Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Saturday, August 25, 2018




பார்த்ததில் மிகவும் ரசித்தது: 132.

எந்த படமும் பார்ப்பதற்கு முன் அந்த படத்தை பற்றிய அபிப்பிராயம் நம் மனதில் பெரும்பாலும் இருக்கும். அதாவது இதன் கதை இவ்வாறே இருக்கும் என்ற யூகம். அல்லது படம் துவங்கிய சில நிமிடங்களில் இந்த கதையை இவ்வாறே நகர்த்தி செல்ல இயலும் என்பது போல அந்த படமும் அவ்வாறே அமையும் பட்சத்தில் கொஞ்சம் தோய்வான திரைக்கதையோடே இருப்பினும் அவை நம் மனதுக்கு சற்று நெருக்கமானதாக உணர செய்யும். மாறாக அப்படம் நம் யூகங்களுக்கு அப்பாற்பட்டு வேறொரு தளத்திற்கு கொண்டு செல்லும் மாய விந்தைகள் நிகழ்த்தினாலும் அவை பார்வையானின் மனதிற்கு நெருக்கமாவது சற்று கடினம். இக்கதையும் அவ்வாறே நம்யூகத்திலிருந்து வெளியேறி தலையில் நடந்து காட்டும் பிரயாத்தனங்கள் ஏதும் பண்ணாமலே சட்டென நம் மனதிற்கு நெருக்கமானது.


வேறெந்த எதிர்பார்ப்பில் வரும் பார்வையாளனை விட காமம் மேலோங்கிய கதையென வருபவனுக்கு ஒரு மூன்று காட்சிகளேனும் அவனுக்கானதாக இருந்தே ஆகவேண்டும். அதைதவிர்த்து`எந்த குட்டி கரணமும் அங்கு செல்லுபடியாகாது. அவ்வாறான பார்வையாளனாகவே இக்கதைக்குள் நானும் நுழைந்தேன். என்னுடைய எந்த யூகங்களையும் ஒரு பத்து சதவீதத்திற்கு மேல் பூர்த்தி செய்யாத இக்கதை மனதிற்கு நெருக்கமானது மட்டுமின்றி. மனதில் சம்மணமிட்டு அமர என்ன காரணம்.


சிறைச்சாலை நோக்கி விரையும் வாகனம். கைதிகளின் பெரும் கூச்சளுக்கிடையே நீலத்தையே வெப்பமான வண்ணமாக்கிய (BLUE IS THE WARMEST COLOUR – நாயகி) அந்த அரூப அழகி ADELE யின் அறிமுகம். அது பழைய நினைவுகளுடன் நம் யூகங்களை மேலும் பலமடங்காக்குகிறது. அவ்வாகனம் ஒரு சிறைச்சாலைக்குள் விரைகிறது. அதே வழக்கமான சம்பிரதாயங்களுடன் சோதனைக்கு பின் சீருடை வழங்கபடுவது. தனது அறையில் சககைதிகளுடனான ஆரம்பகட்ட மோதல் பின்வரும் காட்சிகளில் அவர்களுடனான நட்பு. அந்த சிறையில் உள்ள மோசமான கைதிகளுடனான கைகலப்பு. இதில் பெரும்பான்மையான எந்த யூகங்களும் இல்லாமல் முழுகதையும் சிறைச்சாலை உள்ளேயே.


அச்சிறைசாலையின் கடைசி அறைக்கு அழைத்து செல்லப்படுகிறாள். அவளுடனே பயணிக்கும் நமக்கும் அவ்வளாகத்தின் யதார்த்த சூழல் அனைத்து இடங்களையும் நமக்கும் பரிச்சயமாக்குகிறது. அவ்வளாகம் மற்ற சிறைச்சாலையை போன்றே வடிவங்களை கொண்டிருப்பினும், அங்குள்ள யதார்த்த சூழல் இப்படத்தை மற்ற வகையிலும் தரமான நல்ல படைப்பாக்க விளைகிறது. நீண்ட இந்த துவக்க காட்சியே நமது யூகங்களை தாண்டிய வேறொரு எதிர்பார்ப்பு இக்கதையின் மேல் ஏற்பட முதல் புள்ளி இடுகிறது. இப்படியான துவக்க காட்சியிலேயே இதன் இயக்குனர் யார் என்ற கேள்விகள் நம்முன் எழவைத்ததும் அவரின் வெற்றியே.


அவர் MR. NOBODY படத்தின் இயக்குனர் PIERRE GOFEAU என்றதும். நம் யூகங்களை வேறொரு ரசனைக்கு நம்மை அறியாமல் மாறும் இரண்டாம் புள்ளி இது. அவளுக்கு ஒதுக்கப்படும் சமையல் பணியில், எதிர்பாரா நொடியில் அவனை சந்திக்கிறாள். அவன் அச்சிறைசாலையின் முக்கிய அதிகாரி. கைதிகள் ஒவ்வொருவரின் அன்றாட நடவடிக்கைகள் குறித்தி அரசாங்கத்திற்கு தெரிவிக்கும் பணியில் உள்ளவன். அவனிடம் தன் ஒரே உறவான தாயால் அதிக தொலைவின் காரணமாக தன்னை சந்திப்பதில் உள்ள சிரமங்களை கூறி வேறு சிறைக்கு மாற்ற கூறிவருகிறாள். அவனும் அதற்க்கான ஆவணம் செய்வதாக உறுதி அளிக்கிறான்.


இதில் பார்த்ததும் வரும் காதல் கொள்ளும் காட்சிகளில்லை. காமமும் உடனடியாக கசிந்தொலுகும் சூழல் இல்லை. இப்படியான நாயகியையும், சிறைச்சாலை என்ற களத்தையும் கொண்டு வெகு எளிதாக பார்வையாளனை நிறைவடைய செய்திருக்க இயலும். ஆனால் இக்கதைக்காகவும், இவர்களுக்கிடையேயான அந்த ஈர்ப்பை மிக யதார்த்தமாக வெளிக்கொண்டுவர எடுத்து கொண்ட முக்கியத்துவமும். கைதி மற்றும் அதிகாரி என்ற நிலையில் இருந்து எங்கும் விலகாமல், அவர்களின் முதல் கூடல் வரையான உருவாக்கல் தான். தனது யூகங்கள் பொய்த்து போனாலும் இக்கதையின்பால் பார்வையாளன் ஆர்வமேற்ப்பட மிக முக்கிய காரணியாகும்.



துவக்க காட்சி முதல் சிறிது சிறிதாக மாறிவரும் இவர்களின் எண்ண ஓட்டத்தை மிக அழகாக நமக்கு கடத்திய பின்னணி இசையும். துவக்கத்தில் அவனுடன் இணைந்து, பின் அடுத்த காட்சிகளிலே அவனது குடும்பம் குறித்து கோபத்துடன் வினவும் இடங்களில், வீக்கென்ட் குடும்பத்துடன் செலவழிக்க செல்பவனை ஆத்திரத்துடன் அணுகும் இடங்கள் மற்றும் இறுதியில் அவனுடன் விடுதியில் கழிக்கும் பொழுதுகள் என அனைத்து காட்சிகளுக்குமான லைட்டிங்கை இவர்கள் இருவரின் மனநிலைக்கு ஏற்ப அமைக்கபட்டிருக்கும். அவை நம்மையும் வெகு இயல்பாக அவர்களுடன் பயணிக்க செய்யும். இவை அனைத்திற்கும் மேல் நாயகி ADELE முழுக்க இந்த ஒரு பாத்திரத்தின் மாற்றங்களை கொண்டே கதை நகரும் என்ற சூழல் உணர்ந்த அவரின் பங்களிப்பே இக்கதைக்கான முக்கிய புள்ளியாகும்.

http://www.distribfilmsus.com/our-movies/down-by-love-eperdument/

Saturday, August 11, 2018




பார்த்ததில் மிகவும் ரசித்தது: 131.

இந்திய சினிமாவில் பெரும்பான்மை நடிகைகளால என்ன செஞ்சிட முடியும். தன் அழகால ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கலாம். தான் நடிக்கும் கதாபாத்திரத்தின் மூலமா கொஞ்சம் நல்ல பெயர் கூட வாங்கலாம். அடுத்த வருடங்களில் வாய்ப்பு குறையும் நேரத்துல கொஞ்சம் கவர்ச்சி வேடங்களை ஏற்கலாம். பின் நாளாவட்டத்தில் அவங்க பேர் மட்டும் கொஞ்சமா ஞாபகத்துல இருக்க. அவங்கள திரையில பாக்கமுடியாது . இதுதான் பெரும்பான்மை நாயகியரின் நிலமை. இதிலும் தன்னோட அபிமான நடிகைனு எந்த ரசிகனும் ஒரு படத்தை பார்க்க போறதில்ல. தன் விருப்ப நாயகன். இயக்குனர் இல்லனா அந்த படத்தை பற்றிய பாசிடிவ் ரிசல்ட். இதுல ஏதாவது காரணம்தான் இருக்கும். அவன் பாக்கும் படத்தில அவன் விருப்ப நாயகி  இருந்தா ரசிப்பாங்க. அடடா இந்த நல்ல படத்துல நம்ம நாயகி இல்லைன்னு வருந்தமெல்லாம் யாருக்கும் இல்ல. இதுதான் கிட்டத்தட்ட எல்லா நடிகைகளின் நிலை. இப்படி ரொம்ப நல்ல நடிகைகளுக்கும் நிரந்தரமில்லாத இந்ததுறைல 19 வயதில் நடிக்க தொடங்கி, இந்த ஆறு வருடங்களில் 14 படங்கள். அப்படங்களின் TEASER இல்ல, அதோட FIRST LOOK லயே தெரிஞ்சிக்கலாம் இந்த படத்துல அவங்க பண்ற பாத்திரத்த பத்தி. இன்னைக்கு இவர் ஒரு படத்தில் இருக்கறது ஒன்னே போதும் நல்ல சினிமா அபிமானிகளுக்கு. இந்தப்படம் கூட அவரோட திரைபயணத்தில ரொம்ப முக்கியமானதுதான்.


1971 ல நடந்த இந்தியா பாகிஸ்தான் போருக்கு முன்னாடி ரெண்டு வருஷம்தான் இந்த படத்துக்கான கதைக்களம். ஜம்முகாஷ்மீரிலிருந்து தொழில் விஷயமா பாகிஸ்தான் போயிட்டு வரும் நாயகியோட அப்பா. இந்தியா பாகிஸ்தான் மீதான ரகசிய நடவடிக்கை பத்தி அங்க உளவு சொல்லிட்டு இருக்கார். அவரோட தகவல்கள் பெரும்பாலும் உண்மையாவே இருக்க. அவங்க ராணுவத்தில ரொம்ப பெரிய அதிகாரிகளோட பழக்கம் எற்படுது. அதுல உயர் பதவில இருக்கற ஒரு அதிகரியோட இளைய மகனுக்கு தன்னோட பொண்ண நிக்கா பண்ணி வைக்கறார். இந்த கதையே கொஞ்சம் சுவாரசியமாக இருக்கில்ல.  ஆனா பாகிஸ்தானுக்கு உளவு பார்த்துவந்த நாயகியோட அப்பாவே ஒரு டபுள் ஏஜண்ட். அவர் பொண்ண நிக்கா பண்ணிவெக்கறதே அவளும் இந்தியாவுக்காக பாகிஸ்தானுக்கு உளவு பார்க்கறதுக்குதான். இப்ப கதையும் டபுள் சுவாரசியமாகுதா. இப்ப இந்த திர்ல்லிங் கதைகளத்தில நம்மள கடைசிவரைக்கும் எதிர்பார்போடவே வெச்சிக்க அவங்க கதையில சேர்த்த எல்லா சமாச்சாரமும் செமசுவாரசியம்.


தன் திருமணத்திற்கு ஒரு மாசம் மட்டுமே இருக்கும் சூழல்ல சிபிஐ-ன் சிறப்பு பயிற்சிக்கு நாயகி போறார். மேற்சொன்ன சங்கதிகள்தான் படம்னு நினைக்க வேணாம். இக்காட்சிகள் படம் துவங்கிய முதல் 15-2௦ நிமிடங்களுக்குள் வரும் காட்சிகளே. பயிற்சிக்கு போகும் நாயகிக்கு நம்ம நினைக்கற போல COMPUTER HACKING வேலையெல்லாம் கிடையாது. ஏன்னா கதை எழுபதுகளில் நடக்குது. அந்த காலத்திலயே நம் உளவுதுறையில உள்ள சங்கதிகள், சங்கேத வார்த்தை பரிமாற்றங்கள்னு சொல்லப்படும் சமாச்சாரங்கள் பூரா நாயகியோட சேர்த்து நம்மையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துது. அத கொஞ்சம் கொக்கு மாக்கு இருந்தாலும் கடைசி வரை கொண்டு வந்து முடிச்சிருக்காங்க. கல்லூரிக்கு போற ரொம்ப இளகிய மனம் படைச்ச பொண்ணாதான் நாயகி அறிமுகமாறாங்க. அப்பா மாறியே நம்ம தேசத்துக்கு ஏதாவது செய்ய நினைச்சிதான் இந்த நிக்காக்கும் சம்மதிக்கறாங்க. ஆனா அந்த பயிற்சி சமயத்துல தான் பெரிய தப்பு பண்ணிட்டத உணர்றாங்க. பயிற்சில நெறைய விசயங்கள தப்பா செஞ்சி பயிற்சியாளர்கிட்ட மன்னிப்பு கேக்கும்போது சொல்லுவாரு.

“நான் இங்க மன்னிச்சு எதும் ஆகபோறதில்ல. அங்க உன்ன மன்னிக்க யாரும் இருக்க மாட்டாங்க.” நீ பண்ற ஒரே ஒரு சின்ன தப்பு உன் வாழ்க்கை அதோட முடிஞ்சிடும். அதனால கவனமா இருனு சொல்லுவாரு.”

அப்ப நம்மள மாறியே அந்த பொண்ணுக்குள்ளவும் ஒரு பயம் படரும். அத கதையோட எல்லா எடத்துலயும் அந்த பொண்ணோட கண்ல அப்படியே இருக்கும். அவ கணவனோட காதல் காட்சில கூட அந்த குற்ற உணர்வோடவே இருப்பா. இதுல அதிக திர்லிங்கே பாகிஸ்தான்லதான். அவ கணவனை சின்ன வயசில இருந்தே தூக்கி வளர்த்த சீனியர் வேலையாள்தான் அந்த வீட்டில் எல்லாமும். தற்செயலா ஆலியா சொதப்பும் சின்ன சின்ன விசயமெல்லாம் அவனுக்கு இவமேல சந்தேகமாவே இருக்க. ஒரு காட்சில கையும், களவுமா அவன்கிட்ட மாட்ட. அவனை கொல்ல வேண்டிய சூழல். ராணுவத்தின் முக்கிய முடிவு எடுக்கற அதிகாரியோட அந்தரங்க வேலையாள் மர்ம மரணம்.  அந்த அரசாங்கத்தையும், அந்த குடும்பத்தையும் விழிக்க வெச்சிடும்.


ஒவ்வொரு முடிச்சாக விலகி மாட்டிகொள்ளும் சூழல் நெருங்க, நெருங்க அதிலிருந்து எப்படி தப்பிகறா இதுதான் கதை. இதற்கிடைல அவங்களோட ராணுவ தகவல்கள வேற இங்க பாஸ் பண்ணனும். இன்னும் தல போற நேரத்துல அவளுக்கு உதவ அந்த நாட்டில் பஜாரில் ஒரு மளிகைகடைகாரர், ஒரு பூ வியாபாரி, ஒரு ரிக்க்ஷாகாரர் இருப்பாங்க.  ஆனா அவங்கள நேரடியாக மட்டுமேதான் சந்திக்க முடியும். ஆனால் புகுந்த வீட்டிலும் காரணமில்லாமல் வெளியே போக முடியாது. யோசனையும் யார்கிட்டவும் கேக்கவும் முடியாது. அவகிட்ட இருக்கும் உபகரணங்கள வெச்சி வெறும் தகவல்களை சங்கேத வார்த்தைகளா அங்க அனுப்ப மட்டும்தான் முடியும். நம்ம பக்கமிருந்து எந்த தகவலும் அவளுக்கு சொல்ல முடியாது.


இவளுக்கு உதவ இருந்தவங்களும் ஒவ்வொருதரா பாகிஸ்தான் உளவுதுறைல மாடிக்கறாங்க. அந்த நேரத்துலதான் அவங்க கடல் வழியா நம்ம நாட்டுமேல போர் தொடுக்க போறதா உறுதியான தகவலும் இவளுக்கு கிடைக்கும். ஆனா அத சொல்ல எந்த வழியும் இருக்காதுன்னு. படம் முழுசாவே ரொம்ப திர்ல்லிங்காவே போவும். சின்ன சின்ன ரியாஷன்லையே செம்மதையா ஸ்கோர் பண்ற பொண்ணுக்கு இந்த படம் பூரா மொத்த ஷாட்ஸ்யும் தன்னோட கன்ட்ரோல்லயே வெச்சி அதகளம் பண்ணிடுச்சி. அவகூடவே நம்மளையும் பயந்து, லேசா சிரிச்சி, அழவெச்சினு. இப்பவும் நான் கதையா சொன்னது ஒரு பத்து சதவீதம்தான். .

காதலால கடமைல வரும் தடுமாற்றங்கள நமக்கு அருமையா சின்ன சின்ன முகபாவங்கள்ளயே சொல்லிருக்கு. எல்லாத்தையும் விட ரொம்ப முக்கிய விஷயம் பாகிஸ்தானி பூரா இந்த படத்த ரொம்ப பெருமையா பாக்கலாம். அவங்கள அவ்ளோ கௌரவமா காட்டி இருக்காங்க.


“ஒரு சின்ன பொண்ணுகிட்ட இப்படி ஒரு அரசாங்கமே ஏமாந்துடுச்சேனு ஆலியா மாமனார் கோவப்பட ஆரமிக்கற நொடியிலேயே, ஆலியா கணவன் சொல்லுவான். “ அவள தப்பா பேசாதிங்கப்பா அவளும் இதெல்லாம் அவ நாட்டுக்காகதான செஞ்சானு.” கூடுதல் சுவாரசியம் இது உண்மை கதையாம். உண்மையா இப்படி போன ஒரு பொண்ணு கொடுத்த தகவலாலதான் அந்த போர்ல நம்மால ரொம்ப சுலபமா வெற்றி அடைய முடிஞ்சிதாம். TALVAAR, DRISHYAM பண்ண MEGNA GULZAR தான் இந்த படம் பண்ணிருக்காங்க. அங்க இருந்தும் இன்னும் ஒருபடி இப்ப மேலதான் வந்திருக்காங்க. 

TRAILER LINK:

https://www.youtube.com/watch?v=YjMSttRJrhA

Search This Blog