பார்த்ததில் மிகவும் ரசித்தது – 176.
உணர்வுகளுக்கு அதிகம் மதிப்பளிக்க கூடிய படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர்கள். அனைத்து தொழில் நுட்பங்களும் கைவரபெற்றவர்கள். கதைக்கு தேவைபடாத எந்த தொழில் நுட்பங்களையும் அந்த படத்தின் விளம்பரங்களுக்காக பயன்படுத்தாதவர்கள். அதே தேவைபடும் பட்சத்தில் அதை உலகமே வியந்து பார்க்கும் வண்ணம் படைப்பதில் வல்லவர்கள். பெரும்பாலும் இவர்களுடைய ஆக்சன் பேஸ் படங்களுக்கே உலகெங்கும் மிக அதிக பார்வையாளர்களை பெற்றிருந்தாலும், உணர்வுகளை வெண்மேகங்களை போல பரிசுத்தமாக நிறுவுவதில் கெட்டிக்காரர்கள்.
1950 வருடம் வட மற்றும் தென் கொரியர்களுக்கு இடையே கிட்டத்தட்ட மூன்று
வருடங்கள் நடைபெற்ற போர் காலகட்டமே இப்படத்திற்கான களம். இதில் ஒரு குடும்பம், அதில்
இளைய மகன் வலுகட்டாயமாக அப்போரில் பங்குபெற இழுத்து செல்லபட. அவனை அழைத்து வர
சென்ற அண்ணனும் உடன் செல்லவேண்டிய சூழல். படம் துவங்கி கிட்டத்தட்ட இருவது
நிமிடங்களுக்கு பின் வரும் இந்த காட்சிக்கு முந்தைய கணங்களே இப்படத்திற்கான
அச்சு.
அதில்
இந்த குடும்பத்தினர் அவர்களுக்குள்ளான பிணைப்பு. அது இந்த கதை ரத்தம், துப்பாக்கி,
உடல் அங்கங்களை இழந்து துடிக்கும் சக வீரர்களின் மரண ஓலங்கள். கூட்டம் கூட்டமாக கொல்லபடும்
பொதுமக்கள், குண்டு மழை பொழியும் விமானங்கள் என அடுத்த இருவது நிமிடங்களில் கதை
வேறொரு வண்ணத்திற்கு மாறினாலும் துவக்கத்தில் இவர்கள் பதித்த ஈரம் கதை நெடுக நம்
மனதை அசைத்தபடியே அழைத்து செல்லும்.
இறுதி
இருவது நிமிடங்கள் இந்த கதை முடிவுபெறுவதும் இந்த ஈரத்தில்தான். இடையே கிட்டத்தட்ட
நூறு நிமிடங்கள் இந்த கதை பயணபடுவது போர்களத்தில் மட்டுமே. அதில் ஒரே பட்டாலியனில்
சேர்ந்தே போரை எதிர்கொள்ளும் இந்த இருவருக்கிடையேயான மோதல், பிரிவு, வலி,
மனக்குமுறல் என அனைத்து உணர்வுகளையும் அச்சு அசல் பிரதிபலித்த வகையில் இது தவிர்க்க
இயலாத மிக முக்கிய படமாகிறது.
அதும்
இன்றைய காலகட்டத்தில் கதையை துவக்கி பின்னோக்கி கதையை கொண்டுசென்ற பாணி பார்வையாளர்களை
ஒரு எதிர்பார்ப்புடன் கதையுடன் பயணப்பட வைத்துள்ளது. வெறும் உணர்வுகளை பிரதானமாக
கொண்ட கதை மட்டுமல்ல. கமெர்ஷியல் ரசிகர்களும் கொண்டாடி பார்க்க வேண்டிய படமிது.
முன்பே
கூறியபடி (கதைக்கு தேவைப்படும் பட்சத்தில்) தொழில்நுட்பத்தில் உட்சம்
தொட்டுள்ளனர். படம் வெளிவந்து இருவது
வருடங்களுக்கு பின் இப்பொழுதும் இதன் பிரமாண்டம் நம்மை நிச்சயம் ஆச்சர்யபடுத்தும்.