பார்த்ததில் மிகவும் ரசித்தது: 124.
நம் கனவுகள் நோக்கிய பயணத்தில் ஏற்படும் பெரும் தடைகளும், சிரமங்களும் நம்மை அயர்ச்சியடைய செய்வதில்லை. காரணம் நாம் அனைவருமே நமக்கு விருப்பமான அப்பாதையில் பயணிக்கவே விரும்புகிறோம். ஆனால் அப்பாதையில் பயணிக்கும் வாய்ப்பு வெகுசிலருக்கு அமைவதே கடினம். மேலும் அதில் வெற்றி பெரும் வாய்ப்பு அதில் ஒரு சதவிகிதத்தினருக்கு கிடைப்பதே அரிது. இவ்வாறு அரிதிலும் அரிதாக அப்பயணத்தில் வெற்றி பெற்ற சிலரது கதைகளை மட்டுமே பார்த்து வரும் நமக்கு. அவ்வாரான பயணத்தில் தனது கனவுகளை இழந்து நிராதரவான பெரும்பாண்மையோரது கதைகள் வருவதுமில்லை. அவ்வாறு வந்தாலும் அவை நம் நினைவில் இருப்பதுமில்லை.
கடந்த திரைப்படத்தில் 2000+ கோடிகளை வசூலில் குவித்த நாயகனால் கூட வெற்றி பெற்றவர்களின் கதைகளை மட்டுமே எடுக்கும் நிலையிருப்பின், சாமானிய படைப்பாளிகளின் நிலையை சொல்லவேண்டியதில்லை. அதற்க்கு பிரதான காரணமாக பார்க்கப்படுவது. நம் அனைவருக்கும் கனவுகள் இருப்பினும், நம்மில் பெரும்பாலோருக்கு அதை நோக்கி பயணிப்பதற்கான வாய்ப்பு அமைவதில்லை. அவ்வாறு அமையப்பெற்ற பலராலும் தங்கள் கனவு வாழ்க்கையை அடையமுடிவதில்லை. ஆதலாலே வாழ்க்கை முழுக்க வெறும் நினைவுகளாக மட்டுமே நம் கனவுகளை சுமந்து திரியும் நம்மால் கதைகளில் கூட அக்கனவில் தோல்வியுற்றவனை காண விரும்புவதில்லை போலும்.
இக்கதையிலும் நடுத்தர வர்கத்தில் பிறந்து, குடும்பத்தின் ஒத்துழைப்பும் இல்லாமல், பலதரப்பட்ட இன்னல்களை கடந்து இறுதியில் வெற்றிபெறும் தீவிர இஸ்லாமியத்தை பின்பற்றும் குடும்பத்தின் பதினைந்து வயது மகளுடைய கதைதான். இப்பத்தியை படித்தவுடன் யூகங்களாக தாங்கள் நினைக்கும் பலகாட்சிகள், கிட்டத்தட்ட அதே வசனங்களுடனும் உள்ள திரைப்படமே இது. இவ்வாறான கதைகளில் அந்த நபரது கனவு துறைசார்ந்த வேறுபாடுகள் தவிர்த்து பெரும்பான்மையான காட்சிகள், ஒருவாறே இருக்கும்படியான மனநிலையை மட்டுமே பார்வையாளர்களுக்கு கொடுக்கும். இவை இந்திய திரைப்படங்கள் மட்டுமின்றி, பெரும்பாண்மையான உலக திரைப்படங்களும் இதில் அடக்கம்.
இவ்வாறு இருப்பினும் இவற்றில் பெரும்பான்மையான படங்கள் வெற்றிபெற காரணங்கள். வெற்றிபெற்ற பிரபலங்களின் உண்மை கதையை தழுவி எடுக்கும் திரைப்படங்கள், அந்த பிரபலங்களினால் வெற்றிபெறுவதும், மேலும் நம்மால் அடையயிலாத இவ்வாறான வெற்றியை திரையில் பார்க்கும் பார்வையாளன் அப்பாத்திரத்துடன் தன்னை பொருத்தி பார்ப்பதும் கூட ஒருவகையில் காரணமாக அமையலாம். புது காட்சியமைப்புகள் மற்றும் வசனங்கள் மூலமே இவ்வாறான கதைகளில் பார்வையாளனுக்கு வித்தியாசத்தை உணர்த்த இயலும்.
நம் கனவுகள் நோக்கிய பயணத்தில் ஏற்படும் பெரும் தடைகளும், சிரமங்களும் நம்மை அயர்ச்சியடைய செய்வதில்லை. காரணம் நாம் அனைவருமே நமக்கு விருப்பமான அப்பாதையில் பயணிக்கவே விரும்புகிறோம். ஆனால் அப்பாதையில் பயணிக்கும் வாய்ப்பு வெகுசிலருக்கு அமைவதே கடினம். மேலும் அதில் வெற்றி பெரும் வாய்ப்பு அதில் ஒரு சதவிகிதத்தினருக்கு கிடைப்பதே அரிது. இவ்வாறு அரிதிலும் அரிதாக அப்பயணத்தில் வெற்றி பெற்ற சிலரது கதைகளை மட்டுமே பார்த்து வரும் நமக்கு. அவ்வாரான பயணத்தில் தனது கனவுகளை இழந்து நிராதரவான பெரும்பாண்மையோரது கதைகள் வருவதுமில்லை. அவ்வாறு வந்தாலும் அவை நம் நினைவில் இருப்பதுமில்லை.
கடந்த திரைப்படத்தில் 2000+ கோடிகளை வசூலில் குவித்த நாயகனால் கூட வெற்றி பெற்றவர்களின் கதைகளை மட்டுமே எடுக்கும் நிலையிருப்பின், சாமானிய படைப்பாளிகளின் நிலையை சொல்லவேண்டியதில்லை. அதற்க்கு பிரதான காரணமாக பார்க்கப்படுவது. நம் அனைவருக்கும் கனவுகள் இருப்பினும், நம்மில் பெரும்பாலோருக்கு அதை நோக்கி பயணிப்பதற்கான வாய்ப்பு அமைவதில்லை. அவ்வாறு அமையப்பெற்ற பலராலும் தங்கள் கனவு வாழ்க்கையை அடையமுடிவதில்லை. ஆதலாலே வாழ்க்கை முழுக்க வெறும் நினைவுகளாக மட்டுமே நம் கனவுகளை சுமந்து திரியும் நம்மால் கதைகளில் கூட அக்கனவில் தோல்வியுற்றவனை காண விரும்புவதில்லை போலும்.
இக்கதையிலும் நடுத்தர வர்கத்தில் பிறந்து, குடும்பத்தின் ஒத்துழைப்பும் இல்லாமல், பலதரப்பட்ட இன்னல்களை கடந்து இறுதியில் வெற்றிபெறும் தீவிர இஸ்லாமியத்தை பின்பற்றும் குடும்பத்தின் பதினைந்து வயது மகளுடைய கதைதான். இப்பத்தியை படித்தவுடன் யூகங்களாக தாங்கள் நினைக்கும் பலகாட்சிகள், கிட்டத்தட்ட அதே வசனங்களுடனும் உள்ள திரைப்படமே இது. இவ்வாறான கதைகளில் அந்த நபரது கனவு துறைசார்ந்த வேறுபாடுகள் தவிர்த்து பெரும்பான்மையான காட்சிகள், ஒருவாறே இருக்கும்படியான மனநிலையை மட்டுமே பார்வையாளர்களுக்கு கொடுக்கும். இவை இந்திய திரைப்படங்கள் மட்டுமின்றி, பெரும்பாண்மையான உலக திரைப்படங்களும் இதில் அடக்கம்.
இவ்வாறு இருப்பினும் இவற்றில் பெரும்பான்மையான படங்கள் வெற்றிபெற காரணங்கள். வெற்றிபெற்ற பிரபலங்களின் உண்மை கதையை தழுவி எடுக்கும் திரைப்படங்கள், அந்த பிரபலங்களினால் வெற்றிபெறுவதும், மேலும் நம்மால் அடையயிலாத இவ்வாறான வெற்றியை திரையில் பார்க்கும் பார்வையாளன் அப்பாத்திரத்துடன் தன்னை பொருத்தி பார்ப்பதும் கூட ஒருவகையில் காரணமாக அமையலாம். புது காட்சியமைப்புகள் மற்றும் வசனங்கள் மூலமே இவ்வாறான கதைகளில் பார்வையாளனுக்கு வித்தியாசத்தை உணர்த்த இயலும்.
இவ்வாறான நபர்கள் தங்கள் லட்சியத்திற்காக எதையும் இழக்க தயாராக இருப்பர். மேலும் தங்கள் நடவடிக்கைகள் தவிர்த்து மற்றவர்களின் மேல் பெரிய ஈடுபாடு இல்லாமல் கிட்டத்தட்ட சுயநலவாதிகள் போல. ஆனால் அதை மிகசரியாக பயன்படுத்திகொண்டது இந்த திரைப்படமே. மேலும் அப்பெண்ணின் கண்டிப்பான தந்தை மற்றும் மகளுக்காகவே உருகும் தாய் பாத்திரங்கள் என அனைத்தும் மிகசரியாக அமைந்த திரைப்படம். அப்பெண்ணின் பள்ளி பருவ கனவுகள், குழந்தைதன காதல், தனது பாடகி கனவிற்கான முயற்சிகள். எளிதில் மற்றவரை தவறாக யூகிக்கும் பண்பு, எதற்காகவும் தனது லட்சியத்தை இழக்க கூடாத திடம். தம் குடும்ப கட்டுபாடிற்க்காக தனது கனவையும் இழக்க துணியும் மனம். என பதினைந்து வயது பெண்ணிற்கான முழு வாழ்வையும் இன்சியா பாத்திரத்தில் வரும் ஜைராவசீம் வாழ்ந்துள்ளார்.
தனக்கான அனைத்து காட்சிகளிலும், தன்னை மட்டுமே முன்னிலைபடுத்தும் முழுக்கதை என்பதை உணர்ந்து தனது ஆகசிறந்த பங்களிப்பை கொடுத்துள்ளார். அனைத்து பார்வையாளனையும் திருப்திபடுத்தும் இந்த வகை படங்கள் சற்று அபூர்வமாகவே வரும். தவறவிடக்கூடாத படவரிசையில் இதை சேர்த்துகொள்ளாவிடினும், எவரையும் அதிருப்திபடுத்தா வகையை சார்ந்த இப்படத்தை நம் எந்த மனநிலையிலும் காணயியலும்.