.

தேநீரையும் ரசித்து குடித்தவன். தனது சகோதரன் அடுத்த வாரங்களில் RIYADH செல்லவிருப்பதால் தங்கள் கணவருக்கு ஏதேனும் கொடுத்து அனுப்புமாறும் தெரிவித்து விட்டு நகர்கிறான். அவனுக்கு பின்னே சென்று கதவடைத்தவள். மீண்டும் தன் தனிமை உலகத்திற்குள் நுழைகிறாள்.  தனது தடுமாற்றத்தை அவன் கண்கூடாக கண்டுகொண்டதை உணர்கிறாள். எப்பொழுதும் சற்று வேகமாக எந்த பணியையும் செய்பவள். சிறு குழந்தையை குளிப்பாட்டுவது போல அவன் தேநீர் அருந்திய கோப்பையை சுத்தம் செய்கிறாள். தன் நிலையை தினமும் நடுநிசி வரை ஓயாமல் கேட்கும் இரைச்சல் இடையே நினைத்தபடியே தனது தொழுகையை துவக்குகிறாள். பின்னணியில் மெலிதாக துவங்கும் வயலின் அவளின் தொழுகை நிறைவடையும் பொழுதில், நம் மனம் முழுக்க அதனுள் லயிக்கும் நொடியில் அவளின் விசும்பல் பெரும் அழுகையாக மாற நாம் அந்த பின்னணி வயலினை நிறுத்தி அவளை எப்படியேனும் காத்திட இயலாதா என எண்ணவைக்கும். நம்மை லயிக்க செய்த அந்த இசை. நமக்கு இது நாம் வேறுவிதமாக நாம் கணித்த கதையல்ல என்பதை ஆணித்தரமாக கூறி செல்லும்.

தன் கணவனுக்கானதை வாங்க கடைவீதிக்கு செல்பவள். அவன் தன்னை பின் தொடர்வதை உறுதிபடுத்தி கொண்டு பதறி மீண்டும் கூடடைகிறாள். பின்னும் அவன் பின்னே தொடர்கிறானா எனும் எதிர்பார்ப்பும், தன் நினைப்பை அவன் அறிந்திட நேருமோ என்ற தயக்கமும். மிக மெலிதாக நம் நிலையை அவன் உணர்ந்திட மாட்டானா என்றும் எதிர்பார்கிறாள்.. தான் அவளை பின்தொடர்ந்ததும், தன்னை அவள் கண்டுகொண்டதையும் உணர்ந்தவன். அவனுக்கான அடுத்த சந்திப்பிற்கு ஆயத்தமாகிறான். ஆம் அவளுக்காக ஆடையை மிக நேர்த்தியாக அப்பொழுதே தைய்க்க துவங்குகிறான். ஒரு வாரத்திற்குள் கொடுக்க வேண்டிய ஆடையை ஒரே இரவில் முடித்து அடுத்த நாள் விடியலில் அவளுக்கான காலை சிற்றுண்டியுடனும் ஆடையுடனும் அவளை சந்திக்க இருக்கிறான். இந்த யோசனை ஏதுமின்றி அவள் அந்த இரவிலே கரைந்திருக்கிறாள். இது இப்படத்தின் முதல் பத்து நிமிடத்திற்கான காட்சி மட்டுமே.

முழுக்க இந்த இரு கதாபாத்திரங்களும், அந்த இரைச்சலான பம்பாய் நகர வீதியும். இவர்களுடனே நம்மை பிடித்து வைத்திருக்கும் வயலின் மற்றும் புல்லாங்குழலின் பிண்ணனியும். எந்த காதல் ரசம் பூசிய பாசாங்கில்லாத வெறும் உரையாடல்கள் மட்டுமே. அதன் வழியே அவர்களின் எண்ண ஓட்டங்களை உணர்வுகளாக்கி நமக்கும் கடத்தியது என சராசரியாக நாம் பார்த்த, ரசித்த கதைகளில் உணர்ந்த பல... இப்படத்தில். அதில் விசேஷம் அவற்றை எந்த அலங்காரங்களும் அழகிய நாயகிகள் அறிந்த முகங்கள் என எதுமில்ல ஏதோ நாடக ஒத்திகை போன்ற இப்படத்தில் உணர்செய்தது ஒன்றே இப்படத்தை ரசிக்க போதுமானதாகும்.


TANUJA CHANDRA இயக்குனர். DIL TO PAGAL HAI படத்திக்கு திரைக்கதை இவர்தான். ஒரு மணி நேரத்திற்கும் குறைவான படம். ஆனால் அதை உணர செய்யாத முழு காதல் படம் பார்த்த உணர்வை கொடுக்கும் . 

Sunday, September 2, 2018




பார்த்ததில் மிகவும் ரசித்தது: 133.

எந்த திறமையான இயக்குனரும் அனைத்து களங்களிலும் தனது  பாணியில் படைப்புகளை கொடுக்கயியலும் சில களங்களை தவிர. அதில் மிக முக்கிய களம் SPORTS GENRE. காரணம் அவை இதற்க்கு முன் நம்மிடையே உருவாக்கி வைத்திருக்கும் பிம்பம். ஏழ்மையான இளமை காலம். தனது முயற்சிக்கு தனது குடும்பமும் சமூகமும் எதிராக இருப்பது. இடையில் வரும் காதல். (பெரும்பாலும்) அதை தனது லட்சியத்திற்காக தியாகம் செய்வது. உயிரை வருத்தி தனது லட்சியத்திற்காக உடலையும், மனதையும் தயார் செய்வது. கிட்டத்தட்ட அனைத்தையும் இழந்து இறுதியில் வெற்றி பெறுவது. இந்த வகைகளில் ஏதேனும் மூன்று, நான்கு கண்டிப்பாக அனைத்து SPORTS GENRE கதைகளிலும் இருந்தே ஆகவேண்டும். அப்படிப்பட்ட களத்தை தனக்கான பாணி கதை சொல்லல் மூலம் இந்திய சினிமாவை கவனம் ஈர்த்த ஒருவர் தொடுகிறார். இவரும் இவ்விதிகளுக்கு உட்பட்டு மட்டுமே இக்கதையை கையாள முடியும் என்ற எண்ணத்தை கதை துவங்கிய முதல் நிமிடத்திலேயே அடித்து நொறுக்குகிறார்.

இந்த பாணி கதையில் இவருக்கான STYLE கொண்டு வர வாய்ப்பே இருக்காதே. அதையும் கதையின் போக்கை எங்கேயும் மாற்றாமல் வெகு இயல்பாக உள்நுழைக்கிறார். சொல்லப்போனால் துவக்க அந்த கலவர காட்சிகளில் இருந்தே படம் துவங்குகிறது. இதுவரை அவர் அதிகம் பயன்படுத்தாத காதலை அதன் பின் இக்கதையினுள் கொண்டுவருகிறார். அதன் பின்னான கதை அந்த சாதிய கலவரமும், குறுகுறு காதலுடனும் + BOXING உடனும். இந்த பாணி கதைகளுக்கே துளியும் சம்பந்தம் இல்லாத திடுக் கிளைமாக்ஸ் உடன் முடிகிறது. இதில் அவர் எங்குமே தனது பாணியையும் SPORTS GENRE க்காக விட்டு தரவில்லை. அதே போல இந்த விளையாட்டிற்கு உண்டான மரியாதையையும் குலைக்கவில்லை. சொல்ல போனால் அதே பழைய பாணியை காட்டிலும் இவ்விளையாட்டிற்கு அதிக முக்கியத்துவமே கொடுத்துள்ளார்.

அதே நடுத்தர வர்கத்தை சேர்ந்த நாயகன். தனது ஒரே கனவான NATIONAL LEVEL BOXING TOURNAMENT ல் வெற்றி பெற வேண்டி தன்னை தயார் செய்கிறான். ஜாதி வெறி பிடித்த தனது பயிற்சியாளரிடம் ஏற்படும் சிறு மோதலால் அங்கிருந்து வெளியேறுகிறார். இதில் அவரின் குடும்ப பெண்ணுடனே காதல். அதன் பின் DISTRICT TOURNAMENT முதல் NATIONAL வரை அவர் சந்திக்கும் பிரச்சனைகள். அதில் அவர் வெற்றி வாகை சூடினாரா? என்பது  மட்டுமே கதையல்ல. அந்த பயிற்சியாளரால் ஏற்படும் தடைகளும் அதிலிருந்து இவர் அடுத்தடுத்த படிகளுக்கு செல்வதுமே இக்கதையின் சுவாரயசித்திற்கு மிக முக்கிய காரணம்.
மற்ற வகை கதைகளை காட்டிலும் அதிகபட்ச உழைப்பை இவ்வகை கதைகள் நாயகனிடமிருந்து எடுத்து கொள்ளும். அதை GANGS OF WASSEPPUR மற்றும் UGLY படங்களில் தலை காட்டிய VINEETH KUMAR SINGH இப்படத்திற்காக சற்று கூடுதலாகவே வழங்கியுள்ளார். இயல்பிலே நல்ல கட்டுமஸ்த்தான தோற்றம். இதில் BOXING கதைக்காக கூடுதல் முருக்கேறியவர். அவரை ஒரு சிறு சிரிப்பில், ஒரு தெனாவட்டு பார்வையில், தெற்று பல் தெரிய முகம் சுளிக்கும் அழகில் காதலில் விழவைத்தால் அது பார்வையாளனால் நம்பமுடியாது என நினைத்தாரோ என்னவோ ZOYA HUSSAIN எனும் அழகியை தருவித்திருக்கிறார். இயல்பிலே அந்த கண்களில் திமிரும், எகத்தாளமும் நிரம்பி வழிகிறது. இப்பொழுது நம் நாயகன் முதல் பார்வையிலே காதலில் விழுகிறான்.

தனியே தன் சகோதிரியின் கணவரோடு உரையாடுகையில் தன்னை எதிர்த்து பேசினார் என்பதற்காக வஞ்சம் வைத்து பழிவாங்கும் வில்லனாக அந்த பயிற்சியாளர் வேடத்தில் JIMMY SHEIRGIL. இதற்க்கு முன் A WEDNESDAY, MY NAME IS KHAN, MUNNABHAI போன்ற பெரிய படங்களில் தலை காட்டினாலும் பெரிதும் வெளியில் சோபிக்காதவ்ர். அஞ்சாதே மூலம் தன்னை வேறு பாணியில் நிலைநிறுத்தி கொண்ட பாண்டியராஜனை போன்று. இந்த படம் இவரை வேறு தளத்திற்கு அழைத்து செல்லும். இக்கதையின் அனைத்து சுவாரசிய காட்சிகளுக்கும் சொந்தகாரனாக. மொத்த பார்வையாளனின் கவனமும் நாயகனை தாண்டி இவர் மீதே நிலைத்திருக்க செய்யும் உழைப்பை (எனக்கு தெரிந்து) முதன்முறை இக்கதைக்காக வழங்கிஉள்ளார்.

இப்படியான கலவர கதையில் SPORTS GENRE களமாக தேர்ந்தெடுத்ததற்கே இயக்குனருக்கு மிகபெரும் பாராட்டு. அதிலும் காதலை இந்த களத்தில் பயன்படுத்திய அளவு இந்த வகை படங்களில் இதற்க்குமுன் பார்த்ததில்லை. வழக்கமான இந்த இயக்குனரின் படங்களில் LIGHTING, மிரட்டல் CAMERA ANGLES, SHARP EDITING, BGM என TECHNIAL சங்கதிகள் அனைத்தும் இப்படத்திலும் மிகசிறப்பாக கையாளப்பட்டுள்ளது. அந்த இயக்குனர். (இந்த பயிற்சியாரின் நடவடிக்கைகளும், இப்படத்தின் காதல் காட்சிகளும் திட்டமிட்டே விவரிக்கபடவில்லை.)


“அனுராக் காஷ்யப்”

TRAILER LINK:

https://www.youtube.com/watch?v=fl3gun0J8XM

Search This Blog