Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Saturday, January 27, 2018




பார்த்ததில் மிகவும் ரசித்தது: 123.


குடும்பம், பிள்ளைகள், ஏன் சொந்தமென்று கூட யாருமில்லாமல் தனிமையில் வசிக்கிறிர்கள். பேருக்கு உடன் பணிபுரியும் ஒரு தோழி. இப்படியான சூழலில் பணிபுரியுமிடத்தில் ஒரு பிராணி மிகவும் துன்புறுத்தபடுவதை தினமும் காண்கிறிர்கள். நிராதரவான உங்களுக்கு அதன் மீதும். தன்னையும் பாசத்துடன் அணுகும் ஒரே ஜீவனான உங்கள் மீது அதற்கும் பெரும் ஈர்ப்பு ஏற்படுகிறது. யாருக்கும் தெரியாமல் அதை உங்கள் வசிப்பிடத்திற்கும் கொண்டுவந்து விடுகிறிர்கள். இப்பொழுது நீங்கள் இருப்பது 195௦களின் காலக்கட்டம் எனவும். பணிபுரிவது அமெரிக்காவில் உலகின் மிகப்பெரிய ரகசிய அறிவியல் ஆய்வுகூடம் எனவும். நீங்கள் எடுத்து வந்த பிராணி மனித உருவில் கடலில் கண்டெடுத்த வேற்றுகிரகவாசியா என இன்னும் உறுதி செய்யபடாத ஜீவன் எனவும் கொண்டால் இதுவே THE SHAPE OF WATER திரைப்படம்.


STEVEN SPILBERG ன் E.T படத்தின் ஞாபகம் இப்பொழுது உங்களுக்கும் வருவது சரியே. ஆனால் மணிசார் இதன் சாயலின்றி அஞ்சலி எடுத்தது போலவே இப்படமும் ஒரு அசாதாரண முயற்சி. இவ்வாறாக பெரும்பாலும் தனிமையில் மட்டுமே வாழ்பவர்கள் எதிலும் தன்னை முன்னிலை படுத்திகொள்வதோ தானே பழகியவர்களிடம் கூட வழிய சென்று உரையாடுவதோ செய்ய மாட்டார்கள் . அவர்களின் முகம் பெரும்பாலும் ஒருவித இருக்கத்துடனே காணப்படும். அவர்களின் நடையில் ஒரு கம்பீரம் காணப்பட்டாலும் ஒருவித சோர்வான மனநிலையிலே காணப்படுவர். அதிலும் பேசயியலாத ஊமைபாத்திரம் வேறு. இவ்வாறாக ஒரு பாத்திரத்தை முன்னிலைப்படுத்தும் கதைகளில் வெகு நுணுக்கமாக அவர்களின் அனைத்து குணாதிசியங்களும் ஏதோ சிலகாட்சிகளுக்கு மட்டுமின்றி முழு படத்திலும் இயல்பிலே இப்பாத்திரத்தின் குணாதிசயம் இதுதானோ என நினைக்கும்படியான ஒரு வாழ்கையே வாழ்ந்துள்ளார் SALLY HAWKINS.


பெரிதாக எந்தவிதமான வசீகரமும் இல்லாத இவ்வாறான பெண்ணை முழு கதையும் அவர்களை சுற்றி மட்டுமே நடக்கும் கதையில் தேர்வு செய்ததன் காரணமே பாதிபடத்தின் பின்னேதான் பார்வையாளனால் உணரயியலும். அதுவரை அனைத்தும் பொருந்தி போகிற படத்தில் சற்று கூடுதல் அழகான பெண்ணை தேர்வு செய்திருக்கலாமோ என்ற சிறு குறைபாட்டையும் அப்பாத்திரத்தை கொண்டே இயக்குனர் சமன் செய்திருப்பார். தங்கள் ஆய்வுகூடத்தில் சோதனை என்ற பெயரில் அந்த உயிரினத்தின் மீது நடக்கும் கொடுமையிலிருந்து அதை காப்பாற்ற முடிவெடுக்கும் காட்சி. அதை தன் குடியிருப்பின் அருகில் வசிக்கும் எப்போதேனும் அவள் தனது எண்ண ஓட்டங்களை பகிர்ந்துகொள்ளும் ஒரு வயதான ஓவியருடன் விவாதிக்கும் காட்சி. அதில் இப்பெண்ணிற் க்குள்ளும் இவ்வளவு உறுதியா என ஆச்சர்யபடுத்துபவர். தன் இருப்பிடத்திற்கே அதை கொண்டு வந்தபின் பேசயியலாத தான் சைகையின் மூலம் தன்னை பற்றி விளக்கும் காட்சியில் அவளுக்குள் உள்ள மென்மனதை தன் உடல் அசைவுகளின் மூலம் நமக்கும் உணரசெய்வார். இதற்க்கு பின்னான அந்த உயிரினத்தின் பால் காதலுறும் காட்சியில் அந்த கண்களும் இதழ்களும் நம்மையும் அவள்பால் ஈர்க்கசெய்யும். இதுதான் இவள் என்று நாம் நினைத்திருந்த அனைத்து யூகங்களையும் பொய்யாக்கி நம்மையும் அவளை நேசிக்க செய்யும் பேரனுபவம் நிகழும்.


கதை 195௦களின் காலக்கட்டத்தில் நடைபெறுவது போன்று அமைக்கப்பட்டது இக்கதைக்கான பெரும் பலம். எந்த கதையும் கடந்த காலத்தையோ, வருங்காலத்தையோ களமாக தீர்மானித்தது சரியா என  முடிவுசெய்வது அவர்கள் தேர்ந்தெடுத்த களத்தில் அவர்களின் சரியான உருவாக்கலே அதாவது (கதை 195௦களின் காலக்கட்டத்தில் நடைபெறுவது போன்று அமைக்கப்பட்டது இக்கதைக்கான பெரும் பலம்.) என்ற பார்வையாளனின் கருத்தே தீர்மானிக்கும். அக்காலகட்டத்திற்கு பொருந்தாத இல்லாத விஷயங்கள் ஏதேனும் ஒரு காட்சியில் தென்ப்பட்டால் அதுவே அந்த மொத்த கதையையும் சிதைத்திடும். PACIFIC RIM, HELL BOY இயக்குனரிடமிருந்து இப்படியான படைப்பு பெரும் ஆச்சர்யம். அதிலும் அக்காலகட்டத்தில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா அவர்களுக்கிடையேயான அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளை அதன் சூத்திரங்களை தாங்கள் அறிந்துகொள்ளவோ அல்லது அதை அழிக்கவோ மேற்கொள்ளும் நடவடிக்கைகளை இக்கதைக்கு எந்தஅளவில் மட்டுமே தேவையோ அதை மட்டுமே கொடுத்த இத்திரைக்கதைக்குள் சேர்த்த அதிபுத்திசாலிதனம் கனகட்சிதம்.



பின்னணி இசை மட்டுமின்றி இவர்களிடையேயான ஈர்ப்பை உணர்த்தும் காட்சிகளில் ஒலிக்கும் பாடல்களும் அதியர்புதம். அடுத்து குறிப்பிட்டு சொல்லவேண்டியது படத்தின் CG மற்றும் CINEMATOGRAPHY. சிறந்த இயக்குனர் மற்றும் நடிகை உட்பட நான்கு GOLDEN GLOBE விருதை வென்றதுடன். இவ்வருட ஆஸ்கரில் 13 பிரிவுகளில் பரிந்துரைக்கபட்டுள்ளது இப்படம்.

இப்படத்திற்கான ட்ரைலர் லிங்க்:

https://www.youtube.com/watch?v=RQw9P8Fpyc4

Tuesday, January 16, 2018


பார்த்ததில் மிகவும் ரசித்தது: 122.

சினிமாவில் மற்ற துறையினரை காட்டிலும் நடிகர்கள் சினிமா தயாரிப்பில் ஈடுபடுவது சமீபமாக  அதிகரித்துள்ளது. தங்கள் சம்பளத்திற்கு பதில் படத்தின் வசூலில் வரும் லாப சதவிகிததிற்கே தயாரிப்பு நிறுவனம் நடத்தலாம். அல்லது தாங்கள் நடிக்க தேர்ந்தெடுக்கும் கதைகள் நினைத்த படி காட்சிகள் வெளிவர ஏற்படும் காலதாமதத்திற்கு தாங்களே தயாரிப்பாளர்களாகவும் இருப்பதே சரியெனவும் நினைத்திருக்கலாம். ஆனால் தாங்கள் பங்குபெறாத படங்களையும் தயாரிக்கவோ அல்லது வெளியிடவோ முன்வருவதற்கு இரண்டு பிரதான காரணங்களே இருக்க இயலும். ஒன்று அக்கதையின் மீது கொண்ட நம்பிக்கை. இரண்டு இவர்கள் ஏற்கனவே பணிபுரிந்த படங்களில் இணை இயக்குனராக அந்த நபர்களின் உருவாக்களின் மீது கொண்ட நம்பிக்கை. காரணங்கள் எதுவாவாக இருப்பினும் இது போன்ற சிறு முதலீட்டு படங்கள் வெளிவருவது சினிமாவிற்கு மிகப்பெரும் பலம். இப்படம் ஒரு பெரும் நடிகனின் வெளியீடு என்பதே இப்படத்தை பார்ப்பதற்கு போதுமான காரணமாக இருந்தது.


தமிழில் பாலசந்தர் முதல் கமல்ஹாசன் வரை பெரும் இயக்குனர்கள் ஏற்கனவே முயற்சித்த திரைக்கதைதான். ஒரு சம்பவம், இரு பாத்திரங்கள் அந்த சம்பவத்தை இருவேறு நிகழ்வுகளாக கூறும் யுக்தி. இதில் இரு கொலை அதில் இரண்டாவது கொலையை இவர்தான் செய்ததாக இரு நபர்களும் ஒரே சம்பவத்தை பற்றி இரு வேறு நிகழ்வுகளாக காவல்துறை வசம் விளக்குவது. அப்படியானால் முதல் கொலை?


தன் மனைவியை கொன்றதாக காவல்துறை ஒரு நபரை விரட்டுகிறது. அவன் ஓடிஒளியும் வீட்டில் உள்ள பெண்ணின் கணவர் இறந்துவிடுகிறார். அந்த கொலையை அப்பெண் இவன்தான் செய்ததாக கூற. அவனோ தான் அங்கு செல்லும் முன்னே அப்பெண் தன்கணவனை கொன்றதாகவும் மேலும் தன் மனைவியையும் தான் கொலை செய்யவில்லை எனவும் விளக்கம் அளிக்கிறார். அப்படியானால் அவரின் உடற்கூறு ஆய்வில் அவர் இறந்த நேரம் தெரிந்துவிடுமே. இவ்வாறு பிரதானமாக நமக்கு ஏற்படும் பெரும்பாலான கேள்விகளுக்கு திரைக்கதை மூலம் நேர்மையான விளக்கமும் கொடுத்துள்ளனர்.

 
மேலும் ஒரே சம்பவத்தை இருவர் வெவ்வேறு நிகழ்வுகளாக விளக்க முற்படும் காட்சிகளில் வெறும் இரு பாத்திரங்கள் மட்டுமே பங்குபெறுவதில் பார்வையாளர்களுக்கு ஒருவித சலிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம். ஆனால் துளியும் சலிப்பெற்படுத்தாமல் இறுதிவரை பெரும் எதிர்பார்ப்புடன் கொண்டு செல்லும் அதிவேக திரைக்கதை. இது போன்ற கதைகளில் CONTINUTY மிகமுக்கியம். உதாரணமாக முதல் கைகலப்பில் ஏதேனும் பொருள் சேதாரமடைந்தால். மற்ற கதைகளை போல் அடுத்த காட்சிகளில் அப்பொருட்கள் இல்லாமலோ அல்லது வேறு மாற்று பொருளை அதற்க்கு பதில் வைக்கஇயலாது.


காவல்துறையால் தேடப்படும் நபர் வலுக்கட்டாயமாக நுழைந்துள்ள வீட்டில் உள்ள பெண் மற்றும் குற்றவாளியாக கருதப்படும் நபர் என இருவர் மட்டுமே முழு கதையிலும் உள்ள நிலையில் நாமே தொடர்ச்சியற்ற காட்சிகளுக்கு சமாதான யூகங்கள் செய்துகொள்ள இயலாது. “அந்த பொண்ணே சுத்தம் பண்ணிருப்பா”. அவனே சட்டை கிழிஞ்சதால வேற சட்டை மாத்தியிருப்பானு”. என்ன காட்சியோ அதை முழுதாக காட்டவேண்டிய கதை. அதில் துளியும் பார்வையாளனை ஓரவஞ்சனை செய்யாத திரைக்கதை. முழு பாராட்டையும் இயக்குனரை மீறி எடிட்டர் மற்றும் கொலைகாரனிடம் வீட்டில் தனியாக மாட்டிக்கொள்ளும் பெண் பாத்திரத்தில் நடித்த SONAKSHI SINHAவும் தான் பெறுகிறார்கள்.


ஒரு சாதாரண பார்வையாளன் பார்வையில் ஒரு சுவாரசிய படத்தின் பின்னால் ஒளிந்துள்ள பெரும் உழைப்பிற்கு சொந்தகாரர்களை பற்றிய கவலை ஏதுமில்லை. அவர்கள் முழு படமும் திரைக்கதையில் எந்தவித எடஞ்சலும், சறுக்கல்களும் இல்லாமல் ஓடி முடியும் வேலையில் மிகசாதாரணமாக இந்த சூவாரசிய கதைக்கு காரணமாக தோன்றுவரை பற்றி மட்டுமே சிந்திக்கவோ, அடுத்தவர்களிடம் இப்படத்தை பற்றி பகிர்கையில் கூறுவர். இப்படத்தை பற்றி மற்றவரிடம் பகிர்ந்தவர்களில் பெரும்பாலோர் நிச்சயம் இந்த இருவரை பற்றியுமே பேசியிருப்பர். அந்த உருண்ட கண்களில் கலவரத்தை வெகு இயல்பாக காட்ட முடிவதால்கூட இருக்கலாம். இவருக்கு பின்னே நடிகர்களில் பார்வையாளன் பெரும்பாலோர் கண்கள் மொய்ப்பது விசாரணை அதிகாரியாக AKSHAY KHANNA மீதே.


இது போன்ற கதைகளில் வரும் அதிகாரிகளை அதிபுத்திசாலிகளாகவும் திறமையாளர்களாகவுமே பார்த்து பழகிய நமக்கு. ஒரு சராசரி அதிகாரியாக நம்மில் ஒருவர் போல் காட்சியளிக்கும் இவர் நம்மை  ஆட்கொண்டதில் பெரிய வியப்பேதும் இல்லை. கொலை நடந்த அபார்மெண்டின் செக்யூரிட்டிகளை காவல்நிலையத்தில் விசாரிக்கையில் கான்ஸ்டபிள் ஒருவர் மழையில் சேறு அப்பிய சூவுடன் உள்ளே வந்தவர்களை சத்தமிடுவார். அந்த நிகழ்வை நினைவு கூர்ந்தே குற்றவாளியை AKSHAYKHANNA இறுதியில் கண்டுகொள்வார். அதே போன்று வெகு சாதாரணமாக இந்த வழக்கை பற்றி தன் மனைவி கூறும் தனது அபிப்பிராயத்தின் மூலமே இறுதி முடிவெடுப்பார். இப்படியான கதைகளில் நிகழ்ந்த அந்த சம்பவத்தை சுற்றி மட்டுமே பிரதான கதை நிகழும் சூழலில் ஓரத்தில் அதிகாரியாக வளம்வரும் இவரின் பாத்திர வடிவமைப்பிற்க்கு இவர்களின் உழைப்பை கொண்டே நம்மால் யூகிக்கஇயலும் பிரதான சம்பவத்திற்கான திரைக்கதைக்கு இவர்கள் உழைப்பை. DIL CHATHA HAI, BORDER போன்ற படங்களில் கும்பலில் ஒருவராக நம்மை சற்று ஈர்த்திருந்தாலும். இப்பாத்திரம் பொருந்தியளவு இதற்கு முன் இவர் ஈர்த்ததில்லை.



இதே போன்ற கதைகளை பெரும்பாலான மொழிகளில் நாம் பார்த்திருந்தாலும். இத்திரைக்கதையில் ஒரு கூடுதல் இணைப்பை சிறிதாக சேர்த்தே பெரும் சுவாரசியத்தை கொடுத்துள்ளார் திரைக்கதையாளர் மற்றும் அறிமுக இயக்குனர் ABAYCHOPRA.

https://www.youtube.com/watch?v=mvfvoCdPrII

Search This Blog